விருதுநகரில் ‘பிஎம் மித்ரா ஜவுளி பூங்கா’ துவக்கம்..

Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Published:

1199328 javuli poonga 09 - 2026

விருதுநகரில் ‘பிஎம் மித்ரா ஜவுளி பூங்கா’ – முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய மந்திரி பியூஷ்கோயல் தொடங்கி வைத்தனர்முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் மத்திய ஜவுளித்துறை மந்திரி பியூஷ்கோயல் முன்னிலையில் ஜவுளி பூங்காவுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்தியாவின் முதல் பிஎம் மித்ரா ஜவுளி பூங்கா விருதுநகரில் இ. குமாரலிங்கபுரம் கிராமத்தில் அமைய உள்ளது. இதற்கான தொடக்க விழா சென்னை அண்ணா நூற்றாண்டு நினைவு நூலக அரங்கில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய மந்திரி பியுஷ் கோயல் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் மத்திய ஜவுளித்துறை மந்திரி பியூஷ்கோயல் முன்னிலையில் ஜவுளிப்பூங்காவுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. மத்திய, மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன் 2 ஆயிரம் கோடியில் இந்த ஜவுளிப்பூங்கா அமைக்கப்படவுள்ளது.

சிப்காட்டில் உள்ள 1,052 ஏக்கர் நிலத்தில் அமையவுள்ள ஜவுளிப்பூங்காவால் 2 லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும். உலகளவில் இந்தியாவின் ஜவுளித் தொழில் உற்பத்தி, ஏற்றுமதியை அதிகரிக்கும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

ALSO READ:  கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

Related articles

Recent articles

spot_img