அத்திவரதர் … கல்வெட்டு அரசியல்! 1979ம்… 2019ம்… ம்ம்…!

athivarathar kalvettu1 - 2026

நாற்பதாண்டுகளுக்கு முன்னர் வெளியில் எடுக்கப்பட்ட ஆதி அத்தி வரத பெருமானை மீண்டும் உள்ளே எழுந்தருள செய்யும் போது வைக்கப்பட்ட கல்வெட்டில் எந்த அரசியல்வாதிகள் அதிகாரிகள் பெயர்கள் பொறிக்கப்படவில்லை!

அதன் முந்தைய கல்வெட்டும் கூட அப்படித்தான் வைக்கப்பட்டிருக்கிறது! ஆகவே இப்போது வைத்த கல்வெட்டில் மட்டும் அரசியல்வாதிகள் அதிகாரிகள் பெயர்களை எதற்காக புகுத்த வேண்டும்!

பழைய கல்வெட்டுகளில் மிகவும் பொதுப்படையாக இந்த வைபவத்தை சொல்லி மிகவும் பொதுப்படையாகவே முடித்துவிட்டனர்! அதுவே ஒரு திருக்கோயில் நிகழ்வை ஆவணப்படுத்தும் அழகு! நல்ல செயல்பாடு!

சென்ற முறை 1979 இல் பெருமாள் வெளியே எழுந்தருளி மீண்டும் உள்ளே வைக்கப்பட்டது புரட்சித் தலைவர் எம்ஜியார் அவர்கள் ஆண்ட காலத்தில், அப்போது வைத்த கல்வெட்டில் கூட எந்த அரசியல்வாதிகள் அதிகாரிகள் பெயர்கள் இல்லையே! இப்போது மட்டும் எதற்கு? என்றே தர்மம் தெரிந்தவர்கள் யாரும் கேட்பார்கள்!

நாற்பது ஆண்டுகாலத்துக்கு ஒருமுறை திருக்கோயில் சம்பிரதாயப்படி வெளி எடுக்கப்பட்ட வரதருக்கு எதற்காக அமைச்சர் பெருமக்கள் சீர்மிகு வழிகாட்ட வேண்டும்!

athivarathar deeparatha - 2026மாவட்ட ஆட்சியருக்கு இதில் என்ன பங்கு வேண்டி கிடக்கிறது! பழைய கல்வெட்டுக்களில் இருக்கும் ஸ்தலத்து ஆச்சாரிய புருஷர்களான தாத்தாச்சாரிய சுவாமிகளின் திருநாமங்கள் இந்த புதிய கல்வெட்டில் எங்கே?

சுவாமி தாத்தாச்சாரியார்களின் திருநாமங்களையும் இந்த கல்வெட்டில் சேர்த்தே இருக்கவேண்டும்! பழைய கல்வெட்டில் இருக்கும் தாத்தாச்சாரிய சுவாமிகளின் திருநாமங்களையே கூட மீண்டும் அப்படியே போட்டிருக் கலாம்! தனி சுவாமிகளின் திருநாமங்கள் வேண்டாம் என்றாலும் கூட பொதுவில் சுவாமி வேதாந்த தேசிகன் மற்றும் சுவாமி ஸ்ரீமத் கல்யாணகோடி லக்ஷ்மி குமார தாத்த தேசிகன் நியமனம் என்றும் கூட போட்டிருக்கலாம்!

அதிகாரிகள் அரசியல்வாதிகள் பெயர்கள் இடம்பெற்றே ஆக வேண்டும் என்றால் கூட, பழைய முறையில் எப்படி உள்ளதோ அப்படியே புது கல்வெட்டு தயார் செய்து கூடுதலாக வேண்டுமானால் இவற்றை செய்யலாமே தவிர, மொத்தமாக இப்படி செய்வது நல்ல முறைமை இல்லையே!

கூடுதலாக வேண்டுமானால் காஞ்சிபுரம் வடகலை சம்பிரதாய திருக்கோயில் கைங்கர்யபரர்கள் என்றோ சுவாமி தாத்த தேசிக திருவம்சத்தார் சபை என்றோ பொதுவில் வடகலை சபை என்றோ கூட போட்டு முத்திரை இடப்பட்டிருக்கலாம்!

தெலுங்கு ரெட்டிகளின் பெயர் தமிழ்நாட்டு திருக்கச்சி கோயில் கல்வெட்டில் வரலாம் சுவாமி வேதாந்த தேசிகன் சுவாமி தாத்த தேசிகன் மற்றும் ஸ்தலத்து சுவாமிகளான தாத்தாச்சாரியார்களின் பெயர்கள் வரக்கூடாதா?

  • வி.முத்துகிருஷ்ணா (Chowkidar V Muthu Krishna)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 30 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

வேதப் பண்பாட்டில் முறையற்றது எதுவுமில்லை!

வேதங்கள் வேறு, புராணங்கள் வேறு என்று புராணங்களை கீழ்மைப்படுத்துவதைப்  பார்க்க முடிகிறது. மேலும் சிலர், இவை எதுவும் தேவையில்லை. வேதாந்தம் மட்டுமே  போதும் என்பார்கள்

ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் நடந்து வரும் நிலையில்...

வளைகுடா போர்கள் தொடர்பில், வதந்திகளை நம்பாதீர்: பிரதமர் வேண்டுகோள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை  உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்.  இந்த மார்ச் மாதம், உலக அளவில் பெரும் கொந்தளிப்பு நிறைந்த மாதமாக இருக்கிறது. 

பஞ்சாங்கம் மார்ச் 29 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் மார்ச் 30 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

வேதப் பண்பாட்டில் முறையற்றது எதுவுமில்லை!

வேதங்கள் வேறு, புராணங்கள் வேறு என்று புராணங்களை கீழ்மைப்படுத்துவதைப்  பார்க்க முடிகிறது. மேலும் சிலர், இவை எதுவும் தேவையில்லை. வேதாந்தம் மட்டுமே  போதும் என்பார்கள்

ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் நடந்து வரும் நிலையில்...

வளைகுடா போர்கள் தொடர்பில், வதந்திகளை நம்பாதீர்: பிரதமர் வேண்டுகோள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை  உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்.  இந்த மார்ச் மாதம், உலக அளவில் பெரும் கொந்தளிப்பு நிறைந்த மாதமாக இருக்கிறது. 

பஞ்சாங்கம் மார்ச் 29 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல்...

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஏப் 1இல்..

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கிய...

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

Entertainment News

Popular Categories