அன்புமணியிடம் ’இந்த’ விளக்கத்தைப் பெற திங்கள் வரை காத்திருக்கணும்!

anbu mani 1 - 2026

தமிழகத்தில் இப்போது பலருக்கும் இருக்கும் கேள்வி, அதிமுக., பாமக., கூட்டணி எப்படி ஏற்பட்டது என்பதுதான்!

ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்த போது, அன்புச் சகோதரி என்று சொல்லி கூட்டணி பேரத்தை நன்றாக மேற்கொண்டார் பாமக., நிறுவுனர் ராமதாஸ். அது போல், எது வெற்றி தரும் என்பதை உணர்ந்து அவ்வப்போது ராமதாஸ் கூட்டணி மாறுவதும் உண்டு. சில முறை திமுக.,வுடன் கூட்டணி வைத்தார்.

இருப்பினும், அண்மைக் காலமாக திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி கிடையாது என்று சொல்லி வந்தார். வைக்கவும் மாட்டேன் என்று உறுதி கூறி வந்தார். தமிழகத்தில் வடக்குப் பகுதி, மேற்குப் பகுதியில் சில இடங்களில் மட்டுமே பாமக.,வுக்கு செல்வாக்கு உள்ளது. வன்னியர் சங்கமாகத் தொடங்கி பாமக.,வாக உரு மாறியதால், அது சாதிக் கட்சி என்ற அடையாளத்துடனேயே இன்று வரை பார்க்கப் படுகிறது.

இந்தச் சூழலில் திராவிடக் கட்சிகளின் கூட்டணி இன்றி, அல்லது பொதுவான அடையாளம் இன்றி பாமக., நிறுவுனர் ராமதாஸ் விரும்புவது போல், சட்டசபைத் தேர்தலில் பெரும்பான்மை பெற்று தமிழக ஆட்சிக் கட்டிலில் அமர வேண்டும் என்ற அவர் கனவு சாத்தியமில்லாதது என்பது உலகறிந்த உண்மை.

இந்நிலையில் ஜெயலலிதா, கருணாநிதி என்ற இரு பெரும் அரசியல் சாணக்கியத்தனங்கள் மறைந்து போனதால், இடைவெளியினை இட்டு நிரப்ப நம்மால் முடியும் என்று கூறி, ஆளும் அதிமுக.,வை கடுமையாக எதிர்த்து வந்தார். இதனால் திமுக.,வினர் சற்றே மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால், நாடாளுமன்றத் தேர்தலில், திமுக.,வுக்கும் டிமிக்கி கொடுத்துவிட்டு, மீண்டும் அதிமுக.,பக்கமே சாய்ந்ததில், கடும் கோபத்திலும் ஆத்திரத்திலும் இருக்கிறார்கள் திமுக.,வினர்.

இதனால் நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக பாமக.,வை விதவிதமாக வசைபாடி வருகின்றனர். சமூகத் தளங்களில் இந்தத் தாக்கம் அதிகம் என்றாலும், எதார்த்த நிலைமை வேறுதான்!

இந்நிலையில், கூட்டணி குறித்து விளக்க அறிக்கையை பாமக., கொடுத்திருந்த போதும், இன்னமும் சர்ச்சைகள் நீடிப்பதால், அனைவருக்கும் உள்ள சந்தேகங்களுக்கு விடை கூறுகின்றேன் என்று கூறியுள்ளார் அன்புமணி ராமதாஸ்.

அதிமுக கூட்டணியில் இணைந்த பிறகு நேற்று சேலம் விமான நிலையம் வந்த அன்புமணி ராமதாசிடம் பத்திரிக்கையாளர்கள் கேள்வி கேட்க முயன்றனர். அதற்கு அவர் ”நீங்கள் என்ன கேட்க வறீங்கன்னு எனக்கு நல்லாவே தெரியும். அ.தி.மு.க-வோடு கூட்டணி சேர்ந்தது முதற்கொண்டு அனைத்துக்கும் வரும் திங்கள்கிழமை காலை 10 மணிக்கு சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்து விளக்கமாகப் பேசுகிறேன்” என்று கூறிவிட்டுச் சென்றார்.

எனவே அன்புமணியின் இந்த விளக்கத்தைக் கேட்க, தமிழகம் திங்கள் கிழமை வரை காத்திருக்க வேண்டும்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories