பண்பொழி திருமலைக்குமாரசாமி கோயில் கும்பாபிஷேக விழா ஆலோசனைக் கூட்டம்!

metting tvl - 2026

திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை அருகே பண்பொழி திருமலைக்குமார சுவாமி கோவிலில் கும்பாபிஷேக விழா வருகிற 14-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

இதனை முன்னிட்டு, கும்பாபிஷே விழா நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம், நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது.

கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் ஷில்பா தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

பண்பொழி திருமலைக்குமார சுவாமி கோவிலில் வருகிற 9-ந்தேதி யாகசாலை பூஜைகள் தொடங்குவதில் இருந்து 14-ந்தேதி கும்பாபிஷேக விழா நடைபெறும் வரையிலும், கோவில் மற்றும் மலை அடிவார பகுதிகளில் போலீசார் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

Therumalikovil 11 - 2026மேலும் பக்தர்கள் சீராக சாமி தரிசனம் செய்திட ஏற்பாடு செய்ய வேண்டும். 9-ந்தேதியில் இருந்து 16-ந்தேதி வரையிலும் மாவட்டத்தின் பல்வேறு வழித்தடங்களில் இருந்து திருமலைக்கோவில் அடிவாரம் வரையிலும், அதிகாலை முதல் நள்ளிரவு வரையிலும் கூடுதலாக அரசு பஸ்களை இயக்க வேண்டும். கும்பாபிஷேக விழா நடைபெறும் 14-ந்தேதி அதிகாலை முதல் அதிகளவு சிறப்பு பஸ்களை இயக்க வேண்டும்.

Therumalikovil 22 - 2026

விழா காலத்தில் தடையற்ற மின்சாரம் வழங்க வேண்டும். கும்பாபிஷேக தினத்தன்று மலை அடிவாரப்பகுதி மற்றும் அன்னதானம் நடைபெறும் வண்டாடும் பொட்டல் பகுதியில் மருத்துவ குழுவினர் மற்றும் ஆம்புலன்ஸ் தயார் நிலையில் இருக்க வேண்டும். மலைக்கோவில், மலை அடிவாரப்பகுதி, வண்டாடும் பொட்டல் ஆகிய பகுதிகளில் தீயணைப்பு வாகனத்துடன் தீயணைப்பு துறையினர் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

போதிய குடிநீர், மின்விளக்கு வசதி செய்ய வேண்டும். போதிய துப்புரவு பணியாளர்களை நியமித்து குப்பைகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும். போதிய அளவில் தற்காலிக கழிப்பறைகளை அமைக்க வேண்டும்.

Therumalikovil 33 - 2026

பண்பொழி திருமலைக்குமார சுவாமி கோவிலில் கும்பாபிஷேக விழா 15 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது. மலைக்கோவிலுக்கு செல்வதற்கு சாலை அமைத்த பின்னர் முதல் முறையாக கும்பாபிஷேகம் நடக்கிறது. கோவிலில் புதிதாக ராஜகோபுரம் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடக்கிறது.

இந்த விழா சிறப்பாக நடைபெற அனைத்து துறை அலுவலர்கள், பக்தர்கள், பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் ஷில்பா கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கணேஷ்குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில், தென்காசி உதவி கலெக்டர் சவந்தரராஜன், பண்பொழி திருமலைக்குமார சுவாமி கோவில் துணை ஆணையர் செல்லத்துரை, உதவி ஆணையர் அருணாசலம் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Entertainment News

Popular Categories