‘கும்பகோணம் ஐயர்’ சிக்கனாம்?! அசிங்கம் பிடித்த கிறிஸ்துவ சதி!

Published:

hotelmilagu - 2026மதுரையில் கும்பகோணம் ‘ஐயர் சிக்கன்’ என்ற விளம்பரத்தால் இன்று சமூக வலைத்தளங்களில் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரையில் வடக்கு மாசி வீதியில் வாடகைக் கட்டிடத்தில் இயங்கி வருகிறது அசைவ உணவகமான ஹோட்டல் மிளகு. கடந்த 2008ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருவதாகக் கூறப்படும் இந்த அசைவ உணவகத்தில் பெரிதாக வியாபாரம் இருப்பதில்லை. மதுரையில் சைவ உணவுப் பிரியர்கள் அதிகம் வசிக்கும் மேலமாசி வீதி, வடக்கு மாசி வீதியைச் சேர்ந்தவர்களை இலக்காக கொண்டு செயல்படத் தொடங்கிய இந்த ஹோட்டல், ஆன்லைனில் வளர்ந்துவரும் உணவு நிறுவனங்களின் வளர்ச்சியைக் கண்டு தாங்களும் ஆன்லைன் மூலம் வியாபாரத்தைத் தொடங்கியுள்ளது.

iyerchicken - 2026இருப்பினும் அதிலும் போதிய அளவுக்கு வியாபாரம் நடக்கவில்லை என்று கூறப் படுகிறது. மேலும், தரமற்ற உணவு மற்றும் டெலிவரி இவற்றால் சர்ச்சைகளை சந்தித்து வந்துள்ளது. அண்மைக் காலமாக இந்த உணவகத்தை இழுத்து மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. அப்போது இதில் பணிபுரிந்த சிலர் கடந்த ஒரு வருடங்களில் இங்கிருந்து வேலையைத் துறந்து வெளியிடங்களுக்குச் சென்றுள்ளனர்.

ALSO READ:  சதுரகிரி கோவிலுக்கு தாணிப்பாறை வழியாக மட்டும் செல்ல வேண்டும்: ஆட்சியர் உத்தரவு!

இந்நிலையில், தங்கள் அசைவ உணவகத்துக்கு விளம்பரம் தேட என்ன செய்யலாம் என்று இதன் உரிமையாளர்கள் மற்றும் மேலாளர் யோசித்த போது, கிறிஸ்துவர்களான அவர்களுக்குத் தோன்றியதுதான், வழக்கம் போல் சினிமாக்காரர்கள் கையாளும் பிராமண கேலி உத்தி. அதன்படி, திடீரென்று இன்று இந்த உணவகத்தில் பேஸ்புக் பக்கத்தில் வேண்டுமென்றே,   கும்பகோணம் “ஐயர்” சிக்கன் என்ற பெயரில் ஒரு விளம்பரத்தை வெளியிட்டுள்ளனர்.

hotelmilagu3 - 2026ஹிந்துக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி மத மோதலைத் தூண்டும் வகையில், கிறிஸ்துவர்களான அவர்கள் வேண்டுமென்றே செய்த இந்தச் செயலால், எதிர்பார்த்தது போலவே, எதிர்ப்பு கிளம்பியது. சமூக வலைத்தளங்களில் இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. பலரும் இந்த விளம்பரத்தை வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக் மூலம் பகிர்ந்து கொண்டனர்.

சிலர் அந்த விளம்பரத்தில் கொடுக்கப் பட்ட செல்பேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். இதை அடுத்து, தாங்கள் முன்னதாகவே தீர்மானித்திருந்த படி, தங்களுக்கு போன் செய்தவர்களிடம் ஒரு மன்னிப்பு கேட்டுக் கொண்டு, இது அறியாமல் நடந்துவிட்ட தவறு, நாங்கள் அதை எங்கள் பேஸ்புக் பக்கத்தில் இருந்து எடுத்து விடுகிறோம் என்று கூறியுள்ளனர்.

ALSO READ:  ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

மேலும், பிராமணர் சங்க நிர்வாகிகளும், சமூக ஆர்வலர்களும் அந்த விளம்பரம் வெளியிட்ட நிர்வாகத்திடம், செல்பேசி வாயிலாக அணுகி விளக்கம் கேட்டனர். அவர்களிடமும், இது தெரியாமல் நடந்து விட்டது என்றும் அதற்கான மறுப்பு மற்றும் மன்னிப்பு கடிதமும் கொடுத்து விடுகிறோம் என்றும் கூறியுள்ளனர்.

hotemmilagu - 2026இந்நிலையில், இந்த நிறுவனத்தின் இணையதளத்தில் உள்ள நான்கு எண்களைத் தொடர்பு கொண்டு, நமது குழுவிலும் விளக்கம் கேட்கப் பட்டது. அதில் ஒருவர், தாம் தற்போது பணியில் இல்லை என்றும் ஒன்றரை வருடம் முன்பே பணியில் இருந்து விலகிவிட்டதாகவும் கூறினார். மேலும் சில எண்களில் ஜூடே ஆர்ம்ஸ்ட்ராங் (9791757661) மற்றும் சாம் தேவாரம் (9842868047) நாம் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்க முயன்றோம். காண்க..: http://hotelmilagu.com/contact.html

ஆனால் சரியான பதில் இல்லை. இருப்பினும், தெரியாமல் நடந்துவிட்டது என்றுதான் பதில் கிடைத்ததே தவிர, ஒரு சமுதாயத்தினை இழிவு படுத்தும் வகையில் வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் மத ரீதியாக பதற்றம் ஏற்படும் வகையில் செயல்படுவது, தெரியாமல் நடக்கும் பிழையா என்று பலரும் அந்த உணவகத்துக்கு நேரில் சென்று கேள்வி எழுப்பினர்.

ALSO READ:  சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

milagu letter - 2026அப்போதும், இதை பெரிது படுத்தாதீர்கள் என்றுதான் மேலாளர் தரப்பில் கூறப் பட்டதே தவிர, தங்களது உள்நோக்க செயலுக்கான விளைவை அவர்கள் உணர்ந்ததாகத் தெரியவில்லை.

இந்தச் சம்பவம் குறித்து அறிந்ததும் அங்கே வந்த காவல்துறை உதவி ஆய்வாளர் ஒருவர், அங்கே குவிந்தவர்களை சமாதானப் படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார்.

hotelmilagu4 - 2026ஏற்கெனவே மத உணர்வைப் புண்படுத்தும் வகையில் மாட்டிறைச்சி விவகாரத்தில் பதற்றத்தை சிலர் ஏற்படுத்திக் கொண்டிருக்க, மேலும் மேலும் சீண்டிக் கொண்டிருக்கும் இது போன்ற மதவெறியர்கள் என்றுதான் திருந்தப் போகிறார்களோ என்று அங்கிருந்தவர்கள் கூறினர்.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img