‘சாத்தான்’; மோகன் சி லாசரஸ் மீது 11 காவல் நிலையங்களில் வழக்கு!

MohanCLazarus 2 - 2026

நெல்லை: இந்துக் கோவில்களை சாத்தான்களின் இருப்பிடம் என்று பேசிய கிறிஸ்தவ மத போதகர் மோகன் சி லாசரஸ் மீது 11 காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது.

இந்து மதத்தினரையும், கோவில்களையும் இழிவு படுத்தும் விதமாகவும் மத மோதல்களை ஏற்படுத்தும் வகையிலும் பேசிய கிறிஸ்தவ மத போதகர் மோகன் சி லாசரஸ் மீது கோவை, கன்னியாகுமரி, தூத்துக்குடியில் உள்ள 11 காவல் நிலையங்களில் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மோகன் சி லாசரஸ், இந்து கோவில்கள் மற்றும் கடவுள்கள் குறித்துப் பேசிய வீடியோ காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்துக் கோவில்களை சாத்தான்களின் இருப்பிடமாக குறிப்பிட்டுப் பேசியுள்ள அவர், இந்துக்களின் மனம் புண்படும் வகையில் சாத்தானின் ஆதிக்கம் தமிழகத்தில் அதிக அளவில் இருப்பதாகவும், குறிப்பாக கும்பகோணத்தில் சாத்தான் அதிகளவில் கோபுரங்கள் அமைத்து குடி கொண்டிருப்பதாகவும், இத்தனை கோவில்கள் ஏன் என்றும் கேட்டிருந்தார்.

இதே போன்று காஞ்சி சங்கர மடத்திற்கு தாம் சென்றதையும் குறிப்பிட்டுள்ள அவர், அங்கு பட்டுச்சேலைகளையும், வேட்டிகளை எரித்து யாகம் செய்யப்படுவதாக சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டார்.

இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. இந்நிலையில் இந்துக்களின் மனம் புண்படும்படி பேசியதாக மோகன் சி லாசரஸ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கோவை மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி, கருமத்தப்பட்டி மற்றும் சூலூர் காவல்நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதேபோல் கன்னியாகுமரி தக்கலை, பூதப்பாண்டி, அஞ்சுகிராமம், கோட்டாறு, சுசீந்தரம், இட்டாமொழி காவல் நிலையங்களிலும், தூத்துக்குடி மாவட்டம் நாசரேத், குரும்பூர் ஆகிய காவல் நிலையங்களிலும் மோகன் சி லாரசஸ் மீது போலிசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கன்னியாகுமரியில் உள்ள இட்டமொழி, கோட்டார், தக்கலை உள்ளிட்ட காவல் நிலையங்களில் பிற மதங்களை அவதூறாகப் பேசுதல் என்ற பிரிவின் கீழும், தூத்துக்குடி மாவட்டம் நாசரேத், குரும்பூர் ஆகிய காவல் நிலையங்களில் பேச்சாலோ எழுத்தாலோ மத, ஜாதி, இன, மொழி விரோத உணர்ச்சிகளை தூண்டிவிடுதல், தனி மனித மதசுதந்திரத்திற்கு ஊறு விளைவிக்கும் விதமாக நடந்து கொள்ளுதல் ஆகிய பிரிவுகளின் கீழும் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
*
கோவையில் உள்ள சூலூர், கருமத்தப்பட்டி, பொள்ளாச்சி ஆகிய காவல் நிலையங்களில் இரு மதங்களுக்கு இடையே பிரச்சினையை ஏற்படுத்துதல், ஒரு மத நம்பிக்கையை சீர்குலைக்கும் வகையில் பேசுதல் ஆகிய பிரிவுகளின் கீழும் மோகன் சி லாசரஸ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

Topics

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

பஞ்சாங்கம் மே 12 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

“We are all one”, this realization of oneness is attained in the Varg : Atul Limaye

"We are all one", this realization of oneness is attained in the Varg – Atul LimayeJi - Karyakarta Vikas Varg-Dwitiya inaugurated in Nagpur

வெள்ளை அறிக்கை வெளியிடும் முன்… தேர்தல் அறிக்கையைப் பார்க்கவும்!

தமிழ் மக்கள் யாரை மன்னிக்கவில்லை என்றாலும் ஒரு நடிகனை கண்டிப்பாக மன்னிப்பார்கள்.. வாழ்த்துகள்!

Entertainment News

Popular Categories