கருணாநிதி மகள் செல்வி மீது கொலை முயற்சி வழக்கு!

selvi karuna daughter - 2026

கருணாநிதி மகள் செல்வி மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்துள்ளது காவல்துறை!

டிடிவி தினகரனின் அமமுக கூட்டணி கட்சியான எஸ்டிபிஐ கட்சியினர் வாக்காளர்களுக்கு டோக்கன் கொடுத்ததால் தகராறு ஏற்பட்டது. இது தொடர்பாக கருணாநிதியின் மகள் செல்வி மீது கொலை மிரட்டல் வழக்கு பதிவுசெய்யப் பட்டுள்ளது.

திமுக மத்திய சென்னை வேட்பாளர் தயாநிதி மாறனை ஆதரித்து நேற்று மாலை சூளைமேடு பகுதியில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் மகள் செல்வி வாக்கு சேகரித்தார். அப்போது அமமுக., கூட்டணிக் கட்சியின் மத்திய சென்னை வேட்பாளர் தெகலான் பாகவியை ஆதரித்து அக்கட்சியைச் சேர்ந்த ஹசீனா பேகம், ரிஷ்வானா பேகம் என இருவர் அதே பகுதியில் வாக்கு சேகரித்து வந்தனர்.

அப்போது அவர்கள் வாக்காளர்கள் பட்டியல் வாங்கி டோக்கன் வழங்கியதாகக் கூறப்படுகிறது. இதை அடுத்து, செல்வி உட்பட திமுக.,வினர் அவர்களைத் தட்டிக் கேட்டுள்ளனர். இதனால், இரு தரப்பிலும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதுதொடர்பாக திமுக.,வின் 108வது வட்டச் செயலாளர் திருமலை என்பவர் சூளைமேடு காவல் நிலையத்திலும் தேர்தல் அதிகாரிகளிடமும் புகார் அளித்தார்.

இதை அடுத்து, ஹசீனா பேகம், ரிஷ்வானா பேகம் இருவர் மீதும் வாக்காளர்களுக்கு பணம் வழங்குவது, அவதூறாகப் பேசுவது உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் சூளைமேடு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அது போல், எஸ்டிபிஐ., கட்சியைச் சார்ந்த ஹசீனா பேகம் அளித்த புகாரின் பேரில் கருணாநிதியின் மகள் செல்வி மற்றும் திமுக பிரமுகர் திருமலை ஆகியோர் மீது கொலை மிரட்டல், தகாத வார்த்தைகளால் பேசுவது ஆகிய இரு பிரிவுகளில் சூளைமேடு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Topics

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

அமெரிக்காவில் 1.7 பில்லியன் ஆண்டுகள் பழமையான விஷ்ணு பாறைகள்

இந்த விஷ்ணு கோவில் அல்லது விஷ்ணுப் பாறைகளுக்கு அருகே மேலு இரண்டு பாறைத் தொடர்களுக்கு ப்ரும்மா பாறை, ராம் பாறை என்றும் பெயரிடப்பட்டிருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories