
‘பொன்னியின் செல்வன்’ படத்தில் ‘பொன்னி நதி’ பாடலை பாடிய பிரபல பின்னணி பாடகர் பம்பா பாக்யா மாரடைப்பால் இன்று காலமானார்
பிரபல பின்னணி பாடகர் பம்பா பாக்யா மாரடைப்பால் இன்று காலமானார். அவருக்கு வயது 49. இவரது மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், ‘ராவணன்’ படத்தில் இருந்தே பாடகராக பம்பா பாக்யா அறிமுகமானார். எந்திரன் 2.0 படத்தின் ‘புள்ளினங்காள்’, சர்கார் படத்தின் ‘சிம்ட்டாங்காரன்’, பிகில் படத்தின் ‘காலமே’, என பல ஹிட் பாடல்களைப் பம்பா பாடியுள்ளார். தற்போது மணிரத்னம் இயக்கத்தின் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் ‘பொன்னி நதி’ பாடலை பம்பா பாக்யா பாடியுள்ளார்.
அட்லீ இயக்கத்தில் வெளியான பிகில் படத்தில் இடம்பெறும் காலமே காலமே என்கிற பாடல், இவரது குரலில் வெளியான கவனிக்கத்தக்க பாடல் ஆகும். சமீபத்தில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி உள்ள பொன்னியின் செல்வன் படத்தில் இடம்பெறும் பொன்னி நதி என்கிற பாடலில் கூட ஏ.ஆர்.ரகுமான் உடன் இணைந்து பாடி இருந்தார் பம்பா பாக்யா. இப்பாடல் தற்போது பட்டிதொட்டியெங்கும் வைரல் ஹிட்டாகி உள்ளது.





