February 22, 2026, 10:52 PM
27.3 C
Chennai

சுனை நீரை குடித்த 14 ஆடுகள் மா்மான முறையில் மரணம் ; தண்ணீரில் விஷம் கலப்பா? அதிகாரிகள் விசாரணை….!

ADU DEATH 5 1 - 2026
கிருஷ்ணகிரி அருகே சுனை நீரில் மர்ம கும்பல் விஷம் கலந்ததால் அந்த தண்ணீரை குடித்த 14 ஆடுகள் பரிதாபமாக இறந்தன.

கிருஷ்ணகிரியில் ராயக்கோட்டை சாலையில் உள்ள அகரம் ஊராட்சிக்குட்பட்ட காட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் பரமசிவம்(70). விவசாயி. இவர் தனது வீட்டில் 17 ஆடுகள் வளர்த்து பிழைத்து வருகிறார்.

தினமும் தன்னுடைய ஆடுகளை அருகில் உள்ள காட்டில் மேய்ச்சலுக்கு விட்டு அந்த பகுதியில் உள்ள சுனையில் ஆடுகளை நீர் அருந்த செய்வது வழக்கம்.

இந்நிலையில், நேற்று காலை வழக்கம்போல் பரமசிவம் ஆடுகளை மேய்ச்சலுக்காக அழைத்து சென்றுள்ளார்.

மதியம் 2 மணியளவில் ஆடுகள் அந்த பகுதியில் உள்ள சுனையில் தண்ணீரை குடித்துள்ளன. தண்ணீரை குடித்த சிறிது நேரத்தில் ஆடுகள் ஒவ்வொன்றாக வாயில் ரத்தம் வந்து இறந்துள்ளன. 14 ஆடுகளும் அடுத்தடுத்து இறந்ததை கண்டு பரமசிவம் அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து அப்பபகுதி பொதுமக்களுக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் அங்கு விரைந்து சென்று ஆடுகளை காப்பாற்ற முயன்றனர். ஆனால் பரிதாபமாக 14 ஆடுகளும் ஒன்றன்பின் ஒன்றாக பரிதாபமாக இறந்துள்ளது.

இதுகுறித்து தகவலறிந்து தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் ராமகவுண்டர் அப்பகுதிக்கு சென்றார்.

ஆடுகள் பலியானது குறித்து காவல்துறை, கால்நடை பராமரிப்பு துறை, வருவாய்த்துறைக்கு தகவல் தெரிவித்தார்.

அவர்கள் அங்கு சென்று விசாரணை நடத்தினர். விஷம் கலந்த தண்ணீரை ஆடுகள் குடித்ததால் அவை இறந்ததாக கூறப்படுகிறது.

தண்ணீரை குடிக்காததால் 3 ஆடுகள் உயிர் தப்பியது. இறந்த ஆடுகளை கண்டு விவசாயி பரமசிவம் கண்ணீர் விட்டு அழுதார்.

இதுகுறித்து தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் ராமகவுண்டர் கூறுகையில், ஆடுகள் தண்ணீர் குடிக்க கூடிய சுனையில் யாரோ விஷத்தை கலந்து உள்ளனர்.

இறந்த ஆடுகளின் மதிப்பு ரூ.1.50 லட்சம் என்பதால், பாதிக்கப்பட்ட விவசாயி பரமசிவத்திற்கு உரிய இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுனையில் விஷம் கலந்தவர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

Topics

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories