December 11, 2025, 10:50 PM
25.5 C
Chennai

பணி நிரந்தரம் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்கள் 487 பேர் மீது வழக்குப்பதிவு ..

பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி சென்னையில் நேற்று காலை நர்சுகள் போராட்டம் நடத்திய நிலையில் தற்போது போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்கள்487 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

500x300 1708231 nurse1 - 2025

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட மெட்ரோ ரெயில் நிலையம் அருகேயும், ஓமந்தூரார் அரசு பன்னோக்கு ஆஸ்பத்திரி வாயில் முன்பும் நேற்று ஏராளமான நர்சுகள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவ தேர்வு வாரியத்தின் தேர்வில் (எம்.ஆர்.பி) தேர்ச்சி பெற்று கடந்த 2015-ம் ஆண்டில் இருந்து பெரும்பாலான நர்சுகள் தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றி வருகின்றனர். அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி நேற்று காலை போராட்டம் நடத்தினர்.

பல்வேறு மாவட்டங்களில் இருந்து நர்சுகள் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு தொடர்ந்து வந்து கொண்டிருந்தனர். இதனால் பரபரப்பான அந்த சாலையில், போக்குவரத்து பாதிப்பு ஏற்படும் நிலை உருவானது. இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை திருவல்லிக்கேணி துணை கமிஷனர் பகலவன் தலைமையிலான போலீசார் கலைந்து செல்ல அறிவுறுத்தினர். அப்போது நர்சுகள் கோரிக்கைகளை வலியுறுத்தி உரத்த குரலில் கோஷம் எழுப்பினர். இதையடுத்து பெண் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட நர்சுகளை கைது செய்ய முயன்றனர்.

அப்போது போலீஸ்-நர்சுகள் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. ஆனாலும் பெண் போலீஸ், நர்சுகளுடன் மல்லுக்கட்டி அவர்களை குண்டுக்கட்டாக தூக்கி சென்று போலீஸ் வேன் மற்றும் பஸ்களில் ஏற்றினர். கைது செய்யப்பட்ட சுமார் 400 நர்சுகளும் அருகில் உள்ள சமுதாய நல கூடத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர்.அவர்களின் கோரிக்கைய்ன் படி, பணி நிரந்தரம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதியளித்தார். இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அனுமதியின்றி கூடுதல், அரசு அதிகாரியின் உத்தரவை மீறுதல் உள்ளிட்ட 2 பிரிவுகளில் 487 செவிலியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மண்டல பூஜைக்கான ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்! தரிசன நேரம் நீட்டிப்பால் பக்தர்கள் மகிழ்ச்சி!

மண்டல பூஜைக்கான மெய்நிகர் வரிசை முன்பதிவு துவக்கம்.. சபரிமலை பக்தர்கள் கூட்டம்- தரிசனம் நேரம் நீட்டிப்பு

மூன்வாக்: முதல்முறையாக படத்தின் ஐந்து பாடலையும் பாடிய ஏ.ஆர்.ரஹ்மான்

பிஹைண்ட்வுட்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் 'மூன்வாக்' படத்தில் முதல் முறையாக படத்தின் ஐந்து பாடல்களையும் பாடியுள்ளார் ஏ. ஆர். ரஹ்மான் !!

தேசியக்கவி பாரதிக்கு பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்டோர் புகழாரம்!

தேசிய கவி சுப்பிரமணிய பாரதியார் 1882 டிசம்பர் 11ஆம் தேதி பிறந்தவர்....

பாரதி திருவாசகம்

பத்மன்“ஒருவாசகம் சொன்னாலும் திருவாசகம் ஆக இருக்க வேண்டும்” என்றொரு சொல்வழக்கு உண்டு....

சபரிமலையில் ரோப் கார் சேவை; தேவஸ்வம் போர்டு திட்டம்!

கூட்டத்திற்குப் பின் ஆர்.டி.ஓ., அருண் எஸ்.நாயர் கூறியதாவது: உடல்நலம் பாதிக்கப்பட்டோர், நடப்பதற்கு சிரமப்படுவோர், முதியவர்கள், சிறுவர் - சிறுமியர் பெருவழிப்பாதை, புல்மேடு பாதைகளில் வருவதை தவிர்க்க வேண்டும்.

Topics

மண்டல பூஜைக்கான ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்! தரிசன நேரம் நீட்டிப்பால் பக்தர்கள் மகிழ்ச்சி!

மண்டல பூஜைக்கான மெய்நிகர் வரிசை முன்பதிவு துவக்கம்.. சபரிமலை பக்தர்கள் கூட்டம்- தரிசனம் நேரம் நீட்டிப்பு

மூன்வாக்: முதல்முறையாக படத்தின் ஐந்து பாடலையும் பாடிய ஏ.ஆர்.ரஹ்மான்

பிஹைண்ட்வுட்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் 'மூன்வாக்' படத்தில் முதல் முறையாக படத்தின் ஐந்து பாடல்களையும் பாடியுள்ளார் ஏ. ஆர். ரஹ்மான் !!

தேசியக்கவி பாரதிக்கு பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்டோர் புகழாரம்!

தேசிய கவி சுப்பிரமணிய பாரதியார் 1882 டிசம்பர் 11ஆம் தேதி பிறந்தவர்....

பாரதி திருவாசகம்

பத்மன்“ஒருவாசகம் சொன்னாலும் திருவாசகம் ஆக இருக்க வேண்டும்” என்றொரு சொல்வழக்கு உண்டு....

சபரிமலையில் ரோப் கார் சேவை; தேவஸ்வம் போர்டு திட்டம்!

கூட்டத்திற்குப் பின் ஆர்.டி.ஓ., அருண் எஸ்.நாயர் கூறியதாவது: உடல்நலம் பாதிக்கப்பட்டோர், நடப்பதற்கு சிரமப்படுவோர், முதியவர்கள், சிறுவர் - சிறுமியர் பெருவழிப்பாதை, புல்மேடு பாதைகளில் வருவதை தவிர்க்க வேண்டும்.

நீதியரசர்களுக்கு மிரட்டல்; நீதித் துறையை இழிவுபடுத்தும் திமுக.,!

நீதியரசர்களுக்கு மிரட்டல் விடுக்கும் நோக்கமா? நீதித்துறையை இழிவுபடுத்தும் திமுக.,வை இந்துமுன்னணி வன்மையாகக்...

பஞ்சாங்கம் டிச.11 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நீதிபதியுடன் அரசியல் செய்து, திமுக., தங்கள் தலையில் மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளது!

ஜாதி மத பேதமற்ற ஆட்சி அமைப்போம் என உறுதிமொழி ஏற்றவர்கள்,நீதிபதி மீது...

Entertainment News

Popular Categories