பெற்றோர் கண்டிப்பு மாயமான சிறுமிகள்; போலீசார் துரிதமாக மீட்பு….!

 

SERUME - 2026

வேடசந்தூர் அருகே பெற்றோர் கண்டித்ததால் மாயமான 5 சிறுமிகள் திருச்சியில் மீட்கப்பட்டனர்.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே உள்ள செல்லக்குட்டியூரை சேர்ந்தவர் சற்குணம். இவர் குடுகுடுப்பை அடித்து குறி சொல்லும் தொழில் செய்து வருகிறார்.

இவருடைய மகள்கள் பெருமாயி (வயது 16), போதும்பொன்னு (12). இவள் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறாள்.

அதே பகுதியை சேர்ந்த குடுகுடுப்பை தொழில் செய்யும் முத்துக்குமார் மகள்கள் சின்னத்தாய் (16), சுதா (13), மனோகரன் மகள் அபிநயா (13). இவள் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறாள்.

மற்ற 3 சிறுமிகளும் படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டு வீட்டில் இருந்து வருகின்றனர்.

5 சிறுமிகளும் எப்போதும் ஒன்றாக இருந்துள்ளனர். அவர்களை ஒன்றாக இருக்கக் கூடாது என்று அவர்கள் பெற்றோர் கண்டித்து வந்தாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் காலையில் போதும்பொன்னு, அபிநயா 2 பேரும் வழக்கம்போல் பள்ளிக்கு சென்றனர்.

ALSO READ:  ஹரிஜன ஆலயப் பிரவேசம் செய்த வைத்யநாத ஐயரின் பிறந்த தினத்தில் மரியாதை!

அப்போது பெருமாயி, சின்னத்தாய், சுதா ஆகிய 3 பேரும் வெளியே சென்று வருவதாக வீட்டில் இருந்து புறப்பட்டனர்.

மாலையில் 5 சிறுமிகளும் வீடு திரும்பவில்லை. இதனை தொடர்ந்து பெற்றோர்கள் தங்களுடைய உறவினர்களின் வீடுகளில் தேடி பார்த்தனர்.

ஆனால் சிறுமிகள் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால் பதறி போன பெற்றோர்கள் எரியோடு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான 5 சிறுமிகளையும் தேடி வந்தனர்.

இந்நிலையில் மாயமான 5 சிறுமிகளும் திருச்சி மாவட்டம், குழுமணி என்ற ஊரில் தங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதனைதொடா்ந்து அந்த சிறுமிகளின் உறவினர்களுடன், போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

பின்னர் சிறுமிகள் 5 பேரையும் போலீசார் மீட்டு எரியோடு போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர்.

விசாரணையில், 5 பேரும் ஒன்றாக இருக்கக் கூடாது என்று பெற்றோர் கண்டித்ததால் வீட்டை விட்டு வெளியேறியதாக அந்த சிறுமிகள் கூறினர்.

மேலும் குழுமணிக்கு ஏற்கனவே பெற்றோருடன் சென்று இருக்கிறோம். இதனால் அங்கு கோவில் திருவிழாவை பார்க்க சென்றோம்.

ALSO READ:  ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

அங்கு இருந்து ஏதாவது வேலைக்கு செல்ல திட்டமிட்டு இருந்தோம் என்று கூறினர்.

பின்னர் சிறுமிகளுக்கு போலீசார் அறிவுரை கூறினர். அவர்களை வேடசந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

Entertainment News

Popular Categories