அரவக்குறிச்சியில் புகார் பதிவு! கைது செய்யப் படுவாரா கமல்..?!

kamalhaasan - 2026

கமல்ஹாசன் மீது அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் 2 வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன.

இந்து தீவிரவாதி பேச்சு தொடர்பாக வந்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மதக் கலவரத்தைத் தூண்டும் வகையில் கமல்ஹாசன் பேசியதாக வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை நடந்த அரவக்குறிச்சி பிரச்சாரத்தின்போது கோட்சே குறித்துப் பேசியிருந்தார் கமல்ஹாசன். இந்தியாவின் முதல் இந்து தீவிரவாதி கோட்சே என்று பேசிய கமல் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாஜக, இந்து முன்னணியினர் புகார் கொடுத்தனர்.

இந்தப் புகாரின் பேரில் அரவக்குறிச்சி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்! போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளதால் கமல் கைது செய்யப்படுவாரா என்று பெரும் பரபரப்பு நிலவுகிறது!

இது குறித்து கரூர் மாவட்ட காவல்துறை சார்பில் வெளியான பத்திரிகை செய்தியில்

நடைபெறவிருக்கும் அரவக்குறிச்சி இடைத்தேர்தலை முன்னிட்டு மக்கள் நீதி மையம் கட்சியின் நிறுவனர் கமல்ஹாசன் 12ஆம் தேதி இரவு எட்டு முப்பது மணி அளவில் அரவக்குறிச்சி அண்ணாநகர் சந்திப்பில் பிரச்சாரம் மேற்கொண்ட போது காந்தியை சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சேவை சுதந்திர இந்தியாவின் முதல் இந்து தீவிரவாதி என இந்து மதத்தை புண்படுத்தும் விதமாக உரையாற்றினார்

இது சம்பந்தமாக மே 14ஆம் தேதி 5 மணிக்கு மக்கள் நீதி மய்ய நிறுவனர் கமல்ஹாசன் மீது வரப்பெற்ற புகாரின் பேரில் அரவக்குறிச்சி காவல்நிலைய குற்ற எண் 154/19, பிரிவு 153(ஏ), 295(ஏ) ஐபிசி பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது

இவ்வாறு தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறுவோர் மற்றும் மதம் இனம் மொழி சாதி சம்பந்தமாக வன்முறையை தூண்டும் விதமாக பேசுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விக்ரமன் தெரிவித்துள்ளார்.. என்று குறிப்பிடப் பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories