பெற்றோர் கண்டிப்பு மாயமான சிறுமிகள்; போலீசார் துரிதமாக மீட்பு….!

 

SERUME - 2026

வேடசந்தூர் அருகே பெற்றோர் கண்டித்ததால் மாயமான 5 சிறுமிகள் திருச்சியில் மீட்கப்பட்டனர்.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே உள்ள செல்லக்குட்டியூரை சேர்ந்தவர் சற்குணம். இவர் குடுகுடுப்பை அடித்து குறி சொல்லும் தொழில் செய்து வருகிறார்.

இவருடைய மகள்கள் பெருமாயி (வயது 16), போதும்பொன்னு (12). இவள் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறாள்.

அதே பகுதியை சேர்ந்த குடுகுடுப்பை தொழில் செய்யும் முத்துக்குமார் மகள்கள் சின்னத்தாய் (16), சுதா (13), மனோகரன் மகள் அபிநயா (13). இவள் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறாள்.

மற்ற 3 சிறுமிகளும் படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டு வீட்டில் இருந்து வருகின்றனர்.

5 சிறுமிகளும் எப்போதும் ஒன்றாக இருந்துள்ளனர். அவர்களை ஒன்றாக இருக்கக் கூடாது என்று அவர்கள் பெற்றோர் கண்டித்து வந்தாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் காலையில் போதும்பொன்னு, அபிநயா 2 பேரும் வழக்கம்போல் பள்ளிக்கு சென்றனர்.

அப்போது பெருமாயி, சின்னத்தாய், சுதா ஆகிய 3 பேரும் வெளியே சென்று வருவதாக வீட்டில் இருந்து புறப்பட்டனர்.

மாலையில் 5 சிறுமிகளும் வீடு திரும்பவில்லை. இதனை தொடர்ந்து பெற்றோர்கள் தங்களுடைய உறவினர்களின் வீடுகளில் தேடி பார்த்தனர்.

ஆனால் சிறுமிகள் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால் பதறி போன பெற்றோர்கள் எரியோடு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான 5 சிறுமிகளையும் தேடி வந்தனர்.

இந்நிலையில் மாயமான 5 சிறுமிகளும் திருச்சி மாவட்டம், குழுமணி என்ற ஊரில் தங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதனைதொடா்ந்து அந்த சிறுமிகளின் உறவினர்களுடன், போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

பின்னர் சிறுமிகள் 5 பேரையும் போலீசார் மீட்டு எரியோடு போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர்.

விசாரணையில், 5 பேரும் ஒன்றாக இருக்கக் கூடாது என்று பெற்றோர் கண்டித்ததால் வீட்டை விட்டு வெளியேறியதாக அந்த சிறுமிகள் கூறினர்.

மேலும் குழுமணிக்கு ஏற்கனவே பெற்றோருடன் சென்று இருக்கிறோம். இதனால் அங்கு கோவில் திருவிழாவை பார்க்க சென்றோம்.

அங்கு இருந்து ஏதாவது வேலைக்கு செல்ல திட்டமிட்டு இருந்தோம் என்று கூறினர்.

பின்னர் சிறுமிகளுக்கு போலீசார் அறிவுரை கூறினர். அவர்களை வேடசந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

Topics

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Entertainment News

Popular Categories