அமெரிக்க கார் விபத்தில் இந்திய மருத்துவரின் மனைவி, மகள்கள் பலி..

doctor family - 2026

அமெரிக்காவில் திங்கள்கிழமை இரவு நிகழ்ந்த கார் விபத்தில், இந்திய மருத்துவரின் மனைவி மற்றும் இரண்டு மகள்கள் பலியாகிய சம்பவம் விஜயவாடா வில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விஜயவாடாவைச் சேர்ந்தவர் மருத்துவர் கோடாலி நாகேந்திர ஸ்ரீனிவாஸ். அமெரிக்காவில் குடும்பத்துடன் வசித்து வந்தார். வட அமெரிக்கா தெலுங்கு அமைப்பினரின் தலைவராகவும் உள்ளார்.

டெக்ஸாஸ் மாகாணத்தில் வால்லர் கௌண்டியில் நாகேந்திர ஸ்ரீனிவாஸ் மனைவி வாணிஸ்ரீ மற்றும் இரண்டு மகள்களும் பயணித்த சேடன் கார் மீது வேன் மோதியதில் மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே பலியானதாக முதற்கட்ட செய்திகள் தெரிவிக்கின்றன.

காரை ஓட்டிச் சென்ற வாணிஸ்ரீ, சாலைச் சந்திப்பு ஒன்றில் காரை நிறுத்தாமல் சென்றதே இந்த விபத்துக்குக் காரணமாகக் கூறப்படுகிறது. சம்பவ இடத்திலேயே வாணிஸ்ரீயும் மூத்த மகள் மேக்னாவும் உயிரிழந்ததாகவும் இளைய மகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பலியானதாகவும் கூறப்படுகிறது.
வேனை ஓட்டி வந்த ஓட்டுநரும், அவரது இரண்டு மகள்களும் விபத்தில் லேசான காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

நாகேந்திர ஸ்ரீனிவாஸ் கிருஷ்ணா மாவட்டம் குருமட்டள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் என்றும், குண்டூர் மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்றி 1995ஆம் ஆண்டு அமெரிக்கா சென்று உயர் கல்வி பயின்றி, ஹூஸ்டனிலேயே தனது குடும்பத்துடன் வசித்து வந்தார்.
மனைவி வாணிஸ்ரீயும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். மூத்த மகள் மேக்னா மருத்துவமும், இளைய மகள் பள்ளியிலும் பயின்று வந்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

ஜூலை 28 செவ்வாய் அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா, வேந்தரான தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தலைமையில் நடைபெற்றது.

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

ஜூலை 28 செவ்வாய் அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா, வேந்தரான தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தலைமையில் நடைபெற்றது.

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories