வாராது வந்த மாமணி… பெய்த பெருமழையை… முத்தமிட்டு வரவேற்ற விவசாயி!

Published:

rainwater telangana - 2026

தன் வயலில் விழுந்த மழை நீரை வணங்கி முத்தமிட்ட விவசாயியின் புகைப்படம் இப்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. வாராது வந்த மாமணியாய் நிலத்தில் இறங்கிய மழை நீரைக் கண்டு, விவசாயியின் மகிழ்ச்சிக் கொண்டாட்டம் ஒரு புகைப்படமாக இப்போது உலா வருகிறது.

மழை பொய்த்தால் நிலைமை எவ்வாறு கடினமாக இருக்கும் என்பதற்கு இரு தெலுங்கு மாநிலங்களின் தற்போதைய நிலையே உதாரணம்.

பல ஆண்டுகளாக தொடர்ந்து சரியான மழை இன்றி தத்தளித்த நிலைமாறி இன்று ஒரேயடியாக கொட்டித் தீர்த்த கன மழை விவசாயிகளை ஆனந்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஒரு நாள் பெய்த பெருமழைக்கே கால்வாய்களும் ஏரிகளும் நிரம்பி வழிகின்றன. காய்ந்து கிடந்த தன் வயல் நனைந்து மழை நீரால் நிறைந்த விவசாயியின் ஆனந்தம் வயலை வணங்கி முத்தமிடத் தூண்டியது.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img