நெய் வியாபாரம் செய்வதாக வங்கி ஊழியரிடம் ரூ.3 கோடி மோசடி; ஒருவர் கைது 4 பேருக்கு போலீஸ் வலைவீச்சு…!

criam 1 - 2026

 

 

திருநெல்வேலியில் வங்கி ஊழியரிடம் ரூ.3 கோடி மோசடி செய்ததாக ஒருவரை போலீசார் கைது செய்தனர். மேலும் 4 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

திருநெல்வேலி பாளையங்கோட்டை காமராஜர் நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 30). இவர், பாளையங்கோட்டையில் உள்ள ஒரு வங்கியில் சட்ட ஆலோசகராக வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது திருநெல்வேலி ஜங்சன் பகுதியை சேர்ந்த தங்கராஜ் என்பவருக்கும், செல்வகுமாருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.

தங்கராஜ் நெய் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். பணம் முதலீடு செய்யுங்கள் என செல்வகுமாரிடம் ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார். இதை உண்மை என நம்பி பல தவணைகளில் ரூ.3 கோடி வரை செல்வகுமார் தங்கராஜிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

தங்கராஜூடன் கூட்டு சேர்ந்து மணிகண்டன், சாமிநாதன், பழனியம்மாள், அபிராமி ஆகியோர் போலியாக ஜி.எஸ்.டி. தயார் செய்து நெய் வியாபாரம் செய்ததாக தெரிகிறது.

இதில் செல்வகுமாருக்கு பணம் கொடுக்காமல் அவர்கள் 5 பேரும் சேர்ந்து ரூ.3 கோடி வரையில் மோசடி செய்துள்ளனர்.

இதுகுறித்து செல்வகுமார் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் பாஸ்கரிடம் புகார் மனு கொடுத்தார். அதன் பேரில் மாநகர குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் தங்கராஜ் உள்பட 5 பேரும் சேர்ந்து செல்வகுமாரிடம் மோசடி செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து நெல்லை மாநகர குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் தங்கராஜை போலீசார் கைது செய்தனர். மணிகண்டன், சாமிநாதன், பழனியம்மாள், அபிராமி ஆகிய 4 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

இச்சம்பவம் அப்பகுதியல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories