கோவில் சிலைகள் உடைப்பு வடமாநில இளைஞர் கைதால் பரபரப்பு…..!

seli udippu - 2026

சென்னையில் உள்ள பூந்தமல்லி அருகே கோவிலுக்குள் புகுந்து சிலைகளை உடைத்த வட மாநில வாலிபரை மடக்கி பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பூந்தமல்லியை அடுத்த பழஞ்சூர் பகுதியில் மிகவும் பழமை வாய்ந்த ஆனந்தவல்லி உடனுறை அகத்தீஸ்வரர் கோவில் உள்ளது.

நேற்று மாலை இந்த கோவிலை சுற்றிலும் சீரமைப்பதற்காக கதவுகளை திறந்து வைத்திருந்தனர்.

அப்போது கோவில் நிர்வாகிகள் வந்து பார்த்தபோது, கோவில் வளாகத்தில் உள்ள அறை ஒன்றின் கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே உள்ளே சென்று பார்த்தபோது 28 வயது மதிக்கத்தக்க வட மாநில வாலிபர் ஒருவர் சட்டை ஏதும் அணியாமல் பீரோவின் பக்கத்தில் நின்று கொண்டிருந்தார்.

இதனை கண்டதும் கதவை வெளிப்புறமாக பூட்டிய கோவில் நிர்வாகிகள் நசரத்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அந்த வாலிபரை கைது செய்து போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர்.

இதன் பிறகு கோவிலுக்குள் நிர்வாகிகள் சென்று பார்த்தபோது, அங்கு சாமிசிலைகள் உடைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். வடமாநில வாலிபர் அந்த 2 சாமி சிலைகளையும் உடைத்து இருப்பது தெரியவந்தது.

மேலும் கோவிலில் இருந்த கண்காணிப்பு கேமராவை பார்த்தபோது, கல்லுடன் கோவிலுக்குள் வந்த வாலிபர் கோவிலுக்குள் இருந்த ராகு மற்றும் நந்தி சிலையை கடப்பாறையால் உடைத்துள்ளார்.

அதில் ராகு சிலை இரண்டு துண்டாக உடைந்து விட்டது. முன் பகுதியில் இருந்த நந்தி சிலையை கடப்பாறையால் உடைத்து சேதப்படுத்தி இருப்பது தெரியவந்தது.

இந்த நபர் கோவிலுக்குள் கொள்ளையடிக்கும் நோக்கத்தில் வந்தாரா? அல்லது சிலைகளை சேதப்படுத்தும் நோக்கில் வந்தாரா? என்ற கோணத்தில் நசரத்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் பிடிபட்ட நபர் மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபரா? அல்லது மனநலம் பாதிக்கப்பட்டது போல் நடிக்கிறாரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வடமாநில வாலிபர் கோவிலுக்குள் புகுந்து சிலைகளை உடைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

Topics

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

பஞ்சாங்கம் மே 12 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

“We are all one”, this realization of oneness is attained in the Varg : Atul Limaye

"We are all one", this realization of oneness is attained in the Varg – Atul LimayeJi - Karyakarta Vikas Varg-Dwitiya inaugurated in Nagpur

வெள்ளை அறிக்கை வெளியிடும் முன்… தேர்தல் அறிக்கையைப் பார்க்கவும்!

தமிழ் மக்கள் யாரை மன்னிக்கவில்லை என்றாலும் ஒரு நடிகனை கண்டிப்பாக மன்னிப்பார்கள்.. வாழ்த்துகள்!

Entertainment News

Popular Categories