அ.தி.மு.க. அலுவலகத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு..

images 70 - 2026

ஓபிஎஸ் கட்சி அலுவலகம் செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானதால் அ.தி.மு.க. அலுவலகத்தில் தொடர்ந்து பாதுகாப்பு அளிக்க போலீசார் முடிவு செய்து உள்ளனர்.

ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் நடைபெற்ற மோதல் சம்பவத்துக்கு பிறகு அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும் என்று சென்னை ஐகோர்ட்டு அறிவித்த தீர்ப்பை தொடர்ந்து இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமி கட்சி அலுவலகத்துக்கு சென்று பணிகளை மேற்கொண்டார்.

இதனை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வமும் கட்சி அலுவலகம் செல்ல திட்டமிட்டுள்ளார். இதற்கு பாதுகாப்பு வழங்க கோரி ராயப்பேட்டை போலீசில் ஓ.பி.எஸ். தரப்பில் அளிக்கப்பட்டுள்ள மனு நிராகரிக்கப் பட்டுள்ளது. உரிய அனுமதி வாங்கி வந்தால் மட்டுமே ஓ.பி.எஸ். உள்ளே செல்ல அனுமதிக்க முடியும் என்று போலீசார் கூறியுள்ளனர்.

இருப்பினும் ஓ.பி.எஸ். மற்றும் அவரது ஆதரவாளர்கள் அ.தி.மு.க. தலைமை கழகத்துக்குள் மீண்டும் செல்ல முயற்சித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதை தொடர்ந்து அ.தி.மு.க. அலுவலகத்துக்கு உரிய பாதுகாப்பு அளிக்க கோரி டி.ஜி.பி. அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று மாலை புகார் அளித்துள்ளார்.

அதில், அ.தி.மு.க. அலுவலகத்தில் மீண்டும் மோதல் சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்க உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து அ.தி.மு.க. அலுவலகத்தில் இன்று பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளது.

அங்கு 100 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் இருவருக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல் நீங்கி இயல்பு நிலை திரும்பும் வரை அ.தி.மு.க. அலுவலகத்தில் தொடர்ந்து பாதுகாப்பு அளிக்க போலீசார் முடிவு செய்து உள்ளனர். அ.தி.மு.க. அலுவலகம் முன்பு உள்ள அவ்வை சண்முகம் சாலையில் தீவர கண்காணிப்பில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Entertainment News

Popular Categories