கோவையில் இன்று ஆய்வு மேற்கொண்ட என்ஐஏ அதிகாரிகள்..

889646 - 2026

 கோயம்புத்தூர் கார் வெடிப்பு தொடர்பாக சம்பவ இடத்தில் இன்று ஆய்வு மேற்கொண்ட என்ஐஏ அதிகாரிகள், சங்கமேஸ்வரர் கோயில் அர்ச்சகரிடம் விசாரணை நடத்தினர்.

கோவை கோட்டைமேடு பகுதியில் கடந்த 23-ம் தேதி அதிகாலை கார் வெடிப்பு சம்பவம் நடந்தது. இதில் காரை ஓட்டி வந்த கோட்டைமேட்டைச் சேர்ந்த ஜமேஷா முபின் உயிர் இழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக உக்கடம் போலீஸார் விசாரித்து ஆறு பேரை கைது செய்தனர்.

பின்னர் இந்த வழக்கு என்ஐஏ எனப்படும் தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது. என்ஐஏ அதிகாரிகள் டிஐஜி வந்தனா, எஸ்.பி ஸ்ரீஜித் தலைமையில் அதிகாரிகள் கோவையில் முகாமிட்டு இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களும் என்ஐஏ அதிகாரிகளிடம் தமிழக போலீசாரால் ஒப்படைக்கப்பட்டன.

இந்தச் சூழலில் எஸ்.பி ஸ்ரீஜித் தலைமையிலான என்ஐஏ அதிகாரிகள் கார் வெடிப்பு சம்பவம் நடந்த கோட்டைமேடு பகுதிக்கு இன்று காலை வந்தனர். கார் வெடிப்பு சம்பவம் நடந்த பகுதியை ஆய்வு செய்தனர்.சம்பவம் தொடர்பாக உள்ளூர் போலீஸார், என்ஐஏ அதிகாரிகளுக்கு விளக்கினர்.

விபத்து நடந்த இடம், அதனால் பாதிக்கப்பட்ட பகுதிகள் போன்றவற்றை என்.ஐ.ஏ அதிகாரிகள் பார்வையிட்டனர். விபத்தால் சேதமடைந்த கோயிலின் முன்பகுதியையும் அவர்கள் பார்வையிட்டனர்.

இதைத் தொடர்ந்து வழக்கின் புகார்தாரரான கோட்டை சங்கமேஸ்வரர் கோயில் பூசாரியிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. என்ஐஏ அதிகாரிகளின் ஆய்வு காரணமாக அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

Topics

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

Entertainment News

Popular Categories