நீட் தேர்வால் டாக்டராகும் நம்பிக்கை பெற்ற சலூன் கடைக்காரரின் மகன்!

itk neet - 2026

#துளசிநாதன் நீட் தேர்வில் வெற்றிபெற்ற சண்முகம் என்ற  ஏழை சலூன் கடைக்காரரின் மகன்.

திருச்சி மாவட்டம் காவேரி கரை ஓரத்தில் சிறுகமணி என்கின்ற ஒரு கிராமம். இந்த கிராமத்தில் திரு சண்முகம் மகேஸ்வரி தம்பதியரின் மகன் துளசி நாதன்.  ஜனனி என்கின்ற தங்கை ஒன்பதாம் வகுப்பு படிக்கிறாள். சண்முகம் ஒரு முடிதிருத்தும் தொழிலாளி.

சிறிய அளவில் சலூன் கடை நடத்தி வருகிறார். தினசரி 500 லிருந்து 600 வரை வருமானம் இருக்கும். வீட்டில் சண்முகத்தின் அம்மா அப்பா பெரியவர்கள் இருக்கிறார்கள். மாணவன் துளசி நாதன் திருச்சியில் உள்ள ஜெயேந்திரா பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்தார்.

மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வில் 399 மதிப்பெண் பெற்று வெற்றி பெற்றிருக்கிறார். இந்த செய்தி அறிந்து அந்த மாணவனை வாழ்த்துவதற்காக அவர்களின் இல்லத்திற்கு சென்றிருந்தேன். அப்பொழுது அவர்கள் சொல்லிய செய்தி என்னை நெகிழ்ச்சியடைய செய்தது.

சாதாரண குடும்பம் ஏழையான எங்களுக்கு மருத்துவப் படிப்பு என்பது கனவிலும் எட்டாத ஒரு கனியாகவே இருந்தது . ஆனால்  நீட் தேர்வு வந்ததனால்  அந்தத் தேர்வில் நன்கு படித்து  வெற்றி பெற்று எந்தவிதமான பண பின்புலம் இல்லாத என்னைப் போன்றவர்களும் மருத்துவத்துறையில் படிக்க முடியும் என்கின்ற நம்பிக்கை பிறந்திருக்கிறது. மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களையும் மாண்புமிகு தமிழக முதல்வரையும் நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்க விரும்புகிறோம்.

ALSO READ:  டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

மேலும் என்னைப் போன்ற ஏழை மாணவ மாணவியர்கள் நீட் தேர்வில் வெற்றி பெற்று அவர்களுக்கு அரசு மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைக்க பெற்றால் பேருதவியாக இருக்கும் என்றார். மேலும் என்னைப்போன்ற மாணவர்கள் மருத்துவ படிப்புக்கு தேவையானகல்வி கட்டணத்தை கட்ட இயலாத நிலையில்

அரசாங்கம் உதவினால் நீட் தேர்வில் மாணவர்கள் வெற்றி என்பது இன்னும் அதிகமாக தமிழகத்தில் வரும் என்றார். இதுகுறித்து மாண்புமிகு பாரதப் பிரதமர்,
மாண்புமிகு தமிழக முதல்வர்  மாண்புமிகு கல்வி அமைச்சர் மாண்புமிகு மருத்துவ அமைச்சர் ஆகியோர் ஒரு செயல் திட்டத்தை வகுத்து மாணவர்களுக்கு உதவிட
இந்து தமிழர் கட்சியின் சார்பில் கோரிக்கை முன்வைக்கிறோம்.

நீட் தேர்வில் வெற்றி பெற்றமைக்கு தாங்கள் பாரதப் பிரதமருக்கும் , மாண்புமிகு முதல்வருக்கும் நன்றி  தெரிவிக்க விரும்புகிறார்கள். இதற்கு நேரம் ஒதுக்கி தந்து உதவிடுமாறு வேண்டுகோள் முன்வைக்கிறோம்.

இவருடைய கல்விக்கான கட்டணம் செலுத்த உதவ விரும்பினால் பேருதவியாக இருக்கும். சமுதாயத்தில் நல்ல விஷயங்களை பாராட்டக்கூடிய, வாழ்த்த கூடிய நேர்மறையான சிந்தனைகளை  நாம் உருவாக்கிட வேண்டும். மருத்துவக் கல்லூரியில்
சேர்ந்து படித்து மக்களுக்கு  தொண்டு செய்திட வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

ALSO READ:  மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

– இராம. இரவிக்குமார் (நிறுவன தலைவர், இந்து தமிழர் கட்சி)

1 COMMENT

  1. துளசி நாதன் போன்ற மாணவர்கள் முழு ஈடுபாட்டுடனும் முழு முயற்சியுடனும் படித்தால் நீட் போன்ற பல தேர்வுகளில் எளிதாக வென்று வாழ்வில் முன்னுக்கு வரலாம். அதை விட்டு விட்டு, கோழைத்தனமாக படிக்காமலேயே ஒதுக்கீடு என்ற போர்வையில் படிப்பில் விலக்கு வேண்டும், வேலை வாய்ப்பு வேண்டும் என்று ஒரு சிலர் நீட் தேர்வை எதிர்க்கின்றனர். இன்னும் சில மாணவர்கள் தற்கொலை கூட செய்துள்ளனர். அவர்களை இந்த சில விஷமிகள் போராளிகளாகவும், சமூக நீதி காவலர்களாகவும், தியாகிகளாகவும் ஆக்கிவிட்டனர். உண்மையிலேயே முன்னேற வேண்டும் என்றால் ஏற்பாடு பட்டாவது படிக்க வேண்டாமா? அதென்ன நுழைவுத்தேர்வு என்றாலே சிலருக்கு பேதி ஏற்படுகிறது? அவர்கள் சோம்பேறிகள், முட்டாள்கள். நோகாமல் நொங்கு தின்ன முடியுமா?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories