May 20, 2025, 12:01 AM
29.2 C
Chennai

காவிரியை அடுத்து… ஓசூர் மெட்ரோ திட்டத்தில் தமிழகத்துக்கு காங்கிரஸ் செய்த துரோகம்!

BJP Narayanan Thiruppathi
#image_title

மீண்டும் தமிழர்களுக்கு, தமிழகத்திற்கு துரோகம் செய்யும் காங்கிரஸ் கட்சி என்று, ஓசூர் பொம்மசந்திர மெட்ரோ ரயில் திட்டம் குறித்துக் குறிப்பிட்டுள்ளார் பாஜக., துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி. இது குறித்து அவர் கூறியதாவது…

தென்னிந்தியாவின், முதல் மாநிலங்களுக்கிடையிலான மெட்ரோவிற்கான (பொம்மசந்திரா – ஓசூர்) ஆய்வு நடத்துவதற்கு மத்திய பாஜக அரசு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், சாத்தியக்கூறு ஆய்வைத் தயாரிப்பதற்காக சென்னை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் (சிஎம்ஆர்எல்) டெண்டரை வெளியிட்டது. 20.5 கி.மீ. நீளமுள்ள இந்த தடத்தில், 11.7 கி.மீ. கர்நாகவிலும், 8.8 கி.மீ நீளம் தமிழகத்திலும் உள்ளது.

கர்நாடக அரசு (பாஜக அரசு) 2022ல் மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற துறை வளர்ச்சி அமைச்சகத்திற்கு கடிதம் எழுதி, தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் அதிக சிரமமின்றி ஓசூர் மற்றும் பெங்களூரு இடையே பயணிக்க உதவும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து, அதற்கான சாத்தியக்கூறு ஆய்வை மேற்கொள்ள, தமிழக அரசு, சி.எம்.ஆர்.எல் நிறுவனத்திற்கு 75 லட்சம் ரூபாய் ஒதுக்கியது. இந்த திட்டத்தினால் ஓசூர் நகரம் வளர்ச்சியடைவதோடு, தொழில் முன்னேற்றம், வேலை வாய்ப்புகள், பொருளாதார முன்னேற்றம் ஏற்படும்.

ALSO READ:  எண்ணெய் உணவைக் குறையுங்கள்; ஆரோக்யம் பேணுங்கள்!

இந்நிலையில், இந்த திட்டத்தை தற்போதைய கர்நாடக காங்கிரஸ் அரசு கைவிட முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால், ஓசூர் நகரம் வளர்ந்து விடும் என்றும் இந்த திட்டம் பெங்களூரு நகருக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும் என்றும், மெட்ரோ இணைப்பினால் ஓசூர் நகரத்தில் தொழில் முன்னேற்றம் அதிகரிப்பதோடு, பெங்களூரு நகர தொழிலதிபர்கள் பலர் தங்கள் தொழிற்சாலைகளை ஓசூருக்கு மாற்றி கொண்டு சென்று விட வாய்ப்புள்ளது என்றும் கட்டமைப்பு திட்டங்களை விட தங்கள் மாநில நலனே முக்கியம் என்று கர்நாடக அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அவர்களின் மகனுமான பிரியாங்க் கார்கே அவர்கள் கூறியிருப்பது காங்கிரஸ் கட்சியின் தமிழகத்திற்கு எதிரான மனநிலையை வெளிக்காட்டுகிறது.

மத்திய அரசு அனுமதித்த இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழக அரசு தீவிரம் காட்டவேண்டும். காவிரி விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியை குற்றம் சொல்ல, விமர்சிக்க அஞ்சும் தி மு க, இந்த விவகாரத்தில் மௌனம் சாதித்தால் அது தமிழர்களுக்கு தி மு க இழைக்கும் மாபெரும் துரோகமே ஆகும்.

ALSO READ:  மாணவர்கள் படித்தால் திமுக.,வின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என ஸ்டாலின் அச்சப்படுகிறாரா?

கூட்டணி கட்சி ஆட்சி என்பதால் நீர் ஆதாரத்தில் சமரசம் செய்யும் தி மு க தற்போது தொழில் முன்னேற்றத்தில், வேலை வாய்ப்பில், வளர்ச்சியில் சுணக்கம் காட்டாமல் கர்நாடக காங்கிரஸ் அரசு மீது கடும் கண்டனத்தை தெரிவிக்க வேண்டும்.

இந்த திட்டத்தை கர்நாடக அரசு எதிர்த்தால், முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் காங்கிரஸ் கூட்டணியை முறித்து கொள்வோம் என்று சொல்ல தயாரா? தி மு கவிற்கு தமிழர் விரோத காங்கிரஸ் கூட்டணி அரசியல் ஆதாயம் முக்கியமா? தமிழக நலன் முக்கியமா என்று முதல்வர் ஸ்டாலின் அவர்களின் மௌனமோ, எதிர்ப்போ உணர்த்தும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 20- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ப. சிதம்பரமே பாராட்டும் அளவுக்கு… என்ன செய்தது பாஜக.,?

ப. சிதம்பரம் ஒரு நெடுநாள் காங்கிரஸ் தலைவர், அரசியல் புத்திசாலி, கெட்டிக்கார வக்கீல். அரசியலில் தரை தட்டாமல் பறப்பதும் உயர்வதும் மிதப்பதும் அவருக்குக் கைவந்த கலை.

சட்டவிரோத ஊடுருவல்காரர்களை வெளியேற்ற தமிழக அரசு நடவடிக்கை – உடனடித் தேவை!

இதை விசாரிக்கும் போலீசாருக்கு உள்ளூரில் வழக்கு விசாரணைகள், அன்றாட பணிகள் பாதிக்கப்படுகின்றன.

ஆப்ரேஷன் தீஸ்டர்பீல்ட்: இது என்ன புதுசா?!

சத்தமில்லாமல் இந்தியா ராணுவ ஒத்திகை ஒன்றை சிலிகுரி பகுதியில் நடத்தி அதிரடித்திருக்கிறது. கடந்த வாரத்தில் ஒரு நாள், பங்களாதேஷ்

மதுரை: 18 ஆண்டுகளுக்குப் பின் சிந்துபட்டி பெருமாள் கோயிலில் தேரோட்டம்!

இந்த தேர் திருவிழாவில் மதுரை, தேனி, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் பவனி தரிசனம் செய்தனர்.

Topics

பஞ்சாங்கம் மே 20- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ப. சிதம்பரமே பாராட்டும் அளவுக்கு… என்ன செய்தது பாஜக.,?

ப. சிதம்பரம் ஒரு நெடுநாள் காங்கிரஸ் தலைவர், அரசியல் புத்திசாலி, கெட்டிக்கார வக்கீல். அரசியலில் தரை தட்டாமல் பறப்பதும் உயர்வதும் மிதப்பதும் அவருக்குக் கைவந்த கலை.

சட்டவிரோத ஊடுருவல்காரர்களை வெளியேற்ற தமிழக அரசு நடவடிக்கை – உடனடித் தேவை!

இதை விசாரிக்கும் போலீசாருக்கு உள்ளூரில் வழக்கு விசாரணைகள், அன்றாட பணிகள் பாதிக்கப்படுகின்றன.

ஆப்ரேஷன் தீஸ்டர்பீல்ட்: இது என்ன புதுசா?!

சத்தமில்லாமல் இந்தியா ராணுவ ஒத்திகை ஒன்றை சிலிகுரி பகுதியில் நடத்தி அதிரடித்திருக்கிறது. கடந்த வாரத்தில் ஒரு நாள், பங்களாதேஷ்

மதுரை: 18 ஆண்டுகளுக்குப் பின் சிந்துபட்டி பெருமாள் கோயிலில் தேரோட்டம்!

இந்த தேர் திருவிழாவில் மதுரை, தேனி, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் பவனி தரிசனம் செய்தனர்.

கொலைக்கள குண்டுகளும் கிரிக்கெட் பந்துகளும் ஒன்றாக வீச முடியாது!

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக உள்ள மோஷின் நக்வி, ஆசிய கிரிக்கெட் கூட்டமைப்புக்கும் தலைவராக உள்ள நிலையில் இந்தியா இந்த முடிவை

அமெரிக்க புகைச்சலுக்கு அடுத்த காரணம் இதுதான்!

ஆப்கானிஸ்தானின் மிகப்பெரி ய ஏர்பேஸான பக்ராம் ஏர்பே ஸை கைப்பற்ற இந்திய அரசு தலிபான்களுடன் பேசிக்கொண்டு இருக்கிறது.

மீண்டும் தொடங்கிய ஐபிஎல்., 2025; அதே ‘டெம்போ’வில்!

புள்ளிப் பட்டியலில் தற்போது முதல் மூன்று இடங்களில் உள்ள குஜராத் (18), பெங்களூரு (17), பஞ்சாப் (17) ஆகிய அணிகள் பிளேஆஃப் சுற்றுக்குத் தகுதி

Entertainment News

Popular Categories