மக்களவை தேர்தல் பிரச்சார பரிசு; உதயநிதிக்கு இளைஞரணி பதவி….?

uthayanethi - 2026

திமுக இளைஞரணிச் செயலாளர் பதவியை முன்னாள் அமைச்சரான வெள்ளக்கோவில் மு.பெ.சாமிநாதன் ராஜிநாமா செய்துள்ளார். அதைத் தொடர்ந்து திமுகவின் இளைஞரணிச் செயலாளராக உதயநிதி ஸ்டாலின் விரைவில் நியமிக்கப்பட உள்ளார்.

திமுகவில் உள்ள அணிகளில் மிக முக்கியமான அணி இளைஞரணி. இதன் செயலாளராக 40 ஆண்டுகளுக்கும் மேலாக மு.க.ஸ்டாலின் இருந்து வந்துள்ளார்.

2017-இல் கருணாநிதி உடல் நலம் சரியில்லாமல் போனதால், செயல் தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து 2017 ஜனவரி மாதம் இளைஞரணிச் செயலாளராக வெள்ளக்கோவில் மு.பெ.சாமிநாதன் நியமிக்கப்பட்டார்.

இவர் 2006-11-ஆம் ஆண்டு கால திமுக ஆட்சியில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்தவர்.

இந்த நிலையில், சமீபத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து உதயநிதி தமிழகம் முழுவதும் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

பிரசாரத்தில் எப்போதும் திமுகவுக்கு என்று தனி பாணி இருக்கும். அந்த வகையில் இல்லாமல் உதயநிதி ஸ்டாலின் சாதாரண மக்களைக் கவரும் வகையில், எளிய விஷயங்களைப் பேசி பிரசாரத்தில் ஈடுபட்டார்.

இதற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு ஏற்பட்டதாக திமுக தலைமை கருதியது. மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் 37 தொகுதிகளைக் கைப்பற்றி, மக்களவையில் 3-ஆவது பெரிய கட்சியாக திமுக உருவெடுத்துள்ளது.

அதைத் தொடர்ந்து, நாமக்கல், திருச்சி, தேனி உள்பட பல்வேறு மாவட்டங்களில் திமுகவின் கூட்டத்தில் உதயநிதியை இளைஞரணிச் செயலாளராக அறிவிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.

மக்களவைத் துணைத் தலைவராக உள்ள கனிமொழி தலைமையில் தூத்துக்குடியில் நடைபெற்ற கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதற்கிடையில் 2017-இல் இளைஞரணிச் செயலாளராக மு.பெ.சாமிநாதன் பதவியேற்றதில் இருந்து பெரிய அளவில் இளைஞரணிக் கூட்டங்களை நடத்தவில்லை என்றும், அவரது செயல்பாடு சரியில்லை என்றும் திமுக தலைமைக்குத் தெரிவிக்கப்பட்டது. அதனால், உதயநிதிக்கு அந்தப் பதவியை அளிக்கும் முடிவுக்கு மு.க.ஸ்டாலின் வந்துள்ளார்.

தாமாக முன்வந்து ராஜிநாமா: இந்த நிலையில் வெள்ளக்கோவில் சாமிநாதன் தாமாகவே முன்வந்து இளைஞரணி செயலாளர் பதவியை ராஜிநாமா செய்யும் கடிதத்தை மு.க.ஸ்டாலினிடம் கொடுத்துள்ளார்.

அதை ஏற்றுக் கொண்டதாக மு.க.ஸ்டாலின் இன்னும் வெளிப்படையாக அறிவிக்கவில்லை.
எனினும், அந்த ராஜிநாமா விரைவில் ஏற்கப்பட்டு, உதயநிதி இளைஞரணிச் செயலாளராக அறிவிக்கப்பட உள்ளார்.

இளைஞரணிச் செயலாளர் பொறுப்பை 40 ஆண்டுகளுக்கும் மேலாக வகித்து வந்த மு.க.ஸ்டாலின், அதை தலைவராகும் வரை விட்டுக் கொடுக்கவில்லை.

இளைஞரணியில் இருப்பதற்கு குறிப்பிட்ட வயது வரம்பை நிர்ணயித்து பலரை அதில் இருந்து வேறு அணிக்கும் மாற்றிய நிலையிலும் கூட, ஸ்டாலின் தன்னுடைய 64 வயது வரை அந்தப் பதவியை விட்டுக் கொடுக்காமல் இருந்து வந்தார்.

தற்போது, அவரது மகனையே அந்தப் பதவிக்குக் கொண்டு வர உள்ளார்.

எம்.பி. பதவியா?: இளைஞரணிச் செயலாளர் பதவியை உதயநிதிக்காக மு.பெ.சாமிநாதன் விட்டுக் கொடுத்துள்ளதால், அவருக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி கொடுக்க வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கின்றனர்.

மாநிலங்களவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதில் திமுகவுக்கு 3 எம்.பி.க்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. அதில், ஒன்று மு.பெ.சாமிநாதனுக்கு கிடைக்கலாம் என்கிறனர்.

எனினும், அது உறுதிப்படுத்தப்படாத தகவலாகவே இருந்து வருகிறது. மு.பெ.சாமிநாதனுக்குக் கட்சி அளவில் வேறு பதவி ஏதாவது அளிக்கக்கூடும் எனத் தெரிகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

Topics

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

Entertainment News

Popular Categories