December 5, 2025, 7:45 PM
26.7 C
Chennai

அதிரடி காட்டிய நெல்லை ஆட்சியர்; ஆர்ப்பாட்டம் நடத்த விஏஓ.,க்கள் முடிவு!

Tirunelveli Collector Shilpa - 2025
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ்

திருநெல்வேலி: வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூகத் தளங்களில் நேற்று ஒரு ஆடியோவும் தகவலும் வெளியானது. அதனை வைத்து, நெல்லை மாவட்ட ஆட்சியரை அனைவரும் பாராட்டினர். இப்படி ஒரு ஆட்சியர் இருந்தால் தான் சரியாக வரும் என்று பாராட்டு மழைகள்தான்!

மத்திய அரசின் சார்பில் கிசான் சம்மான் யோஜனா – விவசாயிகள் நலவாழ்வுத் திட்டத்தின் கீழ் சிறு, குறு விவசாயிகளுக்கு ரூ 6 ஆயிரம் வழங்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பை அண்மையில் மத்திய மோடி அரசு அறிவித்தது.

இந்நிலையில் இந்தத் திட்டத்தின் கீழ் பயனாளிகளை அறிய, இதற்கான கணக்கெடுப்பு நடக்கிறது. இதற்கு கிராம நிர்வாக அதிகாரிகள் (விஏஓ.,க்கள்) கையெழுத்து, அவர்களின் பரிந்துரை தேவை.

இந்நிலையில், சில இடங்களில் கிராம நிர்வாக அதிகாரிகள் பணியில் இல்லாததால் சம்பந்தப்பட்ட விவசாயிகள் மனுக்களை மனு நீதி நாளிலும் நேரடியாகவும் ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து, ஆட்சியரிடமே நேரடியாக அளிக்கின்றனர்.

இது போல், வயது முதிர்ந்த ஒருவர் நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷை சந்தித்து மனு அளித்தார். அப்போது அவர், தாம் விஏஓ., பின்னர் ஆர்.ஐ., தொடர்ந்து தாலுகா அலுவலகம் என்று அலைந்ததாகவும், 80 வயது நெருங்கிய தமக்கு இது மிகவும் கடினமாக இருப்பதாகவும் கூறியிருந்தார்.

எனவே ஆட்சியர் ஷில்பா பிரபாகர், மிகவும் கடினமான மொழியில், உத்தரவு ஒன்றை பிறப்பிப்பது போல், ஒரு ஒலிப்பதிவை அனுப்பினார். அது, அனைத்து விஏஓ.,க்களுக்கும், தொடர்புடைய அலுவலகங்களுக்கும் அனுப்பி வைக்கப் பட்டது. அது அப்படியே இணையத்திலும் பரவியது.

அந்த ஒலிப்பதிவில், நான் அடிக்கடி இன்ஸ்பெக்‌ஷன் என்று வருவேன். நான் வரும்போது, பணியிடத்தில் விஏஓ., இல்லை என்றால், அவர் உடனே சஸ்பெண்ட் செய்யப்படுவார் என மிரட்டல் தொனியில் கூறியிருந்தார். இதனை பொதுமக்கள் பெரிதும் வரவேற்றனர். சமூக வலைத்தளங்களிலும் இது வைரலானது.

ஆட்சியரின் ஆடியோ… பதிவு:

இந்நிலையில் இந்த ஒலிப்பதிவுக் கோப்பு கிராம நிர்வாக அதிகாரிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு பதிலளிக்கும் வகையில் ஒரு பெண் விஏஓ., பதில் ஒலிப்பதிவை பரவவிட்டுள்ளார். அதில், ஆட்சியரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்ததுடன், தாங்கள் இரவு வரையிலும் மனுக்கள் வாங்க வேண்டும் என்கிறார் ஆட்சியர், இப்படி, தனியார் நிறுவனத்தை விட கசக்கிப் பிழிகிறார்கள் என்று வேதனையுடன் கூறியிருக்கிறார்.

இந்நிலையில், வியாழக்கிழமை இன்று பிற்பகல் 3 மணிக்கு நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கிராம நிர்வாக அதிகாரிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்ய முடிவு செய்துள்ளனர். இதனால் விஏஓ.,க்கள் மத்தியிலும் ஆட்சியரகத்திலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories