spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉள்ளூர் செய்திகள்மாமன்னன் ராஜராஜ சோழன் மீது அவதூறு: பா.ரஞ்சித் மீது வழக்குப் பதிவு!

மாமன்னன் ராஜராஜ சோழன் மீது அவதூறு: பா.ரஞ்சித் மீது வழக்குப் பதிவு!

- Advertisement -

pa ranjith rahul gandhi

தரைப்பட இயக்குனர் பா. ரஞ்சித் மீது தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாள் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப் பட்டுள்ளது.

தமிழ் மண்ணின் பெருமையைப் பறை சாற்றும், தமிழர்களின் மதிப்பையும் மரியாதையையும் கௌரவத்தையும் உலக அரங்கில் உயர்த்திப் பிடிக்கும் மாமன்னன் ராஜராஜ சோழன் குறித்து தரம் தாழ்ந்தும் கேவலமாகவும் பேசிய  திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் மீது திருப்பனந்தாள் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அடுத்த திருப்பனந்தாளில் நடந்த கூட்டம் ஒன்றில் இயக்குநர் பா.ரஞ்சித் பேசிய போது, தமிழகத்தில் சாதிய கொடுமைகள் அதிகமாக நிகழ்ந்தது தஞ்சை டெல்டா பகுதியில் தான். அதற்கு முக்கிய காரணம் நிலங்கள். அதன் அடிப்படையில் பல பிரச்சனைகள் நடந்துள்ளன. ராஜராஜ சோழன் காலம் தான் பொற்காலம் என்பார்கள். ஆனால் ராஜராஜ சோழன் ஆண்ட காலம் தான் இருண்டகாலம்.

ranjithh3சாதி ரீதியாக மிகப்பெரிய ஒடுக்குமுறை ஆரம்பிக்கப்பட்டது ராஜராஜசோழன் ஆட்சி காலத்தில் தான். சாதியம் தலை தூக்கியதும் அப்போதுதான்! மிகப்பெரிய சூழ்ச்சியின் அடிப்படையில் எங்களது நிலங்கள் முழுவதும் பறிக்கப்பட்டது அவரது ஆட்சிக் காலத்தில்தான். அதனால் தான் இருண்டகாலம் என்கிறோம் என்றெல்லாம் மிக மோசமாகவும் தரம் தாழ்ந்தும், தமிழர்களின் பெருமையை சிதைக்கும் விதமாகவும் பேசினார்.

பா.ரஞ்சித்தின் இந்தப் பேச்சுக்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. பலரும் பா.ரஞ்சித்தின் இந்தப் பேச்சை கண்டித்தனர்.  தேசியப் பாதுகாப்பு சட்டத்தில் அவரை கைது செய்ய வேண்டும் என தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மகேஸ்வரனிடம் இந்து மக்கள் கட்சியினர் புகார் மனு அளித்துள்ளனர். நெல்லையில் விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் புகார் அளிக்கப் பட்டது.

இந்நிலையில் ராஜராஜ சோழன் குறித்து தரம் தாழ்ந்து பேசியதாக இயக்குநர் பா.ரஞ்சித் மீது திருப்பனந்தாள் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சாதி, இனம், மொழி மூலம் மோதலைத் தூண்டும் வகையில் பேசுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

1 COMMENT

  1. வர வர திரைத்துறையினரின் அரசியல் பிரவேசம் தாங்க முடியலை. அவனவனுக்கு அரசியல் பேசறாங்க. ஒரு எம் ஜி ஆர் முதல்வராக ஆனாலும் ஆனார். அப்பறம் சினிமாவில் நடிக்கும் எல்லோருமே முதல்வர் ஆகும் கனவில் தான் இருக்கிறார்கள். நடிச்சோமா பணத்தை சேத்தோமான்னு இல்லாது, என்ன அரசியல் வேண்டிக்கிடக்கு? ரஞ்சித் செய்வதெல்லாம் ரொம்ப ஓவர் தான். ஆ ஊ ன்னா தலித், தாழ்த்தப்பட்டவர், திராவிடர், தமிழன் என்று சொல்லிக்கொள்ள வேண்டியது. தரம் தாழ்ந்துகொண்டே வரும் மனிதர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe