December 6, 2025, 10:55 AM
26.8 C
Chennai

மழைத்துளி காணாத சென்னை நிலம்! 200 நாட்களை தொடும் வேதனை!

tamilnadu drought - 2025

சென்னையில் கடைசியாக மழை பெய்து இன்றோடு 191 நாட்கள் ஆகிவிட்டன. சென்னைவாசிகளின் பிரார்த்தனை ஒருவேளை நிறைவேறாமல் போனால் இது 200 நாளைக் கூட தொட்டுவிடும்.

ஆனால் அப்படி நடக்காது என்று நம்பிக்கை கொடுக்கிறார் தமிழ்நாடு வெதர்மேன்.

அதாவது சென்னை மழையை சந்தித்து 191 நாட்கள் ஆகிவிட்டதாகவும், ஆனால் இது 200 நாட்களை தொடுவதற்கு முன்பு அதாவது ஜூன் 20ம் தேதிக்குப் பிறகு சென்னை மழையை நேருக்கு நேர் சந்திக்கும் என்றும் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:

24 மணி நேரத்தில் 22 மணி நேரமும் மேற்குப் பகுதியில் இருந்து வரும் வறண்ட காற்றின் காரணமாகவே சென்னையில் கடும் வெப்பம் நிலவுகிறது.

கடற்கரையில் இருந்து வீசும் பலவீனமான காற்று காரணமாக வெப்பச்சலனமும் ஏற்படாததால் தான் சென்னையில் ஒருசொட்டு மழையும் பெய்யவில்லை.

மேற்கில் இருந்து வடமேற்கு நோக்கி வறண்ட காற்று வீசுவதால் தென்மேற்குப் பருவ மழையும் சற்று பலவீனமடைந்துள்ளது.

தமிழகத்தில் பொதுவாகவே கடந்த ஒரு சில நாட்களாக மழையின் அளவு குறைந்துள்ளது.

இந்த நிலைமை ஜூன் மாதம் 21ம் தேதிக்குப் பிறகு சற்று மாறும். அதன் பிறகு வெப்பநிலையும் குறைவதை நாம் பார்க்கலாம்.

சென்னையின் புறநகர்ப் பகுதிகளில் மாலை 5.30 மணியளவில் 41 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது.

மே மாதத்தை விடவும் இந்த ஆண்டு ஜூன் மாதம்தான் சென்னையின் மிக கோரமான மாதமாக அமைந்துள்ளது.

மரங்கள் மழையைக் கொண்டு வராது. ஆனால், இன்றைய நாளைப் போல மிக மோசமான வெப்பத்தைக் கொடுக்காமல், வெப்பத்தை தணிக்கும் ஆற்றல் பெற்றது.

அதே சமயம், ஒரு விஷயத்தை நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். சென்னையில் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் பெய்யும் மழையினால், குடிநீர் பிரச்னை நிச்சயம் தீராது.

எனவே தண்ணீர் பிரச்னை தீர்ந்துவிடும் என்று எதிர்பார்க்க வேண்டாம். தென்மேற்கு பருவ மழையால் நிலத்தடி நீர் மட்டமும் உயர வாய்ப்பில்லை.

ஜூன் 21ம் தேதிக்குப் பிறகு தென்மேற்குப் பருவ மழை தீவிரம் எடுத்து அதன் மூலம் கேரளா மற்றும் கர்நாடகாவில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது…

~ என்று பதிவிட்டுள்ளார் தமிழ்நாடு வெதர்மேன்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories