போதை பொருட்களுக்கு பணம் பரிமாற்றம்: சேலத்தில் 74 வங்கி கணக்குகள் முடக்கம்..

1768936 bankd - 2026

குட்கா, போதை பொருட்களுக்கு பணம் பரிமாற்றம்: சேலத்தில் 74 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குட்கா, கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்வது குற்றமாகும். குட்கா மற்றும் போதை பாக்கு விற்பனை செய்தவர்களின் கடைகளுக்கு சீல் வைக்கும் நடவடிக்கைகளை உணவு பாதுகாப்புத்துறை மேற்கொண்டு வருகிறது.

தமிழகத்தில் குட்கா, பான் மசாலா மற்றும் புகையிலை பொருட்கள் தயாரித்தல், விநியோகித்தல், பதுக்கல் போன்றவற்றிற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. புகைப்பொருட்கள் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கக் கூடிய பொருட்கள் என்பதால் அவற்றை தமிழகத்தில் தயாரிக்கவும், விற்பனை செய்யவும் கடந்த 2011 -ம் ஆண்டு முதல் தடை விதிக்கப்பட்டது. இந்த சட்டத்தின் படி, போதைப்பொருட்களை, உற்பத்தி செய்வதோ, சேமித்து வைப்பதோ, எடுத்து செல்வதோ, விற்பனை செய்வதோ, பதுக்கி வைப்பதோ தண்டனைக்குரிய குற்றம் ஆகும்.

சேலத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, பான்பராக், போதை புகையிலை பொருட்கள் விற்பனை செய்யும் கடைக்காரர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர். தொடர்ந்து போதை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

போதை பொருள் விற்பவர்களை கண்டறிய 150 ரகசிய போலீசார் களம் இறக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஒவ்வொரு பள்ளி, கல்லூரிகளில் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மாணவர்களுக்கு போதை பொருட்கள் விற்பனை செய்யும் நபர்களை ரகசியமாக கண்காணித்து கைது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சேலம் மாநகரில் குட்கா மற்றும் போதை பாக்கு விற்பனை செய்தவர்களின் கடைகளுக்கு சீல் வைக்கும் நடவடிக்கைகளை உணவு பாதுகாப்புத்துறை மேற்கொண்டு வருகிறது. அதிகாரிகள் இதுவரை 87 கடைகளுக்கு சீல் வைத்து உள்ளனர். இதைத்தவிர மாநகர் பகுதியில் 35 பேரின் வங்கி கணக்குகளும், புறநகர் பகுதிகளில் 39 பேரின் வங்கி கணக்குகளும் வங்கி நிர்வாக ஒத்துழைப்புடன் முடக்கம் செய்யப்பட்டு இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது.

குட்கா, போதை பொருட்கள் கைமாறுதலுக்கான பணம், விற்பனை செய்ததில் கிடைத்த பணம் உள்ளிட்ட பரிமாற்றங்கள் இந்த கணக்குகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், குற்றத்திற்கு இந்த கணக்குகள் பயன்படுத்தப்பட்டதால் வங்கி கணக்குகள் முடக்கம் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றன. இது குறித்து போலீசார் கூறுகையில், குட்கா, கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்வது குற்றமாகும். வருமானம் வருகிறது என்பதற்காக பெட்டிக்கடைகளில் சிலர் விற்பனை செய்கின்றனர். கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் கடைகளுக்கு சீல் வைக்கப்படும். இதனால் வாழ்வாதாரமே பாதிக்கப்படும். எனவே சிறிய தொகைக்கு ஆசைப்பட்டு, வாழ்க்கைைய இழந்து விட வேண்டாம் என்றனர்.

images 2022 09 28T172346.617 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Topics

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் மீண்டும் வெடி விபத்து..

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து23பேர் உயிரிழந்த நிலையில் பட்டாசு...

Entertainment News

Popular Categories