December 6, 2025, 3:05 AM
24.9 C
Chennai

தமிழகம்- முக்கிய அதிகாரிகளின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு சோதனை..

images 61 - 2025

 ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் அதிகாரியான மாநகராட்சி ஆணையர் சிவகுமார் வீடு உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் அரசு அதிகாரிகளின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறை போலீஸார் சோதனை நடத்தினர். இதில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள், ரொக்கம் கைப்பற்றப்பட்டன.

வேலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை (டிஆர்டிஏ) திட்ட இயக்குநராக பணியாற்றுபவர் ஆர்த்தி (40). இவரது கணவர் ஆனந்தமூர்த்தி (46), தருமபுரி மாவட்டத்தில் வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வந்துள்ளார். இவர், அரசுக்கு தகவல் தெரிவிக்காமல் ரூ.1 கோடிக்கு சொத்துகள் வாங்கிய புகாரின்பேரில் கடந்த ஆண்டு பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

சொத்து வாங்கிய புகாரில் ஆனந்தமூர்த்தி, அவரது மனைவி ஆர்த்தி மற்றும் ஆர்த்தியின் தந்தையும், முன்னாள் வங்கி முதுநிலை மேலாளருமான கலைமணி (70) ஆகியோர் மீது தருமபுரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸார் நேற்று முன்தினம் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில், தருமபுரியில் உள்ள ஆனந்தமூர்த்தி வீடு, வேலூர் சத்துவாச்சாரியில் ஆர்த்தி வசிக்கும் அரசு குடியிருப்பு, திருச்சியில் ஆர்த்தியின் தந்தை கலைமணி வீடு ஆகிய இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நேற்று காலை ஒரே நேரத்தில் சோதனையில் ஈடுபட்டனர்.

இதில், வேலூர் ஆர்த்தி வீட்டில் இருந்து, தருமபுரியில் வாங்கப்பட்ட ரூ.5 கோடி மதிப்பிலான 19 ஏக்கர் விவசாய நிலத்தின் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. திருச்சியில் உள்ள கலைமணி வீட்டில் நகைகள், பணம், சொத்து ஆவணங்களை போலீஸார் ஆய்வு செய்தனர்.

திருச்சி – புதுக்கோட்டை மாவட்ட எல்லைப் பகுதியில் சுமார் 70 ஏக்கர் நிலம் வாங்கியுள்ளதாக கிடைத்த தகவல் குறித்தும் விசாரித்தனர். எனினும், சோதனையில் எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை. தருமபுரி அடுத்த நார்த்தம்பட்டியில் உள்ள ஆர்த்தி வீட்டில் நேற்று காலை லஞ்ச ஒழிப்புதுறை போலீஸார் சோதனை நடத்தினர். இதில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் விசாரணை நடப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

 ஈரோடு மாநகராட்சி ஆணையராக பணியாற்றுபவர் சிவகுமார். சமீபத்தில் நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், தேர்தல் நடத்தும் அலுவலராக பணியாற்றினார். இவர் 2 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை பல்லாவரம் நகராட்சி ஆணையராக பணியாற்றி வந்தார். அப்போது பல்லாவரம் நகராட்சியில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக இவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டுள்ளது.

முன்னதாக, சென்னையில் ஆய்வு கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்றிருந்த அவருக்கு இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சென்னையில் இருந்து அவர் நேற்று மாலை ஈரோடு திரும்பினார். அதன்பிறகு, ஈரோடு பெரியார் நகரில் உள்ள அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை ஆய்வாளர் ஆறுமுகம் தலைமையிலான 5 பேர் கொண்ட குழுவினர் சோதனை நடத்தினர். சிவகுமாரிடமும் விசாரணை நடத்தினர். இந்த சோதனை நேற்று இரவு 8 மணி வரை நீடித்தது.

திருநெல்வேலி அருகே கங்கைகொண்டான் சிப்காட்டில் நிலம் எடுப்பு தாசில்தாராக பணிபுரிபவர் சந்திரன். இவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக, லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து பாளையங்கோட்டை கேடிசி நகரில் உள்ள அவரது வீடு, தூத்துக்குடி மடத்தூரில் உள்ள சந்திரனின் மகன் இசக்கிமுத்து வீடு, எட்டயபுரம் சாலையில் உள்ள அவரது நிறுவனம்ஆகிய இடங்களில் போலீஸார் சோதனை நடத்தினர். இதில் ரூ.30 லட்சத்துக்கும் அதிகமான ரொக்கம் மற்றும் ஆவணங்களை கைப்பற்றி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories