அரவக்குறிச்சியில் புகார் பதிவு! கைது செய்யப் படுவாரா கமல்..?!

Published:

kamalhaasan - 2026

கமல்ஹாசன் மீது அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் 2 வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன.

இந்து தீவிரவாதி பேச்சு தொடர்பாக வந்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மதக் கலவரத்தைத் தூண்டும் வகையில் கமல்ஹாசன் பேசியதாக வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை நடந்த அரவக்குறிச்சி பிரச்சாரத்தின்போது கோட்சே குறித்துப் பேசியிருந்தார் கமல்ஹாசன். இந்தியாவின் முதல் இந்து தீவிரவாதி கோட்சே என்று பேசிய கமல் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாஜக, இந்து முன்னணியினர் புகார் கொடுத்தனர்.

இந்தப் புகாரின் பேரில் அரவக்குறிச்சி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்! போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளதால் கமல் கைது செய்யப்படுவாரா என்று பெரும் பரபரப்பு நிலவுகிறது!

இது குறித்து கரூர் மாவட்ட காவல்துறை சார்பில் வெளியான பத்திரிகை செய்தியில்

நடைபெறவிருக்கும் அரவக்குறிச்சி இடைத்தேர்தலை முன்னிட்டு மக்கள் நீதி மையம் கட்சியின் நிறுவனர் கமல்ஹாசன் 12ஆம் தேதி இரவு எட்டு முப்பது மணி அளவில் அரவக்குறிச்சி அண்ணாநகர் சந்திப்பில் பிரச்சாரம் மேற்கொண்ட போது காந்தியை சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சேவை சுதந்திர இந்தியாவின் முதல் இந்து தீவிரவாதி என இந்து மதத்தை புண்படுத்தும் விதமாக உரையாற்றினார்

ALSO READ:  கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

இது சம்பந்தமாக மே 14ஆம் தேதி 5 மணிக்கு மக்கள் நீதி மய்ய நிறுவனர் கமல்ஹாசன் மீது வரப்பெற்ற புகாரின் பேரில் அரவக்குறிச்சி காவல்நிலைய குற்ற எண் 154/19, பிரிவு 153(ஏ), 295(ஏ) ஐபிசி பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது

இவ்வாறு தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறுவோர் மற்றும் மதம் இனம் மொழி சாதி சம்பந்தமாக வன்முறையை தூண்டும் விதமாக பேசுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விக்ரமன் தெரிவித்துள்ளார்.. என்று குறிப்பிடப் பட்டுள்ளது.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img