சென்னை வாணி மஹாலில் “துறு துறு தெனாலி ராமன்” நாட்டிய நாடகம்!

tenaliramannataka1 - 2026“பரதம் அகாடமி ஆப் பைன் ஆர்ட்ஸ்” ஸுடன் ராயல் சக்தி சாரிடபிள் டிரஸ்ட்,இந்திரா ப்ரொஜெக்ட்ஸ் மற்றும் இன்டெர்வியூ டெஸ்க் ஆகிய நிறுவங்கள் இணைந்து சென்னை டி .நகர் வாணி மஹாலில் புதன்கிழமை (17-04-2019)அன்று “துறு துறு தெனாலி ராமன்” என்ற இசை நடன நாட்டிய நகைச்சுவை நிகழ்ச்சியை அரங்கேற்றினர்.

நிகழ்ச்சியில் பழம்பெரும் இயக்குனர் திரு S.P.முத்துராமன்,நடிகர் ஆரி,இயக்குனர் குழந்தைவேலப்பன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

தற்போதைய பிள்ளைகள் பழங்கால நீதிக்கதைகளை கேட்டு வளரும் சூழ்நிலையில் இல்லாமல் விஞ்ஞான வளர்ச்சியால் அலைபேசியில் வீடியோ விளையாட்டுகள் மட்டுமே விளையாடும் நிலைக்கு ஆளாகியுள்ளனர்.

நம் முன்னோர்கள் நீதிக்கதைகளாக கூறிய அறநெறிகளை தற்கால பிள்ளைகள் மனதில் பதியவைக்கும் ஒரு புதிய முயற்சியுடன் இந்த நகைச்சுவை நாட்டிய நாடகம் நடத்தப் பட்டது. ஹிமஜா குழுவினர் இந்த நாட்டிய நிகழ்ச்சியை சிறப்புற அரங்கேற்றினர். R.R.அதுல்குமார் நேரலை இசையமைப்பு சிறப்பாக இருந்தது.

tenaliramannataka2 - 2026

இந்நாட்டிய நிகழ்ச்சியில் தெனாலிராமனாக குமாரி P.L.ரமாவும், கிருஷ்ணதேவராயராக ஹிமஜாவும் பங்கேற்றனர். குறிப்பாக குமாரி P.L.ரமாவின் முகபாவங்களும்,நாட்டிய அசைவுகளும் புதுமையாகவும்,சிறப்பாகவும் இருந்தது.

நாடகத்தின் முடிவில் சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.விழாவில் பேசிய இயக்குனர் S.P.முத்துராமன் நாட்டிய குழுவினரை வாழ்த்தினார்.குறிப்பாக இசையமைப்பாளர் R.R.அதுல்குமாரின் சிறப்பான நேரலை இசையை வெகுவாக பாராட்டிய அவர் அதுல்குமார் திரைத்துறையில் பெரிய அளவில் சாதிக்க தன் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

அனைவரையும் வாழ்த்தி பேசிய நடிகர் ஆரி தற்கால குழந்தை வளர்ப்பு பற்றி பேசியபோது ஒரு திருடனோ,கொலைகாரனோ சமூகத்தில் பெரிய குற்றவாளியில்லை எனவும் சரியான முறையில் பிள்ளைகளை வளர்க்க தெரியாத பெற்றோர்களே முக்கியமான குற்றவாளிகள் எனவும் குறிப்பிட்டது அனைவரையும் யோசிக்க வைத்தது.

tenaliramannataka3 - 2026விழாவில் பேசிய இயக்குனர் குழந்தைவேலப்பன் தனது மகன் நாடகத்தை ரசித்து பார்த்தத்தையே மேற்கோள் காட்டி நாடகத்தின் சிறப்பை விளக்கினார்.

நாட்டிய நிகழ்ச்சியை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கண்டு ரசித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

Topics

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

Entertainment News

Popular Categories