‘விஜய்’யின் சர்கார் செய்திகள்: விஜய் மீது சட்டப்படி நடவடிக்கை- அமைச்சர் சி.வி.சண்முகம்!

Published:

sddefault 8 - 2026

விஜய் நடித்துள்ள சர்க்கார் திரைப்படத்தில் அரசு வழங்கிய விலையில்லா பொருட்களை எரிப்பது போன்ற காட்சி அமைக்கப் பட்டுள்ளது அரசை அவமதிக்கும் செயல் என்று கூறியுள்ள தமிழக சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம், இந்த திரைப்படத்தை தயாரித்த தயாரிப்பாளர் மீதும் அதில் நடித்துள்ள விஜய் மீதும் திரையிட்ட திரை அரங்குகள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூரில் நடைபெற்ற தேர்தல் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு, பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம். அப்போது செய்தியாளர்கள் சர்கார் திரைப்படத்தில் இடம்பெற்ற காட்சிகள் குறித்து கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அவர், சர்கார் திரைப்படத்தை தயாரித்த தயாரிப்பாளர், நடிகர் விஜய் மற்றும் திரையிட்ட திரைஅரங்குகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும், சர்கார் திரைப்படத்தில் அரசு வழங்கிய விலையில்லா பொருட்களை எரிப்பது போன்ற காட்சி அமைக்கப்பட்டுள்ளது மக்களை வன்முறைக்கு தூண்டும் செயல் என்றார்.

ALSO READ:  மக்கள் மனங்களை ஈர்த்த ‘நீண்ட கால’ ஒரே பிரதமர்!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img