வெள்ள பாதிப்புக்கு உள்ளானவர்கள் மீள பிரார்த்தனை நிகழ்ச்சி

Published:

சென்னை:
சேவா பாரதி – சபரிமலை ஐயப்ப சேவா சமாஜம் இணைந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காகப் பிரார்த்தனை நிகழ்ச்சி ஒன்றுக்கு ஞாயிறு ஏற்பாடு செய்துள்ளன.

தமிழகம் முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களிடையே பலவேறு தளங்களில் சேவையாற்றிவரும் சேவா பாரதி அவர்களுக்காக பிரார்த்தனை நிகழ்ச்சிகளையும் ஏற்பாடு செய்துவருகிறது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஏற்கனவே சபரிமலைக்கு மாலை அணிந்திருந்த பக்தர்களையும் குருசாமிகளையும் இணைத்து பாதிக்கப்பட்ட இடங்களில் சிறப்பு ஐயப்பப் பிராத்தனை ஏற்பாடாகியுள்ளது. சேவா பாரதியின் இந்தப் பணியில் சபரிமலை ஐயப்ப சேவா சமாஜத்துடன் தன்னை இணைத்துக் கொண்டுள்ளது.

இதன் அடிப்படையில் சென்னையில் மட்டும் அடுத்த ஒரு வாரத்திற்குள் 27 இடங்களில் சிறப்பு பிராத்தனைகள் ஏற்பாடாகியுள்ளன. இதன் அடிப்படையில் முதல்நிகழ்ச்சி ஞாயிறு 20.12.2015 இன்று மாலை புளியந்தோப்பில் நடைபெற உள்ளது.

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img