சென்னையில் தமிழகத்தில் தொடரும் மழை..

images 79 - 2026

சென்னையில் வியாழக்கிழமை மாலை நகரின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. 

சென்னையின் பல்வேறு பகுதிகளாக கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இன்று காலை முதல் மழை சற்று இடைவேளை விட்டிருந்த நிலையில் மாலை நகரின் பல்வேறு பகுதிகள் மழைப்பொழிவைப் பெற்றன. 

அம்பத்தூர், அண்ணாநகர், வடபழனி, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் மழை பெய்தது. காலை முதல் வெயில் அடித்து வந்த நிலையில் மாலை மழை பெய்ததால் அலுவலகத்திலிருந்து வீடு திரும்புவோர் சிரமத்திற்குள்ளாகினர். 

சென்னையில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை…

தொடா் மழை காரணமாக சென்னையில் வெள்ளிக்கிழமை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது. கடந்த இரண்டு நாள்களாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்த கனமழையால் முன்னெச்சரிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் இன்று சென்னையில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் தொிவித்துள்ளார்.

தொடர்ந்து பெய்து வரும் கனமழை…

இந்த நிலையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. கடந்த 3 நாட்களாக சென்னை மற்றும் அதனையொட்டி உள்ள மாவட்டங்களில் கனமழை பெய்தது. நேற்று முதல் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. தமிழகத்தில் மேலும் 4 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து வானிலை மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியதாவது:- தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் பரவலாக மழை பெய்துள்ளது. ஒரு மாவட்டத்தில் அதிகன மழையும், 7 மாவட்டங்களில் மிக கனமழையும் பெய்து உள்ளது. சில மாவட்டங்களில் கனமழையும் பெய்து உள்ளது.

இந்த நிலையில் தென் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் லேசான மழை பெய்யும். மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும். செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், அரியலூர், திருச்சி, கரூர், நாமக்கல், தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை பெய்யும், தொடர்ந்து நாளை (4-ந் தேதி) முதல் 7-ந் தேதி வரை தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யும் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

6, 7-ந் தேதிகளில் தென் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். அடுத்த 24 மணி நேரங்களில் டெல்டா மாவட்டங்கள், புதுச்சேரியில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தென் மாவட்டங்கள் மேற்கு தொடர்ச்சி மாவட்டங்களிலும் மழை பெய்யும். சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரில் சில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக சீர்காழியில் 22 செ.மீ., தஞ்சாவூரில் 17 செ.மீ. மழை பெய்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

1785602 annanagar 1 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories