spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉள்ளூர் செய்திகள்இலங்கை கடற்படையால் பாம்பன் மீனவர்கள் 5 பேர் கைது!

இலங்கை கடற்படையால் பாம்பன் மீனவர்கள் 5 பேர் கைது!

- Advertisement -

fishermen

தமிழக மீனவர்கள் 5 பேரை இன்று காலை சிறைபிடித்தது இலங்கை கடற்படை. எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியைச் சேர்ந்த 5 மீனவர்கள் கைது செய்யப் பட்டுள்ளனர்.

பாம்பனைச் சேர்ந்த 5 மீனவர்கள் கைதாகியுள்ளனர். ஒரு விசைபடகு பறிமுதல் செய்யப் பட்டிருக்கிறது. இரண்டு நாட்களில் மட்டும் 18 மீனவர்கள் கைது செய்யப் பட்டுள்ளதால், தமிழக மீனவர்கள் மத்தியில் கலக்கம் ஏற்பட்டுள்ளது.

பாம்பனில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களில் கொலம்பஸ் என்ற மீனவருக்கு சொந்தமான படகில் 5 மீனவர்களை தலைமன்னார் அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு ரோந்து வந்த இலங்கைக் கடற்படையினர், அவர்களை எல்லை தாண்டியதாகக் கூறி 5 மீனவர்களைக் கைது செய்ததுடன், ஒரு விசைபடகையும் பறிமுதல் செய்து கொண்டு சென்றனர்.

மன்னாரில் உள்ள இலங்கை கடற்படை முகாமில் வைத்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று மண்டபம், புதுக்கோட்டை பகுதியை சேர்ந்த 13மீனவர்கள் கைது செய்துள்ள நிலையில், தற்போது 5 மீனவர்களை கைது செய்துள்ளது இலங்கை கடற்படை என்பது குறிப்பிடத் தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe