அன்புமணியிடம் ’இந்த’ விளக்கத்தைப் பெற திங்கள் வரை காத்திருக்கணும்!

anbu mani 1 - 2026

தமிழகத்தில் இப்போது பலருக்கும் இருக்கும் கேள்வி, அதிமுக., பாமக., கூட்டணி எப்படி ஏற்பட்டது என்பதுதான்!

ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்த போது, அன்புச் சகோதரி என்று சொல்லி கூட்டணி பேரத்தை நன்றாக மேற்கொண்டார் பாமக., நிறுவுனர் ராமதாஸ். அது போல், எது வெற்றி தரும் என்பதை உணர்ந்து அவ்வப்போது ராமதாஸ் கூட்டணி மாறுவதும் உண்டு. சில முறை திமுக.,வுடன் கூட்டணி வைத்தார்.

இருப்பினும், அண்மைக் காலமாக திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி கிடையாது என்று சொல்லி வந்தார். வைக்கவும் மாட்டேன் என்று உறுதி கூறி வந்தார். தமிழகத்தில் வடக்குப் பகுதி, மேற்குப் பகுதியில் சில இடங்களில் மட்டுமே பாமக.,வுக்கு செல்வாக்கு உள்ளது. வன்னியர் சங்கமாகத் தொடங்கி பாமக.,வாக உரு மாறியதால், அது சாதிக் கட்சி என்ற அடையாளத்துடனேயே இன்று வரை பார்க்கப் படுகிறது.

இந்தச் சூழலில் திராவிடக் கட்சிகளின் கூட்டணி இன்றி, அல்லது பொதுவான அடையாளம் இன்றி பாமக., நிறுவுனர் ராமதாஸ் விரும்புவது போல், சட்டசபைத் தேர்தலில் பெரும்பான்மை பெற்று தமிழக ஆட்சிக் கட்டிலில் அமர வேண்டும் என்ற அவர் கனவு சாத்தியமில்லாதது என்பது உலகறிந்த உண்மை.

இந்நிலையில் ஜெயலலிதா, கருணாநிதி என்ற இரு பெரும் அரசியல் சாணக்கியத்தனங்கள் மறைந்து போனதால், இடைவெளியினை இட்டு நிரப்ப நம்மால் முடியும் என்று கூறி, ஆளும் அதிமுக.,வை கடுமையாக எதிர்த்து வந்தார். இதனால் திமுக.,வினர் சற்றே மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால், நாடாளுமன்றத் தேர்தலில், திமுக.,வுக்கும் டிமிக்கி கொடுத்துவிட்டு, மீண்டும் அதிமுக.,பக்கமே சாய்ந்ததில், கடும் கோபத்திலும் ஆத்திரத்திலும் இருக்கிறார்கள் திமுக.,வினர்.

இதனால் நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக பாமக.,வை விதவிதமாக வசைபாடி வருகின்றனர். சமூகத் தளங்களில் இந்தத் தாக்கம் அதிகம் என்றாலும், எதார்த்த நிலைமை வேறுதான்!

இந்நிலையில், கூட்டணி குறித்து விளக்க அறிக்கையை பாமக., கொடுத்திருந்த போதும், இன்னமும் சர்ச்சைகள் நீடிப்பதால், அனைவருக்கும் உள்ள சந்தேகங்களுக்கு விடை கூறுகின்றேன் என்று கூறியுள்ளார் அன்புமணி ராமதாஸ்.

அதிமுக கூட்டணியில் இணைந்த பிறகு நேற்று சேலம் விமான நிலையம் வந்த அன்புமணி ராமதாசிடம் பத்திரிக்கையாளர்கள் கேள்வி கேட்க முயன்றனர். அதற்கு அவர் ”நீங்கள் என்ன கேட்க வறீங்கன்னு எனக்கு நல்லாவே தெரியும். அ.தி.மு.க-வோடு கூட்டணி சேர்ந்தது முதற்கொண்டு அனைத்துக்கும் வரும் திங்கள்கிழமை காலை 10 மணிக்கு சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்து விளக்கமாகப் பேசுகிறேன்” என்று கூறிவிட்டுச் சென்றார்.

எனவே அன்புமணியின் இந்த விளக்கத்தைக் கேட்க, தமிழகம் திங்கள் கிழமை வரை காத்திருக்க வேண்டும்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

Entertainment News

Popular Categories