திருமாவளவனுக்கு சவால் விட்டு… எதிர்பார்த்து… ஏமாந்த காயத்ரி ரகுராம்! டேக்கா கொடுத்த திருமா!

Published:

thiruma gayathri 1 - 2026

ஒத்தக்கி ஒத்த… பாக்கலாம் … சவால்… என்றெல்லாம் பாஜக.,வைச் சேர்ந்த சமூக ஆர்வலரும் நடிகையுமான காயத்ரி ரகுராம் கூறியிருந்தார். அதன் படி, இன்று (நவ.27) காலை 10 மணிக்கு காயத்ரி ரகுராம் மெரினா கடற்கரைக்கு வந்தார். ஆனால் அங்கே திருமாவளவனோ, அவரது கட்சியினரோ எவரும் வரவில்லை.

இதை அடுத்து, தனது சவாலை எதிர்கொள்ள பயந்து திருமாவளவனும், அவரது கட்சியினரும் டேக்கா கொடுத்து நைஸா கழன்று கொண்டதை உறுதி செய்த காயத்ரி ரகுராம், வெகு நேரம் காத்திருந்து, பின்னர் வீடு திரும்பினார்.

Gayathri Raguram - 2026

தனது மெரினா காத்திருப்பு தொடர்பாக, காயத்ரி ரகுராம் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார்.

அதில் அவர், “இன்றைய தினம் மெரினா கடற்கரையில் திருமாவளவனை சந்திப்பதற்காக நான் காத்திருந்தேன். ஆனால் திருமாவளவனை காணவில்லை. அவரிடம் இருந்து எந்தத் தகவலும் வரவில்லை. இதனால் திருமாவளவன் கட்சி தொண்டர்களை நான் ஏமாற்றும் படி ஆகிவிட்டது. உங்கள் அனைவருக்கும் எனது அன்பை தெரிவித்துக் கொள்கிறேன். இனிமேல் ஜாதி, மதம் போன்றவற்றை இழிவாக எந்த எம்பியும், கட்சித் தலைவர்களும் பேச மாட்டார்கள் என்று நம்புகிறேன். ஓர் உண்மையான தலைவன் என்பவன், அனைவரையும் சமமாக பார்க்க வேண்டும். நீதி வெல்லும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

ALSO READ:  அந்த 7 போக்குகள் : 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி சொன்ன விஷயம்!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img