பண்பொழி திருமலைக்குமாரசாமி கோயில் கும்பாபிஷேக விழா ஆலோசனைக் கூட்டம்!

metting tvl - 2026

திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை அருகே பண்பொழி திருமலைக்குமார சுவாமி கோவிலில் கும்பாபிஷேக விழா வருகிற 14-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

இதனை முன்னிட்டு, கும்பாபிஷே விழா நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம், நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது.

கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் ஷில்பா தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

பண்பொழி திருமலைக்குமார சுவாமி கோவிலில் வருகிற 9-ந்தேதி யாகசாலை பூஜைகள் தொடங்குவதில் இருந்து 14-ந்தேதி கும்பாபிஷேக விழா நடைபெறும் வரையிலும், கோவில் மற்றும் மலை அடிவார பகுதிகளில் போலீசார் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

Therumalikovil 11 - 2026மேலும் பக்தர்கள் சீராக சாமி தரிசனம் செய்திட ஏற்பாடு செய்ய வேண்டும். 9-ந்தேதியில் இருந்து 16-ந்தேதி வரையிலும் மாவட்டத்தின் பல்வேறு வழித்தடங்களில் இருந்து திருமலைக்கோவில் அடிவாரம் வரையிலும், அதிகாலை முதல் நள்ளிரவு வரையிலும் கூடுதலாக அரசு பஸ்களை இயக்க வேண்டும். கும்பாபிஷேக விழா நடைபெறும் 14-ந்தேதி அதிகாலை முதல் அதிகளவு சிறப்பு பஸ்களை இயக்க வேண்டும்.

ALSO READ:  நெல்லையில் நடந்த இந்து முன்னணி மாநிலப் பொதுக்குழு; போதை நடமாட்டம், திருச்செந்தூர், தீபம் உள்ளிட்ட 8 தீர்மானங்கள்!

Therumalikovil 22 - 2026

விழா காலத்தில் தடையற்ற மின்சாரம் வழங்க வேண்டும். கும்பாபிஷேக தினத்தன்று மலை அடிவாரப்பகுதி மற்றும் அன்னதானம் நடைபெறும் வண்டாடும் பொட்டல் பகுதியில் மருத்துவ குழுவினர் மற்றும் ஆம்புலன்ஸ் தயார் நிலையில் இருக்க வேண்டும். மலைக்கோவில், மலை அடிவாரப்பகுதி, வண்டாடும் பொட்டல் ஆகிய பகுதிகளில் தீயணைப்பு வாகனத்துடன் தீயணைப்பு துறையினர் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

போதிய குடிநீர், மின்விளக்கு வசதி செய்ய வேண்டும். போதிய துப்புரவு பணியாளர்களை நியமித்து குப்பைகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும். போதிய அளவில் தற்காலிக கழிப்பறைகளை அமைக்க வேண்டும்.

Therumalikovil 33 - 2026

பண்பொழி திருமலைக்குமார சுவாமி கோவிலில் கும்பாபிஷேக விழா 15 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது. மலைக்கோவிலுக்கு செல்வதற்கு சாலை அமைத்த பின்னர் முதல் முறையாக கும்பாபிஷேகம் நடக்கிறது. கோவிலில் புதிதாக ராஜகோபுரம் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடக்கிறது.

இந்த விழா சிறப்பாக நடைபெற அனைத்து துறை அலுவலர்கள், பக்தர்கள், பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் ஷில்பா கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கணேஷ்குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில், தென்காசி உதவி கலெக்டர் சவந்தரராஜன், பண்பொழி திருமலைக்குமார சுவாமி கோவில் துணை ஆணையர் செல்லத்துரை, உதவி ஆணையர் அருணாசலம் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

ALSO READ:  மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

Topics

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories