டிடிவி தினகரனால் வெளிச்சத்துக்கு வரப் போகிறது… பொள்ளாச்சி!

06 Aug13 TTV Dinakaran - 2026

மக்களவைக்கான தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், டிடிவி தினகரனால் பொள்ளாச்சி வெளியுலகுக்கு மேலும் பிரபலமாகப் போகிறது. அதற்கான வாக்குறுதியை அளித்துள்ளார் தினகரன்.

பொள்ளாச்சியில் அமமுக வேட்பாளர் எஸ்.முத்துக்குமாரை ஆதரித்து அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பிரசாரம் மேற்கொண்டார்.

திருவள்ளுவர் திடலில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் அவர் பேசியபோது… கடந்த 5 ஆண்டு காலம் நடைபெற்ற பாஜக ஆட்சியில் தமிழகத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை. அதேபோல் மத்தியில் கூட்டணி அரசில் திமுக பங்கு வகித்த காலத்திலும் தமிழகத்துக்கு ஒரு பயனும் இல்லை.

பாலியல் விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட பிறகு சிபிசிஐடி விசாரிக்க வேண்டிய அவசியமென்ன? பாலியல் வழக்கில் ஆளுங்கட்சி பிரமுகர்கள் தலையீடு உள்ளதால் காவல்துறையினர் வழக்கை மூடி மறைக்கப் பார்க்கின்றனர்.

தமிழகமே அதிர்ச்சியில் உறைந்த இந்த சம்பவத்தை பற்றி முதல்வர் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. உச்ச நீதிமன்ற மேற்பார்வையில் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும்.

ALSO READ:  தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!

ஜெயலலிதா கடந்த மக்களவைத் தேர்தலை சந்தித்த போது பாஜகவுக்கு எதிராக பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்தார். ஆனால் தற்போதைய முதல்வர் பழனிச்சாமி உள்ளிட்ட அதிமுகவினர் பாஜகவை முன்னிலைப்படுத்தி வாக்கு சேகரிக்கின்றனர்.

பொள்ளாச்சியில் இருந்து அனைத்து மாநிலங்கள் வழியாக செல்லும் ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். நெசவுத் தொழிலை மேம்படுத்த நெகமத்தில் கைத்தறி நெசவு பூங்கா அமைக்கப்படும். பொள்ளாச்சியில் அதிகளவு படப்பிடிப்புகள் நடைபெறுவதால் இங்கு திரைப்பட நகரம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இதன் மூலம் பொள்ளாச்சி மேலும் வெளிச்சத்துக்கு வரும் என்று நம்புகின்றனர் தினகரன் ஆதரவாளர்கள்!

1 COMMENT

  1. நல்லது நடக்கணும்னா தலைவர்கள் அபிவிருத்தி திட்டங்கள் அறிவிக்கணும்னா பொள்ளாச்சி மாதிரி கெட்டது மொதல்ல நடக்கணுமா என்ன? ஏன் முன்னாலேயே இத அறிவிக்கலாமே? எல்லாம் நாடகம். இவங்க தான் வெளிச்சத்துக்கு கொண்டுவர போறாங்களாமாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories