குழந்தைத் திருமணத்திலிருந்து தன்னைக் காத்துக் கொண்ட சிறுமி

நேற்று வெள்ளிக்கிழமை ஹைதராபாத் மல்லாப்பூரைச் சேர்ந்த பதினைந்து வயது டீன் ஏஜ் பெண் குழந்தைத் திருமணத்திலிருந்து ‘நாச்சாரம்’ பகுதி காவல் துறை அதிகாரிகளால் மீட்கப்பட்டாள்.

மல்லாபூர் அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் அப்பெண் வெள்ளிக் கிழமை இறுதித் தேர்வு எழுத வேண்டிய நிலையில் திருமண ஏற்பாட்டால் பள்ளிக்குச் செல்ல விடாமல் தடுக்கப்பட்டாள்.
திருமண முகூர்த்தம் காலை பதினோரு மனி அளவில் நடக்க இருக்கையில் காலை ஒன்பது மணிக்கு சைல்ட் ஹெல்ப் லைன் 109 ஐத் தொடர்பு கொண்டு தன் திருமணத்தை நிறுத்த வேண்டினாள்.

சைல்ட் வெல்பேர் அதாரிட்டி அதிகாரிகளும் ‘ஷி’ டீம் மெம்பர்களும் அழைப்பு வந்த ஒரு மணி நேரத்திற்குள் திருமண மண்டபத்தை அடைந்து அந்தப் பெண்ணை மீட்டனர்.

நன்கு படிக்கும் பிரகாசமான மாணவியான அப்பெண்ணின் விருப்பத்திற்கெதிராக 21 வயது உறவினர் பையனுக்குத் திருமணம் நிச்சயித்திருந்தனர் பெற்றோர். மணமகன் யாதகிரிகுட்டாவில் தனியார் நிறுவனத்தில் டிரைவராகப் பணிபுரிகிறான்.

“திருமணம் நாச்சாரத்திலுள்ள கே.எல்.ரெட்டி. நகர கம்யூனிடி ஹாலில் நடக்க இருந்தது. மணப்பெண்ணின் சமயோசித புத்தியால் குழந்தைத் திருமண சட்டத்தின் கீழ் திருமணத்தை நிறுத்தி பெண்ணை மீட்டு பெற்றோருக்கு ஆலோசனை வழங்கி அனுப்பி வைத்தோம்” என்று குழந்தைகள் நல அதிகாரி தெரிவித்தார்.

ALSO READ:  இந்திய மண்ணில் சிக்கிய சிஐஏ ஏஜெண்ட்! மணிப்பூர், மிசோரம்... என்ன நடக்குது இங்கே!

“நல்ல மதிப்பெண்கள் எடுத்துவரும் அப்பெண் மேற்படிப்பு படிக்கும் ஆர்வத்திலுள்ளாள். அதற்குள் திருமணம் செய்து கொள்ளத் தயங்கினாள். இறுதியில் துணிவு பெற்று முகூர்த்தத்திற்கு இரண்டு மணி நேரம் முன்பு சைல்ட் ஹெல்ப் லனைத் தொடர்பு கொண்டாள். அதிகாரிகள் அவளுடைய வயதுச் சான்றிதழ்களைப் பள்ளியிலிருந்து பெற்று அவளை மீட்டனர். அப்பெண்ணுக்காக தனியாக மீண்டும் தேர்வு நடத்தும்படியும் இல்லாவிடில் அவளுடைய ஓராண்டு படிப்பு வீணாகி விடும் என்றும் நாங்கள் கோரி வருகிறோம்” என்று என்ஜிவோ சிறுமிகள் உரிமை சங்கத்தைச் சேர்ந்த அச்யுத ராவ் தெரிவித்தார்.

தனக்கு மேலே படிக்கக் விருப்பமென்றும் பெற்றோர் அதற்குத் தடையாக உள்ளதாகவும் அப்பெண் தெரிவித்தாள். மணப்பெண்ணின் பெற்றோர் அவள் மைனர் அல்லவென்றும் பதினெட்டு வயது நிரம்பி விட்டது என்றும் கூறி ஆதார் அட்டையை ஆதாரம் காட்டினர். சிறு குழப்பம் நிலவிய சூழலில் பள்ளியிலிருந்து அவளுடைய சான்றிதழ்களைப் பரிசீலித்து அவள் மைனர்தான் என்று தீர்மானித்து பெண்ணை மீட்டு பெண்ணின் பெற்றோரை ‘உப்பல்’ மண்டல ரெவின்யூ ஆபீசரின் எதிரில் ஆஜர்படுத்தினர் காவல் துறையினர்.

ALSO READ:  வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

“தங்களுக்கு உடல் நிலை சரியில்லாமல் இருப்பதாகவும் தாங்கள் இறப்பதற்கு முன் பெண்ணைத் திருமணம் செய்து கொடுத்து விட விரும்பியதாகவும் பெற்றோர் தெரிவித்தனர்” என்று ‘நாச்சாரம்’ பகுதி இன்ஸ்பெக்டர் எம்.மகேஷ் தெரிவித்தார்.

அந்த டீன்ஏஜ் பெண் ‘நிம்போலிடா’ ஷெல்டர் ஹோமுக்கு அனுப்பப்பட்டாள்.

“இது இந்த ஆண்டில் தடுக்கப்பட்ட பதினோராவது குழந்தைத் திருமணம். சென்ற வாரம் ஒரு பதினான்கு வயது டீன் ஏஜ் பெண் ‘காலாபத்தர்’ ஏரியாவில் மீட்கப்பட்டாள். கடந்த இரண்டு வருடங்களில் ‘ரச்சகொண்டா’ போலீசார் 75 சைல்ட் மேரேஜஸ்களை தடுத்துள்ளனர். 2018 ல் மட்டும் 47 குழந்தைத் திருமணங்கள் நடப்பது எங்கள் பார்வைக்கு வந்து தடுத்துள்ளோம். யாதாத்ரி மாவட்டத்தில் மட்டும் 28 மைனர் பெண்களை 15 லிருந்து 17 வயதுள்ள பெண்களின் திருமணங்களை நிறுத்தியுள்ளோம். மேலும் ‘ரச்சகொண்டா’ காவல் துறையினர் கிராமங்களில் பத்தாம் வகுப்பு தேர்வுக்குச் செல்லும் பெண்களின் குடும்பங்களை அடையாளம் கண்டு அவர்களுக்காக அவேர்நெஸ் ப்ரோக்ராம்களை நடத்துவதோடு அவர்களின் பெற்றோருக்கு கௌன்சிலிங் கொடுத்து வருகிறார்கள்” என்று காவல் துறை உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ALSO READ:  இக்கணம் - தேவை சிக்கனம்!

மேலும், “பத்தாம் வகுப்பு படிக்கும் டீன் ஏஜ் பெண்கள் அதிகமாக குழந்தைத் திருமணத்தால் பாதிக்கப்படக் கூடியவர்கள். அதனால் முன்கூட்டியே அவர்களுக்கு கௌசலின் கொடுக்கத் தொடங்கியுள்ளோம். ஏனென்றால் பெரும்பாலான குழந்தைத் திருமணங்கள் எங்களுக்குத் தெரியாமலே நடந்து விடுகின்றன” என்றும் கூறினார்.

-ராஜி ரகுநாதன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Entertainment News

Popular Categories