சபரிமலை தீர்ப்பு… மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப் போவதில்லை: பினரயி விஜயன்!

binarayi vijayan - 2026

திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பருவ வயது உள்பட அனைத்து வயதுப் பெண்களையும் அனுமதிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்ததைத் தொடர்ந்து, கேரளத்தில் பெரும் எழுச்சி ஏற்பட்டுள்ளது. ஆனால், கேரள அரசு,  தீர்ப்பை எதிர்த்து மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப் போவதில்லை என கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.

சபரிமலையில் பெண்களை அனுமதிக்கலாம் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப் போவதாக திருவிதாங்கூர் தேவசம் போர்டு கூறி வந்தது. ஆனால், அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கைப்பொம்மையான தேவசம் போர்டு, அரசின் குரலை எதிரொலித்தாக வேண்டும் என்ற நிலையில், தற்போது அரசுத் தரப்பு, மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப் போவதில்லை என்று கூறியிருப்பதால்,  தேவசம் போர்டும் அத்தகையை முடிவையே அறிவிக்கக் கூடும்.

முதலில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்வோம் என்று கூறி வந்த தேவசம் போர்டு, பின்னர் தீர்ப்பை தாமதமின்றி நிறைவேற்ற உள்ளதாகக் கூறியது. இடையில், சீராய்வு மனு தாக்கல் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகக் கூறியது.

இந்நிலையில், உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து கேரளா முழுவதும் நேற்று போராட்டங்களும், பேரணிகளும் களை கட்டினர். தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு நடந்தது போன்ற ஒரு எழுச்சியை கேரளம் சந்திக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கூறினர். அதன் மூலம், உச்ச நீதிமன்றம் இந்தத் தீர்ப்பைத் திருத்தும் என்று நம்புவதாக அவர்கள் கூறினர்.

ALSO READ:  இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

இந்நிலையில்,  சபரிமலை பக்தர்கள் சார்பில் தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட உள்ளதாக பல இந்து அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.

இதனிடையே கேரள முதல்வர் பினராயி விஜயன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், சபரிமலை தீர்ப்பை எதிர்த்து கேரள அரசு மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப் போவதில்லை. சபரிமலை வரும் பெண் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் மற்றும் பாதுகாப்பு செய்து தரப்படும்.

கேரளா மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து பெண் போலீசார் வரவழைக்கப் பட்டு, சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படும். பெண் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும். சபரிமலை செல்ல விரும்பும் பெண்கள் தடுத்து நிறுத்தப்பட மாட்டார்கள் என்று கூறினார்.

கேரள முதல்வர் இவ்வாறு கூறியிருப்பதால், சபரிமலை தேவசம் போர்டும் இத்தகைய முடிவையே மேற்கொள்ளக் கூடும் என்பதால், தனி நபர்களும் இந்து இயக்கங்களுமே மறு சீராய்வு மனு தாக்கல் செய்வது குறித்து ஆலோசனை மேற்கொண்டிருக்கின்றன.

ALSO READ:  எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories