February 22, 2026, 2:32 PM
30.4 C
Chennai

சென்னையில் போதை பொருள் தயாரித்து விற்ற 5 பேர் கைது : 10 கிலோ பறிமுதல்…!

kithau - 2026
சென்னையில் அதிகரித்து வரும் போதை பொருட்கள் நடமாட்டம் குறித்து போலீசாருக்கு வந்த ரகசிய தகவலையடுத்து போலீசார் மேற்கண்ட பகுதிகளில் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

இதனையடுத்து வளசரவாக்கம் பகுதியில் கோகைன் போதை பொருளை தயாரித்து விற்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 10 கிலோ போதை பவுடர் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இது குறித்த போலீஸ் விசாரணையில்,

போரூர் அடுத்த ஆலப்பாக்கம் பகுதியில் கோகைன் எனப்படும் போதை பவுடர் தயாரித்து, வளசரவாக்கம் மற்றும் சுற்றுப் பகுதிகளில், கல்லூரி மாணவர்கள், ஐ.டி.ஊழியர்களை குறிவைத்து விற்பனை செய்யப்படுவதாக வளசரவாக்கம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அதன்பேரில்,

போலீசார் மேற்கண்ட பகுதிகளில் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்நிலையில், சந்தேகத்தின் பேரில், நேற்று காலை ஆலப்பாக்கம், பெருமாள் கோயில் தெருவில் உள்ள ஒரு வீட்டில் போலீசார் அதிரடி சோதனை செய்தனர். அப்போது, அங்கு, கோகைன் எனப்படும் போதை பவுடரை போலியாக தயாரிப்பது தெரிந்தது.

இதையடுத்து, அங்கிருந்த அதே பகுதியை சேர்ந்த சசிதரன் (29), தமிழ்வாணன் (46) ஆகிய இருவரையும் பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்தனர்.

அந்த வீட்டில் இருந்து 2 கிலோ போதை பவுடரை பறிமுதல் செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் வளசரவாக்கம், திருவள்ளுவர் தெருவில் உள்ள ஒரு மாந்தோப்பில் பதுக்கி வைத்திருந்த 8 கிலோ போதை பவுடரையும் பறிமுதல் செய்தனர்.

மேலும், இதில் தொடர்புடைய வில்லிவாக்கத்தை சேர்ந்த முருகேசன் (33), குன்றத்தூர் அமர்நாத் (25), சரவணன் (26) ஆகிய 3 பேரையும் சுற்றி வளைத்து பிடித்தனர்.

இந்த போதை பவுடர் தயாரிப்பில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா, இதற்கான மூலப்பொருட்களை எங்கிருந்து வாங்கி வந்தனர், என போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

Topics

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories