மிளகாய் பொடி துாவி ரூ.32 லட்சம் 48 சவரன் நகை துணிகர கொள்ளை….!

RUBA - 2026

மதுரையில் கொரியர் டெலிவரி பாய் போல வந்து 32 லட்சம் ரூபாய் மற்றும் 48 சவரன் தங்க நகைகளை பறித்து சென்ற கொள்ளையர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

மதுரை சின்ன கண்மாய் பகுதியை சேர்ந்தவர் வெற்றிவேல். அவர் அப்பகுதியில் சொந்தமாக ரைஸ் மில் மற்றும் நேரடி விற்பனை கடை நடத்தி வருகிறார்.

இதையடுத்து நேற்று அவரது வீட்டிற்கு கொரியர் கொடுப்பது போல இரண்டு இளைஞர்கள் சென்றுள்ளனர்.

பின்னர் அவர்கள் தாங்கள் வைத்திருந்த பார்சலை கொடுப்பது போல் பாவ்லா செய்து கையில் வைத்திருந்த மிளகாய் பொடியை வெற்றிவேல் மீது தூவி உள்ளனர்.

மேலும் பார்சல் கட்டும் டேப்பால் அவரது வாயை சுற்றிய இருவரும் பெட்ரூமில் தள்ளி பூட்டினர்.

theruttu 1 - 2026

இதை தொடர்ந்து வீட்டில் இருந்த வயதானவர்கள் இரண்டு பேரையும் மற்றொரு அறையில் தள்ளி பூட்டிவிட்டு முதல் மாடிக்கு சென்ற இரண்டு பெரும் அங்கிருந்த 32 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு கீழே இறங்கினர்.

பின்னர் பூட்டிய அறையில் இருந்த 3 பேரின் கழுத்தில் அணிந்திருந்த 48 சவரன் நகைகளையும் மிரட்டி கழற்றி வாங்கி கொண்டு அங்கிருந்த இருசக்கர வாகனத்தில் தப்பித்து சென்றுவிட்டனர்.

மேலும் இது தொடர்பாக வெற்றிவேல் தெப்பக்குளம் காவல்துறையிடம் புகார் தெரிவித்தார். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அங்கு பதிவான சி.சி.டிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

theruttu 2 - 2026

மேலும் சம்பவ இடத்திற்கு வந்த மதுரை மாநகர் துணை ஆணையர் சசிபோகன் கொள்ளை சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டார்.

இதை தொடர்ந்து அடிக்கடி வீட்டிற்கு வந்து செல்லும் நன்கு தெரிந்த நபர்கள் கொள்ளையடித்தார்களா அல்லது வேறு யாராவது ஈடுபட்டார்களா என்ற கோணத்தில் விசாரணையை நடத்தி வருகின்றனர்.

மேலும் மக்கள் நடமாட்டம் உள்ள மாநகரத்தின் மையப்பகுதியில் பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories