மிளகாய் பொடி துாவி ரூ.32 லட்சம் 48 சவரன் நகை துணிகர கொள்ளை….!

RUBA - 2026

மதுரையில் கொரியர் டெலிவரி பாய் போல வந்து 32 லட்சம் ரூபாய் மற்றும் 48 சவரன் தங்க நகைகளை பறித்து சென்ற கொள்ளையர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

மதுரை சின்ன கண்மாய் பகுதியை சேர்ந்தவர் வெற்றிவேல். அவர் அப்பகுதியில் சொந்தமாக ரைஸ் மில் மற்றும் நேரடி விற்பனை கடை நடத்தி வருகிறார்.

இதையடுத்து நேற்று அவரது வீட்டிற்கு கொரியர் கொடுப்பது போல இரண்டு இளைஞர்கள் சென்றுள்ளனர்.

பின்னர் அவர்கள் தாங்கள் வைத்திருந்த பார்சலை கொடுப்பது போல் பாவ்லா செய்து கையில் வைத்திருந்த மிளகாய் பொடியை வெற்றிவேல் மீது தூவி உள்ளனர்.

மேலும் பார்சல் கட்டும் டேப்பால் அவரது வாயை சுற்றிய இருவரும் பெட்ரூமில் தள்ளி பூட்டினர்.

theruttu 1 - 2026

இதை தொடர்ந்து வீட்டில் இருந்த வயதானவர்கள் இரண்டு பேரையும் மற்றொரு அறையில் தள்ளி பூட்டிவிட்டு முதல் மாடிக்கு சென்ற இரண்டு பெரும் அங்கிருந்த 32 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு கீழே இறங்கினர்.

பின்னர் பூட்டிய அறையில் இருந்த 3 பேரின் கழுத்தில் அணிந்திருந்த 48 சவரன் நகைகளையும் மிரட்டி கழற்றி வாங்கி கொண்டு அங்கிருந்த இருசக்கர வாகனத்தில் தப்பித்து சென்றுவிட்டனர்.

மேலும் இது தொடர்பாக வெற்றிவேல் தெப்பக்குளம் காவல்துறையிடம் புகார் தெரிவித்தார். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அங்கு பதிவான சி.சி.டிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

theruttu 2 - 2026

மேலும் சம்பவ இடத்திற்கு வந்த மதுரை மாநகர் துணை ஆணையர் சசிபோகன் கொள்ளை சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டார்.

இதை தொடர்ந்து அடிக்கடி வீட்டிற்கு வந்து செல்லும் நன்கு தெரிந்த நபர்கள் கொள்ளையடித்தார்களா அல்லது வேறு யாராவது ஈடுபட்டார்களா என்ற கோணத்தில் விசாரணையை நடத்தி வருகின்றனர்.

மேலும் மக்கள் நடமாட்டம் உள்ள மாநகரத்தின் மையப்பகுதியில் பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories