பண்பொழி திருமலைக்குமாரசாமி கோயில் கும்பாபிஷேக விழா ஆலோசனைக் கூட்டம்!

metting tvl - 2026

திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை அருகே பண்பொழி திருமலைக்குமார சுவாமி கோவிலில் கும்பாபிஷேக விழா வருகிற 14-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

இதனை முன்னிட்டு, கும்பாபிஷே விழா நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம், நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது.

கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் ஷில்பா தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

பண்பொழி திருமலைக்குமார சுவாமி கோவிலில் வருகிற 9-ந்தேதி யாகசாலை பூஜைகள் தொடங்குவதில் இருந்து 14-ந்தேதி கும்பாபிஷேக விழா நடைபெறும் வரையிலும், கோவில் மற்றும் மலை அடிவார பகுதிகளில் போலீசார் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

Therumalikovil 11 - 2026மேலும் பக்தர்கள் சீராக சாமி தரிசனம் செய்திட ஏற்பாடு செய்ய வேண்டும். 9-ந்தேதியில் இருந்து 16-ந்தேதி வரையிலும் மாவட்டத்தின் பல்வேறு வழித்தடங்களில் இருந்து திருமலைக்கோவில் அடிவாரம் வரையிலும், அதிகாலை முதல் நள்ளிரவு வரையிலும் கூடுதலாக அரசு பஸ்களை இயக்க வேண்டும். கும்பாபிஷேக விழா நடைபெறும் 14-ந்தேதி அதிகாலை முதல் அதிகளவு சிறப்பு பஸ்களை இயக்க வேண்டும்.

ALSO READ:  செங்கோட்டை - பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

Therumalikovil 22 - 2026

விழா காலத்தில் தடையற்ற மின்சாரம் வழங்க வேண்டும். கும்பாபிஷேக தினத்தன்று மலை அடிவாரப்பகுதி மற்றும் அன்னதானம் நடைபெறும் வண்டாடும் பொட்டல் பகுதியில் மருத்துவ குழுவினர் மற்றும் ஆம்புலன்ஸ் தயார் நிலையில் இருக்க வேண்டும். மலைக்கோவில், மலை அடிவாரப்பகுதி, வண்டாடும் பொட்டல் ஆகிய பகுதிகளில் தீயணைப்பு வாகனத்துடன் தீயணைப்பு துறையினர் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

போதிய குடிநீர், மின்விளக்கு வசதி செய்ய வேண்டும். போதிய துப்புரவு பணியாளர்களை நியமித்து குப்பைகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும். போதிய அளவில் தற்காலிக கழிப்பறைகளை அமைக்க வேண்டும்.

Therumalikovil 33 - 2026

பண்பொழி திருமலைக்குமார சுவாமி கோவிலில் கும்பாபிஷேக விழா 15 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது. மலைக்கோவிலுக்கு செல்வதற்கு சாலை அமைத்த பின்னர் முதல் முறையாக கும்பாபிஷேகம் நடக்கிறது. கோவிலில் புதிதாக ராஜகோபுரம் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடக்கிறது.

இந்த விழா சிறப்பாக நடைபெற அனைத்து துறை அலுவலர்கள், பக்தர்கள், பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் ஷில்பா கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கணேஷ்குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில், தென்காசி உதவி கலெக்டர் சவந்தரராஜன், பண்பொழி திருமலைக்குமார சுவாமி கோவில் துணை ஆணையர் செல்லத்துரை, உதவி ஆணையர் அருணாசலம் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

ALSO READ:  திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories