February 21, 2026, 9:59 PM
27.3 C
Chennai

மிளகாய் பொடி துாவி ரூ.32 லட்சம் 48 சவரன் நகை துணிகர கொள்ளை….!

RUBA - 2026

மதுரையில் கொரியர் டெலிவரி பாய் போல வந்து 32 லட்சம் ரூபாய் மற்றும் 48 சவரன் தங்க நகைகளை பறித்து சென்ற கொள்ளையர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

மதுரை சின்ன கண்மாய் பகுதியை சேர்ந்தவர் வெற்றிவேல். அவர் அப்பகுதியில் சொந்தமாக ரைஸ் மில் மற்றும் நேரடி விற்பனை கடை நடத்தி வருகிறார்.

இதையடுத்து நேற்று அவரது வீட்டிற்கு கொரியர் கொடுப்பது போல இரண்டு இளைஞர்கள் சென்றுள்ளனர்.

பின்னர் அவர்கள் தாங்கள் வைத்திருந்த பார்சலை கொடுப்பது போல் பாவ்லா செய்து கையில் வைத்திருந்த மிளகாய் பொடியை வெற்றிவேல் மீது தூவி உள்ளனர்.

மேலும் பார்சல் கட்டும் டேப்பால் அவரது வாயை சுற்றிய இருவரும் பெட்ரூமில் தள்ளி பூட்டினர்.

theruttu 1 - 2026

இதை தொடர்ந்து வீட்டில் இருந்த வயதானவர்கள் இரண்டு பேரையும் மற்றொரு அறையில் தள்ளி பூட்டிவிட்டு முதல் மாடிக்கு சென்ற இரண்டு பெரும் அங்கிருந்த 32 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு கீழே இறங்கினர்.

பின்னர் பூட்டிய அறையில் இருந்த 3 பேரின் கழுத்தில் அணிந்திருந்த 48 சவரன் நகைகளையும் மிரட்டி கழற்றி வாங்கி கொண்டு அங்கிருந்த இருசக்கர வாகனத்தில் தப்பித்து சென்றுவிட்டனர்.

மேலும் இது தொடர்பாக வெற்றிவேல் தெப்பக்குளம் காவல்துறையிடம் புகார் தெரிவித்தார். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அங்கு பதிவான சி.சி.டிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

theruttu 2 - 2026

மேலும் சம்பவ இடத்திற்கு வந்த மதுரை மாநகர் துணை ஆணையர் சசிபோகன் கொள்ளை சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டார்.

இதை தொடர்ந்து அடிக்கடி வீட்டிற்கு வந்து செல்லும் நன்கு தெரிந்த நபர்கள் கொள்ளையடித்தார்களா அல்லது வேறு யாராவது ஈடுபட்டார்களா என்ற கோணத்தில் விசாரணையை நடத்தி வருகின்றனர்.

மேலும் மக்கள் நடமாட்டம் உள்ள மாநகரத்தின் மையப்பகுதியில் பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories