சென்ன அம்மா உணவகத்தில் உணவுகள் அதிரடி மாற்றங்கள் செய்ய திட்டம் …!

amma unavagam - 2026

சென்னை மாநகராட்சியில் உள்ள அம்மா உணவகங்களுக்கு வரும் பொதுமக்களை கவரும் வகையில் அங்கு வழங்கப்பட்டு வரும் உணவு வகைகளில் மாற்றம் செய்ய மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

மறைந்த தமிழக முதல்வா் ஜெயலலிதா ஆட்சியில் அவர் சிந்தயைில் உதித்து கடந்த 2013ஆம் அண்டு இந்த அம்மா உணவகங்கள் தொடங்கப்பட்டன.

அவரது மறைவுக்குப் பின் அம்மா உணவகங்களில் உணவுகளின் தரம் குறைந்து, விற்பனையும் குறைந்திருப்பதாக பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வருகின்றனா்
.
இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரி கூறியதாவது் : சென்னை மாநகராட்சியில் மொத்தம் 407 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. அதில் காலை வேளையில் ஒரு இட்லி ரூ.1, பொங்கல் ரூ.5 என்ற விலையில் தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

amma unavagam 2 - 2026

பிற்பகலில் தயிர்சாதம் ரூ.3, சாம்பார் சாதம் மற்றும் கலவை சாதம் உள்ளிட்டவைகள் தலா ரூ.5 விலையிலும் இரவில் 2 சப்பாத்தி மற்றம் பருப்பு சாம்பார் ரூ.3 விலையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் தினமும் சுமார் 3லட்சம் இட்லிகள் வரை விற்பனையாகின்றன. நாளொன்றுக்கு மொத்தம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் வரை உணவுகள் விற்பனை செய்யப்படுகிறது.

உயர்தர உணவகத்தில் நாம் 5 இட்லி வாங்கினால் அதில் முதல் இட்லியின் முதல் துண்டை உண்ணும்போது இருக்கும் ஆர்வம், கடைசி இட்லியின் கடைசித்துண்டை உண்ணும்போது இருப்பதில்லை ஆனால் அந்த 5 இட்லியும் தரமானவைதான்.

அதுபோல கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக அம்மா உணவகங்களில் ஒரே வகையான தரமான உணவுகளே வழங்கப்பட்டு வருகிறது.

அதனால் அதை தொடா்ந்து உண்ணும் மக்களுக்கு அந்த உணவு மீதான ஆர்வம் குறைகிறது. அதன் விளைவாக விற்பனை குறைகிறது. உணவின் தரத்தில் எந்த குறைபாடு இல்லை.

அம்மா உணவகத்தக்காக ஆண்டுதோறும் ரூ.140 கோடிவரை செலவிடுகிறோம் எனவே வரும் காலத்தில் நிதிச்சுமை ஏற்படாத வகையில் பொதுமக்களை கவரும் விதமாக உணவு வகைகளில் மாற்றம் கொண்டுவர திட்டமிட்டிருக்கிறோம்

இது தொடர்பாக பல்வேறு துறை அதிகாரிகளுடன் கலந்தாலோசிக்கப்படும் சிறப்பு குழு ஒன்றை அமைத்து ஆய்வு செய்ய திட்டமிட்டுருக்கிறோம்
இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Topics

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

Entertainment News

Popular Categories