அத்திவரதர் … கல்வெட்டு அரசியல்! 1979ம்… 2019ம்… ம்ம்…!

athivarathar kalvettu1 - 2026

நாற்பதாண்டுகளுக்கு முன்னர் வெளியில் எடுக்கப்பட்ட ஆதி அத்தி வரத பெருமானை மீண்டும் உள்ளே எழுந்தருள செய்யும் போது வைக்கப்பட்ட கல்வெட்டில் எந்த அரசியல்வாதிகள் அதிகாரிகள் பெயர்கள் பொறிக்கப்படவில்லை!

அதன் முந்தைய கல்வெட்டும் கூட அப்படித்தான் வைக்கப்பட்டிருக்கிறது! ஆகவே இப்போது வைத்த கல்வெட்டில் மட்டும் அரசியல்வாதிகள் அதிகாரிகள் பெயர்களை எதற்காக புகுத்த வேண்டும்!

பழைய கல்வெட்டுகளில் மிகவும் பொதுப்படையாக இந்த வைபவத்தை சொல்லி மிகவும் பொதுப்படையாகவே முடித்துவிட்டனர்! அதுவே ஒரு திருக்கோயில் நிகழ்வை ஆவணப்படுத்தும் அழகு! நல்ல செயல்பாடு!

சென்ற முறை 1979 இல் பெருமாள் வெளியே எழுந்தருளி மீண்டும் உள்ளே வைக்கப்பட்டது புரட்சித் தலைவர் எம்ஜியார் அவர்கள் ஆண்ட காலத்தில், அப்போது வைத்த கல்வெட்டில் கூட எந்த அரசியல்வாதிகள் அதிகாரிகள் பெயர்கள் இல்லையே! இப்போது மட்டும் எதற்கு? என்றே தர்மம் தெரிந்தவர்கள் யாரும் கேட்பார்கள்!

நாற்பது ஆண்டுகாலத்துக்கு ஒருமுறை திருக்கோயில் சம்பிரதாயப்படி வெளி எடுக்கப்பட்ட வரதருக்கு எதற்காக அமைச்சர் பெருமக்கள் சீர்மிகு வழிகாட்ட வேண்டும்!

athivarathar deeparatha - 2026மாவட்ட ஆட்சியருக்கு இதில் என்ன பங்கு வேண்டி கிடக்கிறது! பழைய கல்வெட்டுக்களில் இருக்கும் ஸ்தலத்து ஆச்சாரிய புருஷர்களான தாத்தாச்சாரிய சுவாமிகளின் திருநாமங்கள் இந்த புதிய கல்வெட்டில் எங்கே?

சுவாமி தாத்தாச்சாரியார்களின் திருநாமங்களையும் இந்த கல்வெட்டில் சேர்த்தே இருக்கவேண்டும்! பழைய கல்வெட்டில் இருக்கும் தாத்தாச்சாரிய சுவாமிகளின் திருநாமங்களையே கூட மீண்டும் அப்படியே போட்டிருக் கலாம்! தனி சுவாமிகளின் திருநாமங்கள் வேண்டாம் என்றாலும் கூட பொதுவில் சுவாமி வேதாந்த தேசிகன் மற்றும் சுவாமி ஸ்ரீமத் கல்யாணகோடி லக்ஷ்மி குமார தாத்த தேசிகன் நியமனம் என்றும் கூட போட்டிருக்கலாம்!

அதிகாரிகள் அரசியல்வாதிகள் பெயர்கள் இடம்பெற்றே ஆக வேண்டும் என்றால் கூட, பழைய முறையில் எப்படி உள்ளதோ அப்படியே புது கல்வெட்டு தயார் செய்து கூடுதலாக வேண்டுமானால் இவற்றை செய்யலாமே தவிர, மொத்தமாக இப்படி செய்வது நல்ல முறைமை இல்லையே!

கூடுதலாக வேண்டுமானால் காஞ்சிபுரம் வடகலை சம்பிரதாய திருக்கோயில் கைங்கர்யபரர்கள் என்றோ சுவாமி தாத்த தேசிக திருவம்சத்தார் சபை என்றோ பொதுவில் வடகலை சபை என்றோ கூட போட்டு முத்திரை இடப்பட்டிருக்கலாம்!

தெலுங்கு ரெட்டிகளின் பெயர் தமிழ்நாட்டு திருக்கச்சி கோயில் கல்வெட்டில் வரலாம் சுவாமி வேதாந்த தேசிகன் சுவாமி தாத்த தேசிகன் மற்றும் ஸ்தலத்து சுவாமிகளான தாத்தாச்சாரியார்களின் பெயர்கள் வரக்கூடாதா?

  • வி.முத்துகிருஷ்ணா (Chowkidar V Muthu Krishna)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories