மழையால் பள்ளி திறப்பு தாமதமா?

school students going in rain - 2026
#image_title

மே மாத அக்னி நட்சத்திர வெயில் காலம் முடிந்து வழக்கம் போல் ஜூன் மாத முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படும். அதன்படி, வரும் ஜூன் 2 திங்கள் கிழமை பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை மூலம் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளை ஒட்டிய மாவட்டங்களில் கன மழையும் மிக கன மழையும் பெய்து வருகிறது. இதன் முன்னோட்டமாக இந்திய வானிலை ஆய்வு மையத்தால் ஆரஞ்ச் அலர்ட், ரெட் அலர்ட் என்று விடப்பட்டிருந்தது.

இதனால் பள்ளித் திறப்பு ஜூன் 9-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படும் என்று சமூகத் தளங்களில் செய்தி பரவியது. இதற்கு அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.

பள்ளிகள் வருகிற 2-ம் தேதி திறக்கப்பட இருப்பதாக மாநில அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில், கனமழை தொடர்வதால், பள்ளித் திறப்பு ஜூன் 9-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட இருப்பதாக சமூகவலைதளங்களில் செய்தி பரவி வருகிறது.

இதுகுறித்து தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் புதிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் ஜூன் 2-ம் தேதி பள்ளித் திறப்பு உறுதி, ஜூன் 9 திறப்பு என்பது வதந்தி என்று தகவல் சரிபார்ப்பகம் கூறியுள்ளது.

இதனிடையே, சென்னை மற்றும் மாநிலத்தின் முக்கிய நகரங்களில் இருந்து சிறப்பு பேருந்து சேவைகளை அரசுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. கோடைக்கால விடுமுறை முடிந்து ஊர்களுக்குத் திரும்ப வசதியாக, பல்வேறு இடங்களில் இருந்தும் வார இறுதி நாட்களான இன்றும், சனிக்கிழமை நாளை மற்றும், ஞாயிற்றுக் கிழமையிலும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அரசுப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories