தமிழகத்தில் கோவில் பணியாளர்கள் உயிரிழந்தால் இனி, குடும்பநல நிதி ரூ.3 லட்சம் : தமிழக அரசு ஆணை வெளியீடு…!

Tamil ndau mutthiri - 2026

தமிழகத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை கட்டுபாட்டில் உள்ள கோவில் பணியாளர்கள் உயிரிழந்தால் வழங்கப்படும் குடும்பநல நிதியை ரூ.3 லட்சமாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் அபூர்வ வர்மா வெளியிட்டுள்ள அரசாணையில் கூறி இருப்பதாவது:-

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் பணியாற்றும் திருக்கோவில் நிரந்தர பணியாளர்கள் பணியில் இருக்கும்போது உயிரிழக்க நேரிட்டால் அவர்களது குடும்பத்தினருக்கு குடும்ப நல நிதி வழங்க மைய நிதி ஏற்படுத்தப்பட்டது.

அதில் இருந்து கிடைக்கும் வட்டித்தொகையை கொண்டு நிதி உதவி வழங்கவும், இதற்காக திருக்கோவில் பணியாளர்களின் ஊதியத்தில் இருந்து மாத சந்தாவாக ரூ.15 பிடித்தம் செய்யவும் தமிழக அரசு உத்தரவிட்டது.

இதன்படி பணியில் இருக்கும்போது திருக்கோவில் நிரந்தர பணியாளர்கள் உயிரிழக்க நேரிட்டால் அவர்களது குடும்பத்தினருக்கு ரூ.60 ஆயிரம் வழங்கப்பட்டது. இதன்பின்னர், இந்த தொகை ரூ.75 ஆயிரமாக உயர்த்தப்பட்டது. 2008-ம் ஆண்டு முதல் ரூ.1 லட்சம் வழங்க அரசு உத்தரவிட்டது.

இந்த தொகையை ரூ.3 லட்சமாக உயர்த்தலாம் என்றும், இதற்காக பணியாளர்களிடம் இருந்து மாதந்தோறும் வசூலிக்கப்பட்டு வரும் தொகையை ரூ.60 ஆக உயர்த்தலாம் என்றும் இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் (பணீந்திர ரெட்டி) அரசுக்கு கருத்துரு அனுப்பி இருந்தார்.

இதை பரிசீலனை செய்து திருக்கோவில் நிரந்தர பணியாளர்கள் பணியில் இருக்கும்போது உயிரிழந்தால் அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் குடும்ப நல நிதி ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தி அரசாணை வெளியிட கேட்டுக்கொண்டார்.

இந்து சமய அறநிலையத்துறை கமிஷனரின் கருத்துருவை அரசு கவனத்துடன் பரிசீலனை செய்து குடும்ப நல நிதியை ரூ.3 லட்சமாக உயர்த்தி வழங்க அனுமதித்து ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 16 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

Topics

பஞ்சாங்கம் மே 16 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

பஞ்சாங்கம் மே 12 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

“We are all one”, this realization of oneness is attained in the Varg : Atul Limaye

"We are all one", this realization of oneness is attained in the Varg – Atul LimayeJi - Karyakarta Vikas Varg-Dwitiya inaugurated in Nagpur

Entertainment News

Popular Categories