December 6, 2025, 2:15 PM
29 C
Chennai

சுனை நீரை குடித்த 14 ஆடுகள் மா்மான முறையில் மரணம் ; தண்ணீரில் விஷம் கலப்பா? அதிகாரிகள் விசாரணை….!

ADU DEATH 5 1 - 2025
கிருஷ்ணகிரி அருகே சுனை நீரில் மர்ம கும்பல் விஷம் கலந்ததால் அந்த தண்ணீரை குடித்த 14 ஆடுகள் பரிதாபமாக இறந்தன.

கிருஷ்ணகிரியில் ராயக்கோட்டை சாலையில் உள்ள அகரம் ஊராட்சிக்குட்பட்ட காட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் பரமசிவம்(70). விவசாயி. இவர் தனது வீட்டில் 17 ஆடுகள் வளர்த்து பிழைத்து வருகிறார்.

தினமும் தன்னுடைய ஆடுகளை அருகில் உள்ள காட்டில் மேய்ச்சலுக்கு விட்டு அந்த பகுதியில் உள்ள சுனையில் ஆடுகளை நீர் அருந்த செய்வது வழக்கம்.

இந்நிலையில், நேற்று காலை வழக்கம்போல் பரமசிவம் ஆடுகளை மேய்ச்சலுக்காக அழைத்து சென்றுள்ளார்.

மதியம் 2 மணியளவில் ஆடுகள் அந்த பகுதியில் உள்ள சுனையில் தண்ணீரை குடித்துள்ளன. தண்ணீரை குடித்த சிறிது நேரத்தில் ஆடுகள் ஒவ்வொன்றாக வாயில் ரத்தம் வந்து இறந்துள்ளன. 14 ஆடுகளும் அடுத்தடுத்து இறந்ததை கண்டு பரமசிவம் அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து அப்பபகுதி பொதுமக்களுக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் அங்கு விரைந்து சென்று ஆடுகளை காப்பாற்ற முயன்றனர். ஆனால் பரிதாபமாக 14 ஆடுகளும் ஒன்றன்பின் ஒன்றாக பரிதாபமாக இறந்துள்ளது.

இதுகுறித்து தகவலறிந்து தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் ராமகவுண்டர் அப்பகுதிக்கு சென்றார்.

ஆடுகள் பலியானது குறித்து காவல்துறை, கால்நடை பராமரிப்பு துறை, வருவாய்த்துறைக்கு தகவல் தெரிவித்தார்.

அவர்கள் அங்கு சென்று விசாரணை நடத்தினர். விஷம் கலந்த தண்ணீரை ஆடுகள் குடித்ததால் அவை இறந்ததாக கூறப்படுகிறது.

தண்ணீரை குடிக்காததால் 3 ஆடுகள் உயிர் தப்பியது. இறந்த ஆடுகளை கண்டு விவசாயி பரமசிவம் கண்ணீர் விட்டு அழுதார்.

இதுகுறித்து தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் ராமகவுண்டர் கூறுகையில், ஆடுகள் தண்ணீர் குடிக்க கூடிய சுனையில் யாரோ விஷத்தை கலந்து உள்ளனர்.

இறந்த ஆடுகளின் மதிப்பு ரூ.1.50 லட்சம் என்பதால், பாதிக்கப்பட்ட விவசாயி பரமசிவத்திற்கு உரிய இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுனையில் விஷம் கலந்தவர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories