சபரிமலை தீர்ப்பு… மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப் போவதில்லை: பினரயி விஜயன்!

binarayi vijayan - 2026

திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பருவ வயது உள்பட அனைத்து வயதுப் பெண்களையும் அனுமதிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்ததைத் தொடர்ந்து, கேரளத்தில் பெரும் எழுச்சி ஏற்பட்டுள்ளது. ஆனால், கேரள அரசு,  தீர்ப்பை எதிர்த்து மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப் போவதில்லை என கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.

சபரிமலையில் பெண்களை அனுமதிக்கலாம் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப் போவதாக திருவிதாங்கூர் தேவசம் போர்டு கூறி வந்தது. ஆனால், அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கைப்பொம்மையான தேவசம் போர்டு, அரசின் குரலை எதிரொலித்தாக வேண்டும் என்ற நிலையில், தற்போது அரசுத் தரப்பு, மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப் போவதில்லை என்று கூறியிருப்பதால்,  தேவசம் போர்டும் அத்தகையை முடிவையே அறிவிக்கக் கூடும்.

முதலில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்வோம் என்று கூறி வந்த தேவசம் போர்டு, பின்னர் தீர்ப்பை தாமதமின்றி நிறைவேற்ற உள்ளதாகக் கூறியது. இடையில், சீராய்வு மனு தாக்கல் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகக் கூறியது.

இந்நிலையில், உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து கேரளா முழுவதும் நேற்று போராட்டங்களும், பேரணிகளும் களை கட்டினர். தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு நடந்தது போன்ற ஒரு எழுச்சியை கேரளம் சந்திக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கூறினர். அதன் மூலம், உச்ச நீதிமன்றம் இந்தத் தீர்ப்பைத் திருத்தும் என்று நம்புவதாக அவர்கள் கூறினர்.

இந்நிலையில்,  சபரிமலை பக்தர்கள் சார்பில் தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட உள்ளதாக பல இந்து அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.

இதனிடையே கேரள முதல்வர் பினராயி விஜயன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், சபரிமலை தீர்ப்பை எதிர்த்து கேரள அரசு மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப் போவதில்லை. சபரிமலை வரும் பெண் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் மற்றும் பாதுகாப்பு செய்து தரப்படும்.

கேரளா மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து பெண் போலீசார் வரவழைக்கப் பட்டு, சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படும். பெண் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும். சபரிமலை செல்ல விரும்பும் பெண்கள் தடுத்து நிறுத்தப்பட மாட்டார்கள் என்று கூறினார்.

கேரள முதல்வர் இவ்வாறு கூறியிருப்பதால், சபரிமலை தேவசம் போர்டும் இத்தகைய முடிவையே மேற்கொள்ளக் கூடும் என்பதால், தனி நபர்களும் இந்து இயக்கங்களுமே மறு சீராய்வு மனு தாக்கல் செய்வது குறித்து ஆலோசனை மேற்கொண்டிருக்கின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories