சென்னையில் போதை பொருள் தயாரித்து விற்ற 5 பேர் கைது : 10 கிலோ பறிமுதல்…!

kithau - 2026
சென்னையில் அதிகரித்து வரும் போதை பொருட்கள் நடமாட்டம் குறித்து போலீசாருக்கு வந்த ரகசிய தகவலையடுத்து போலீசார் மேற்கண்ட பகுதிகளில் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

இதனையடுத்து வளசரவாக்கம் பகுதியில் கோகைன் போதை பொருளை தயாரித்து விற்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 10 கிலோ போதை பவுடர் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இது குறித்த போலீஸ் விசாரணையில்,

போரூர் அடுத்த ஆலப்பாக்கம் பகுதியில் கோகைன் எனப்படும் போதை பவுடர் தயாரித்து, வளசரவாக்கம் மற்றும் சுற்றுப் பகுதிகளில், கல்லூரி மாணவர்கள், ஐ.டி.ஊழியர்களை குறிவைத்து விற்பனை செய்யப்படுவதாக வளசரவாக்கம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அதன்பேரில்,

போலீசார் மேற்கண்ட பகுதிகளில் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்நிலையில், சந்தேகத்தின் பேரில், நேற்று காலை ஆலப்பாக்கம், பெருமாள் கோயில் தெருவில் உள்ள ஒரு வீட்டில் போலீசார் அதிரடி சோதனை செய்தனர். அப்போது, அங்கு, கோகைன் எனப்படும் போதை பவுடரை போலியாக தயாரிப்பது தெரிந்தது.

இதையடுத்து, அங்கிருந்த அதே பகுதியை சேர்ந்த சசிதரன் (29), தமிழ்வாணன் (46) ஆகிய இருவரையும் பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்தனர்.

அந்த வீட்டில் இருந்து 2 கிலோ போதை பவுடரை பறிமுதல் செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் வளசரவாக்கம், திருவள்ளுவர் தெருவில் உள்ள ஒரு மாந்தோப்பில் பதுக்கி வைத்திருந்த 8 கிலோ போதை பவுடரையும் பறிமுதல் செய்தனர்.

மேலும், இதில் தொடர்புடைய வில்லிவாக்கத்தை சேர்ந்த முருகேசன் (33), குன்றத்தூர் அமர்நாத் (25), சரவணன் (26) ஆகிய 3 பேரையும் சுற்றி வளைத்து பிடித்தனர்.

இந்த போதை பவுடர் தயாரிப்பில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா, இதற்கான மூலப்பொருட்களை எங்கிருந்து வாங்கி வந்தனர், என போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

Topics

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

Entertainment News

Popular Categories