செங்கோட்டையில் கனமழை! குற்றால அருவிகளில் நீர்ப் பெருக்கு!

courtallamfalls - 2026நெல்லை மாவட்டம் தென்காசி, செங்கோட்டை உள்ளிட்ட மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கன மழை பெய்தது. இதனால் குற்றால அருவிகளில் நீர்ப் பெருக்கு ஏற்பட்டது.

கோடைக்காலம் என்பதால், அருவிகளில் தண்ணீர் வரத்து இன்றி வறண்டு கிடந்தன. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் கடும் வறட்சி நிலவியது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் நல்ல மழைப் பொழிவு இருந்து வருகிறது.

ஏப்.21ம் தேதி காலை நிலவரப் படி, நெல்லை மாவட்டத்தில், செங்கோட்டையில் அதிகபட்சமாக 32 மி.மீ., மழை பதிவானது. தென்காசியில் 11.30 மி.மீ., ராதாபுரத்தில் 11 மி.மீ., ஆய்க்குடியில் 5.40 மி.மீ., பாபநாசம், சங்கரன்கோவில் ஆகிய பகுதிகளில் 1 மி.மீ., என மாவட்டத்தில் மொத்தம் 61.70 மீ.மீ., மழை பதிவானது.

மழை காரணமாக குற்றாலம் அருவியில் நீர்வரத்து அதிகரித்தது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியான நெல்லை மாவட்டம் தென்காசி, குற்றாலம், செங்கோட்டை, புளியரை, வடகரை, மேக்கரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது.

courtallamfalls2 - 2026

இந்த மழையின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரப் பகுதியில் அமைந்துள்ள நீர்நிலைகளுக்கு நீர்வரத்து தொடங்கியுள்ளது. மேலும் குற்றாலம், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் நீர்வரத்து அதிகரித்தது.

குற்றால அருவியில் நீர்வரத்து தொடங்கியதை அறிந்த சுற்று வட்டாரப் பகுதியை சேர்ந்த ஏராளமான மக்கள் குற்றால அருவியை நோக்கி படையெடுத்தனர்.

குற்றால அருவியில் பரவலாக தண்ணீர் கொட்டுவதால் ஆண்களும், பெண்களும் உற்சாகத்துடன் குளித்து மகிழ்ந்தனர். தொடர்ந்து இந்தப் பகுதியில் சாரல் மழை பெய்து வருகிறது.

மழையின் தாக்கம் இன்னும் அதிகரித்தால் குற்றால அருவிகளில் கோடைகாலம் குளுமையான காலமாக இருக்கும் என சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடன் தெரிவித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories