December 5, 2025, 4:02 PM
27.9 C
Chennai

குற்றாலம் சிற்றாறு தூய்மைப்படுத்தும் பணி… ஆட்சியர் ஆய்வு!

IMG 20190616 WA0009 - 2025

குற்றாலத்தில் உருவாகி தாமிரபரணி ஆற்றில் சங்கமிக்கும் புனித நதியான சிற்றாற்றை புனரமைத்து மேம்படுத்தும் பணிகளை மாவட்ட கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ் ஆய்வு செய்தார்.

நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ் நெல்லை மாவட்டத்தில் உள்ள இயற்கை வளங்களை மேம்படுத்தி, நீர் நிலைகளுக்கு புத்துயிர் அளித்து, பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலும் ஒழித்து சுற்றுச்சூழலை பாதுகாக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்.

இதனால் அவர் மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு அவார்டுகளை பெற்று வருவதுடன் பொது மக்களின் பாராட்டுகளையும் பெற்று வருகிறார்.

தாமிரபரணி ஆற்றை சுத்தம் செய்து, தூர்வாறி மேம்படுத்தியதால் கடந்த ஆண்டு மத்திய அரசின் நீர்வளத்துறை, நதிகள் மேம்பாடு, கங்கையை தூய்மை படுத்துதல் அமைச்சர் நிதின் கட்கரியிடம் இருந்து பரிசு பெற்றார்.

அது போல நெல்லை மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலும் ஒழித்ததற்கு தமிழக அரசு மாசு கட்டு பாட்டு வாரியத்தின் சிறப்பு பரிசினை தமிழக முதல்வரிடம் இருந்து பெற்றார்.

கடந்த ஆண்டு குற்றாலத்திற்கு அடிக்கடி வருகை தந்து தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வியாபாரிகள் , பொதுமக்கள் ஒத்துழைப்போடு பிளாஸ்டிக் பொருட்களை அறவே ஒழித்தார். இதனால் குற்றாலம் பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகப்படுத்தாத சுற்றுலா ஸ்தலமாக உயர்ந்தது.

இந்நிலையில் குற்றாலத்தில் உருவாகி சுமார் 85 கி.மீ பயணம் செய்து தாமிரபரணியில் சங்கமிக்கும புனித நதியான சிற்றாற்றை தூர் வாரி, தூய்மை படுத்தி, புனரமைக்கும் திட்டத்தை கடந்த மாதம் 29 தேதி மாவட்ட கலெக்டர் துவக்கி வைத்தார்.

தற்போது சுமார் 5 கி.மீட்டர் தூர்வாரப்பட்ட நிலையில் அப்பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.

இது குறித்து வருவாய் துறை மற்றும் நீர் வளத்துறை அதிகாரிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி பணிகள் தொய்வில்லாமல் நடைபெற உத்தரவு பிறப்பித்தார்.

சிற்றாறு மேம்படுத்தும் திட்டத்தின் மீது மாவட்ட கலெக்டர்  எடுத்து வரும் அக்கறை இப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

விடுமுறை நாளென்றும் பாரமல் பணிகளை ஆய்வு செய்ததை பொது மக்கள் வியந்து பாராட்டினர்.

நிகழ்ச்சியில் இத்திட்டத்தை ஒருங்கிணைத்து செயல்படுத்தி வரும் அண்ணா பல்கலை கழக துணை இயக்குநர் சக்திநாதன், தென்காசி ஆர்.டி.ஒ செளந்த ராஜன், தென்காசி தாசில்தார் சண்முகம், உதவி பொறியாளர் தங்க ஜெய்லானி, நல்ல பெருமாள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories