சுனை நீரை குடித்த 14 ஆடுகள் மா்மான முறையில் மரணம் ; தண்ணீரில் விஷம் கலப்பா? அதிகாரிகள் விசாரணை….!

ADU DEATH 5 1 - 2026
கிருஷ்ணகிரி அருகே சுனை நீரில் மர்ம கும்பல் விஷம் கலந்ததால் அந்த தண்ணீரை குடித்த 14 ஆடுகள் பரிதாபமாக இறந்தன.

கிருஷ்ணகிரியில் ராயக்கோட்டை சாலையில் உள்ள அகரம் ஊராட்சிக்குட்பட்ட காட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் பரமசிவம்(70). விவசாயி. இவர் தனது வீட்டில் 17 ஆடுகள் வளர்த்து பிழைத்து வருகிறார்.

தினமும் தன்னுடைய ஆடுகளை அருகில் உள்ள காட்டில் மேய்ச்சலுக்கு விட்டு அந்த பகுதியில் உள்ள சுனையில் ஆடுகளை நீர் அருந்த செய்வது வழக்கம்.

இந்நிலையில், நேற்று காலை வழக்கம்போல் பரமசிவம் ஆடுகளை மேய்ச்சலுக்காக அழைத்து சென்றுள்ளார்.

மதியம் 2 மணியளவில் ஆடுகள் அந்த பகுதியில் உள்ள சுனையில் தண்ணீரை குடித்துள்ளன. தண்ணீரை குடித்த சிறிது நேரத்தில் ஆடுகள் ஒவ்வொன்றாக வாயில் ரத்தம் வந்து இறந்துள்ளன. 14 ஆடுகளும் அடுத்தடுத்து இறந்ததை கண்டு பரமசிவம் அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து அப்பபகுதி பொதுமக்களுக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் அங்கு விரைந்து சென்று ஆடுகளை காப்பாற்ற முயன்றனர். ஆனால் பரிதாபமாக 14 ஆடுகளும் ஒன்றன்பின் ஒன்றாக பரிதாபமாக இறந்துள்ளது.

ALSO READ:  ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க... நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

இதுகுறித்து தகவலறிந்து தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் ராமகவுண்டர் அப்பகுதிக்கு சென்றார்.

ஆடுகள் பலியானது குறித்து காவல்துறை, கால்நடை பராமரிப்பு துறை, வருவாய்த்துறைக்கு தகவல் தெரிவித்தார்.

அவர்கள் அங்கு சென்று விசாரணை நடத்தினர். விஷம் கலந்த தண்ணீரை ஆடுகள் குடித்ததால் அவை இறந்ததாக கூறப்படுகிறது.

தண்ணீரை குடிக்காததால் 3 ஆடுகள் உயிர் தப்பியது. இறந்த ஆடுகளை கண்டு விவசாயி பரமசிவம் கண்ணீர் விட்டு அழுதார்.

இதுகுறித்து தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் ராமகவுண்டர் கூறுகையில், ஆடுகள் தண்ணீர் குடிக்க கூடிய சுனையில் யாரோ விஷத்தை கலந்து உள்ளனர்.

இறந்த ஆடுகளின் மதிப்பு ரூ.1.50 லட்சம் என்பதால், பாதிக்கப்பட்ட விவசாயி பரமசிவத்திற்கு உரிய இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுனையில் விஷம் கலந்தவர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories