தமிழகத்தில் குடும்ப ஆட்சியை அகற்ற வேண்டும்- பியூஸ் கோயல்

Published:

பாஜக குடும்ப ஆட்சி செய்யும் கட்சி அல்ல.தமிழகத்தில் இருந்து குடும்ப ஆட்சியை அகற்ற வேண்டும். தரமற்ற அரிசியை தமிழக மக்களுக்கு திமுக அரசு வழங்குகிறது. என மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை மடிப்பாக்கத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்று மத்திய ஜவுளித்துறை மந்திரி பியூஸ் கோயல் தெரிவித்துள்ளதாவது: பாஜக குடும்ப ஆட்சி செய்யும் கட்சி அல்ல, தமிழகத்தில் இருந்து குடும்ப ஆட்சியை அகற்ற வேண்டும். மத்திய அரசு தரமான அரிசியை அளித்தாலும், தரமற்ற அரிசியை தமிழக மக்களுக்கு திமுக அரசு வழங்குகிறது. திமுகவினர் பிரதமர் மோடி குறித்து தரம் குறைந்த வார்த்தைகளில் விமர்சிக்கின்றனர். மத்திய அரசின் திட்டங்களால் தமிழக மக்கள் பயனடைந்தாலும் இங்குள்ள அரசு அதனை மறைக்க பார்க்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த விழாவில் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பேசுகையில், ஒரே மாதத்தில் 76 மத்திய அமைச்சர்கள் தமிழகம் வர உள்ளனர். இங்கு, கலெக்டர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவார்கள். சுதந்திர இந்தியாவில், ஒரே நேரத்தில் இத்தனை அமைச்சர்கள் வருவது இது முதல்முறையாகும். இவ்வாறு அவர் கூறினார்.

ALSO READ:  தமிழின் மாண்பை இழிவுபடுத்திய நிதி அமைச்சர் மரியவில்சனுக்கு இந்து முன்னணி கண்டனம்!
gallerye 13412681 3147383 - 2026
images 2022 10 16T153413.286 - 2026
Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img