முதல்வர் திறந்து வைத்தும் மூடிக் கிடக்கும் வண்டலூர் மகளிர் காவல் நிலையம்..

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தும் மூடிக் கிடக்கும் வண்டலூர் மகளிர் காவல் நிலையத்தை செயல்பட்டுக்கு கொண்டுவர பொதுமக்கள் சார்பில் கோரிக்கை எழுந்துள்ளது.

824005 - 2026

தாம்பரம் மாநகர காவல் ஆணையரகம் தொடங்கப்பட்ட பின் தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையம் மட்டும் செயல்பட்டு வந்தது. இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் வசதிக்காக வண்டலூர் மற்றும் சேலையூரில் புதிதாக அனைத்து மகளிர் காவல் நிலையம் கட்டப்பட்டது.

இதனை கடந்த ஜூன் மாதம் 16-ம் தேதி, சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி காணொலிக் காட்சி மூலம் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். அதன்படி வண்டலூர் மகளிர் காவல் நிலையத்தில் பீர்க்கன்காரணை, ஓட்டேரி, கூடுவாஞ்சேரி, மறைமலைநகர் பகுதிகள் காவல் நிலைய எல்லையாக வகுக்கப்பட்டன.

தற்போது இங்கு ஆய்வாளர் உள்ளிட்ட போலீஸார் நியமனம் செய்யப்பட்டும் யாரும் இதுவரை பதவி ஏற்கவில்லை. இதனால் காவல் நிலையம் பயன்பாட்டுக்கு வராமல் மூடியே கிடக்கிறது. இதனால் புகார் அளிக்கச் செல்லும் பெண்கள் பூட்டிக் கிடக்கும் காவல் நிலையத்தை பார்த்து ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, தாம்பரம் காவல் ஆணையரகத்தின் அனைத்து பகுதிகளிலும் மகளிர் காவல் நிலையம் திறக்க அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. போலீஸார் பற்றாக்குறை காரணமாக பயன்பாட்டுக்கு வருவதில் சற்று காலதாமதம் ஏற்படுகிறது. விரைவில் செயல்பட்டுக்கு வரும் என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

Entertainment News

Popular Categories