ஓக்ஹி புயலால் திசைமாறி சென்ற தமிழக மீனவர்கள் உட்பட 175 பேர் லட்சத்தீவில் பாதுகாப்பாக கரை சேர்ந்தனர்.
இதனிடையே 66 கேரள படகுகள் மற்றும் 2 தமிழக படகுகளுடன், 952 மீனவர்கள் மகாராஷ்டிராவில் பத்திரமாக மீட்கப் பட்டுள்ளதாக முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் தகவல் தெரிவித்தார்.
மீனவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதோடு, பருவநிலை சரியானதும் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று அவர் கூறினார்.