தமிழகத்தில் கோவில் பணியாளர்கள் உயிரிழந்தால் இனி, குடும்பநல நிதி ரூ.3 லட்சம் : தமிழக அரசு ஆணை வெளியீடு…!

Tamil ndau mutthiri - 2026

தமிழகத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை கட்டுபாட்டில் உள்ள கோவில் பணியாளர்கள் உயிரிழந்தால் வழங்கப்படும் குடும்பநல நிதியை ரூ.3 லட்சமாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் அபூர்வ வர்மா வெளியிட்டுள்ள அரசாணையில் கூறி இருப்பதாவது:-

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் பணியாற்றும் திருக்கோவில் நிரந்தர பணியாளர்கள் பணியில் இருக்கும்போது உயிரிழக்க நேரிட்டால் அவர்களது குடும்பத்தினருக்கு குடும்ப நல நிதி வழங்க மைய நிதி ஏற்படுத்தப்பட்டது.

அதில் இருந்து கிடைக்கும் வட்டித்தொகையை கொண்டு நிதி உதவி வழங்கவும், இதற்காக திருக்கோவில் பணியாளர்களின் ஊதியத்தில் இருந்து மாத சந்தாவாக ரூ.15 பிடித்தம் செய்யவும் தமிழக அரசு உத்தரவிட்டது.

இதன்படி பணியில் இருக்கும்போது திருக்கோவில் நிரந்தர பணியாளர்கள் உயிரிழக்க நேரிட்டால் அவர்களது குடும்பத்தினருக்கு ரூ.60 ஆயிரம் வழங்கப்பட்டது. இதன்பின்னர், இந்த தொகை ரூ.75 ஆயிரமாக உயர்த்தப்பட்டது. 2008-ம் ஆண்டு முதல் ரூ.1 லட்சம் வழங்க அரசு உத்தரவிட்டது.

ALSO READ:  தமிழகத்தின் 13வது முதல் அமைச்சராகப் பதவியேற்றார் ஜோசப் விஜய்!  

இந்த தொகையை ரூ.3 லட்சமாக உயர்த்தலாம் என்றும், இதற்காக பணியாளர்களிடம் இருந்து மாதந்தோறும் வசூலிக்கப்பட்டு வரும் தொகையை ரூ.60 ஆக உயர்த்தலாம் என்றும் இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் (பணீந்திர ரெட்டி) அரசுக்கு கருத்துரு அனுப்பி இருந்தார்.

இதை பரிசீலனை செய்து திருக்கோவில் நிரந்தர பணியாளர்கள் பணியில் இருக்கும்போது உயிரிழந்தால் அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் குடும்ப நல நிதி ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தி அரசாணை வெளியிட கேட்டுக்கொண்டார்.

இந்து சமய அறநிலையத்துறை கமிஷனரின் கருத்துருவை அரசு கவனத்துடன் பரிசீலனை செய்து குடும்ப நல நிதியை ரூ.3 லட்சமாக உயர்த்தி வழங்க அனுமதித்து ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories