டிடிவி தினகரனால் வெளிச்சத்துக்கு வரப் போகிறது… பொள்ளாச்சி!

06 Aug13 TTV Dinakaran - 2026

மக்களவைக்கான தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், டிடிவி தினகரனால் பொள்ளாச்சி வெளியுலகுக்கு மேலும் பிரபலமாகப் போகிறது. அதற்கான வாக்குறுதியை அளித்துள்ளார் தினகரன்.

பொள்ளாச்சியில் அமமுக வேட்பாளர் எஸ்.முத்துக்குமாரை ஆதரித்து அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பிரசாரம் மேற்கொண்டார்.

திருவள்ளுவர் திடலில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் அவர் பேசியபோது… கடந்த 5 ஆண்டு காலம் நடைபெற்ற பாஜக ஆட்சியில் தமிழகத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை. அதேபோல் மத்தியில் கூட்டணி அரசில் திமுக பங்கு வகித்த காலத்திலும் தமிழகத்துக்கு ஒரு பயனும் இல்லை.

பாலியல் விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட பிறகு சிபிசிஐடி விசாரிக்க வேண்டிய அவசியமென்ன? பாலியல் வழக்கில் ஆளுங்கட்சி பிரமுகர்கள் தலையீடு உள்ளதால் காவல்துறையினர் வழக்கை மூடி மறைக்கப் பார்க்கின்றனர்.

தமிழகமே அதிர்ச்சியில் உறைந்த இந்த சம்பவத்தை பற்றி முதல்வர் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. உச்ச நீதிமன்ற மேற்பார்வையில் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும்.

ஜெயலலிதா கடந்த மக்களவைத் தேர்தலை சந்தித்த போது பாஜகவுக்கு எதிராக பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்தார். ஆனால் தற்போதைய முதல்வர் பழனிச்சாமி உள்ளிட்ட அதிமுகவினர் பாஜகவை முன்னிலைப்படுத்தி வாக்கு சேகரிக்கின்றனர்.

பொள்ளாச்சியில் இருந்து அனைத்து மாநிலங்கள் வழியாக செல்லும் ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். நெசவுத் தொழிலை மேம்படுத்த நெகமத்தில் கைத்தறி நெசவு பூங்கா அமைக்கப்படும். பொள்ளாச்சியில் அதிகளவு படப்பிடிப்புகள் நடைபெறுவதால் இங்கு திரைப்பட நகரம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இதன் மூலம் பொள்ளாச்சி மேலும் வெளிச்சத்துக்கு வரும் என்று நம்புகின்றனர் தினகரன் ஆதரவாளர்கள்!

1 COMMENT

  1. நல்லது நடக்கணும்னா தலைவர்கள் அபிவிருத்தி திட்டங்கள் அறிவிக்கணும்னா பொள்ளாச்சி மாதிரி கெட்டது மொதல்ல நடக்கணுமா என்ன? ஏன் முன்னாலேயே இத அறிவிக்கலாமே? எல்லாம் நாடகம். இவங்க தான் வெளிச்சத்துக்கு கொண்டுவர போறாங்களாமாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 15 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 15 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Entertainment News

Popular Categories