தடையை மீறி போராட்டம் பாஜகவை சேர்ந்த 4 ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு ..

சென்னையில் தடையை மீறி போராட்டம் நடத்தியதாக அண்ணாமலை உள்பட பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த 4 ஆயிரம் பேர் மீது எழும்பூர் போலீசார் இன்று வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பெட்ரோல்-டீசல் விலையை தமிழக அரசு குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோட்டை நோக்கி பா.ஜனதா கட்சி பேரணி நடத்தியது.

இதற்காக எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் திரண்டு அக்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்துக்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. அதே நேரத்தில் சென்னையில் 144 தடை உத்தரவும் அமலில் உள்ளது. இந்த உத்தரவு அமலில் இருக்கும்போது யாரும் ஆர்ப்பாட்டம், போராட்டம் போன்ற நிகழ்வுகளில் ஈடுபடக்கூடாது என்று ஏற்கனவே போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில்தான் நேற்று காலையில் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர்கள் அண்ணாமலை தலைமையில் திரண்டு கோட்டை நோக்கி பேரணியாக புறப்பட்டனர். அவர்களை ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே போலீசார் தடுத்து நிறுத்தினர்.

தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பிய பாரதிய ஜனதாவினர் பின்னர் கலைந்து சென்றனர்.

தடையை மீறி போராட்டம் நடத்திய அண்ணாமலை உள்பட பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த 4 ஆயிரம் பேர் மீது எழும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இவர்களில் 3 ஆயிரம் பேர் ஆண்கள், 1000 பேர் பெண்கள் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, கரு.நாகராஜன், நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., பால்கனகராஜ் உள்ளிட்ட 10 மாநில நிர்வாகிகளின் பெயரை குறிப்பிட்டும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

143 ஐ.பி.சி. (அனுமதியின்றி கும்பலாக கூடுதல்), 188 ஐ.பி.சி. (போலீசார் விதித்துள்ள தடையை மதிக்காமல் போராட்டம் நடத்துவது), 41-6 (144 தடை உத்தரவை மீறுதல் ஆகிய 3 சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக போலீசார் கூறும்போது, சென்னையில் 144 தடை உத்தரவு கொரோனா பரவலுக்கு பிறகு தொடர்ந்து அமலில் இருப்பதாகவும், போராட்டம், ஆர்ப்பாட்டங்களுக்கு யாருக்கும் அனுமதி இல்லை. தடையை மீறி போராட்டம் நடத்தியதால் பா.ஜனதா கட்சியினர் மீது வழக்கு போடப்பட்டு உள்ளது என்று தெரிவித்தனர்.

images 85 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories