December 5, 2025, 3:40 PM
27.9 C
Chennai

கோவை- காரமடை ரங்கநாதர் மாசித் தேர் இன்று!

karamadai perumal ther - 2025
காரமடை மாசித் தேரோட்டம்: இன்று அதிகாலை ஸ்ரீதேவி பூதேவி சமேதராக தேரில் எழுந்தருளிய அரங்கநாதப் பெருமாள்

கோவை மாவட்டம் காரமடையில் புகழ் பெற்ற ரங்கநாத ஸ்வாமி திருக்கோவிலின் மாசித் தேரோட்டம் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த காரமடையில், புகழ்பெற்ற ரங்கநாத ஸ்வாமி திருக்கோயில் உள்ளது. இந்தக் கோவிலின் மாசிமக திருவிழா கடந்த 21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினசரி இரவு உத்ஸவர் அரங்கநாதப் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் அன்ன வாகனம், சிம்ம வாகனம், அனுமந்த வாகனங்களில் எழுந்தருளி, திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

கடந்த 24-ஆம் தேதி இரவு கருட வாகன சேவை நடைபெற்றது. நேற்று திருக்கல்யாண உத்ஸவம் அதிகாலை 5.30க்கு தொடங்கி நடைபெற்றது. இதை முன்னிட்டு, பெட்டதம்மன் மலை குகையில் இருந்து அம்மன் அரங்கநாயகி தாயார் அழைத்துவரப்பட்டார். கோவிலில் அரங்கநாயகி தாயார் சந்நிதி முன் அமைக்கப்பட்டிருந்த மணமேடையில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் மணக்கோலத்தில் அரங்கநாதப் பெருமாள் வீற்றிருந்தார்.

மஞ்சள் இடித்தல், கங்கணம் கட்டுதல், பூணூல் அணிவித்தல் உள்ளிட்ட வைபவங்களுக்குப் பின்னர் திருக்கல்யாணம் நடைபெற்றது. தொடர்ந்து நேற்று இரவு 8 மணிக்கு யானை வாகன உத்ஸவம் நடைபெற்றது.

காரமடை ரங்கநாதர் மாசித் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் சனிக் கிழமை இன்று மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. இதை முன்னிட்டு, இன்று காலை 7 மணிக்கு அரங்கநாதப் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக திருத்தேருக்கு எழுந்தருளினார். தேரோட்டத் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக, பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் பெருமளவில் காரமடைக்கு வந்துள்ளனர்.

karamadai ther - 2025
தயார் நிலையில்… காரமடை தேர்…

கடந்த ஆண்டு தேரோட்டத்தின்போது சமூக விரோதிகள், தேரின் மீது கற்கள் எறிந்து, மதரீதியான பதற்றத்தை ஏற்படுத்தினர். இது குறித்த வீடியோக்கள் சமூகத் தளங்களில் வைரலாகி, பதற்றத்தை ஏற்படுத்தியிருந்தன. இதனால் இந்த வருட தேரோட்ட நிகழ்வில் எவ்வித அசம்பாவிதங்களும் நடைபெறாமல் தடுக்கும் வகையில், தேரில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

தேரோட்டத்தை முன்னிட்டு கோவை – காரமடை, மேட்டுப்பாளையம் – காரமடை, அன்னூர்-காரமடை இடையே சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சத்தியமங்கலம், நம்பியூர், கோபி உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப் படுகின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories