சபரிமலை தீர்ப்பு… மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப் போவதில்லை: பினரயி விஜயன்!

binarayi vijayan - 2026

திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பருவ வயது உள்பட அனைத்து வயதுப் பெண்களையும் அனுமதிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்ததைத் தொடர்ந்து, கேரளத்தில் பெரும் எழுச்சி ஏற்பட்டுள்ளது. ஆனால், கேரள அரசு,  தீர்ப்பை எதிர்த்து மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப் போவதில்லை என கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.

சபரிமலையில் பெண்களை அனுமதிக்கலாம் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப் போவதாக திருவிதாங்கூர் தேவசம் போர்டு கூறி வந்தது. ஆனால், அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கைப்பொம்மையான தேவசம் போர்டு, அரசின் குரலை எதிரொலித்தாக வேண்டும் என்ற நிலையில், தற்போது அரசுத் தரப்பு, மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப் போவதில்லை என்று கூறியிருப்பதால்,  தேவசம் போர்டும் அத்தகையை முடிவையே அறிவிக்கக் கூடும்.

முதலில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்வோம் என்று கூறி வந்த தேவசம் போர்டு, பின்னர் தீர்ப்பை தாமதமின்றி நிறைவேற்ற உள்ளதாகக் கூறியது. இடையில், சீராய்வு மனு தாக்கல் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகக் கூறியது.

இந்நிலையில், உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து கேரளா முழுவதும் நேற்று போராட்டங்களும், பேரணிகளும் களை கட்டினர். தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு நடந்தது போன்ற ஒரு எழுச்சியை கேரளம் சந்திக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கூறினர். அதன் மூலம், உச்ச நீதிமன்றம் இந்தத் தீர்ப்பைத் திருத்தும் என்று நம்புவதாக அவர்கள் கூறினர்.

இந்நிலையில்,  சபரிமலை பக்தர்கள் சார்பில் தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட உள்ளதாக பல இந்து அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.

இதனிடையே கேரள முதல்வர் பினராயி விஜயன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், சபரிமலை தீர்ப்பை எதிர்த்து கேரள அரசு மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப் போவதில்லை. சபரிமலை வரும் பெண் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் மற்றும் பாதுகாப்பு செய்து தரப்படும்.

கேரளா மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து பெண் போலீசார் வரவழைக்கப் பட்டு, சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படும். பெண் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும். சபரிமலை செல்ல விரும்பும் பெண்கள் தடுத்து நிறுத்தப்பட மாட்டார்கள் என்று கூறினார்.

கேரள முதல்வர் இவ்வாறு கூறியிருப்பதால், சபரிமலை தேவசம் போர்டும் இத்தகைய முடிவையே மேற்கொள்ளக் கூடும் என்பதால், தனி நபர்களும் இந்து இயக்கங்களுமே மறு சீராய்வு மனு தாக்கல் செய்வது குறித்து ஆலோசனை மேற்கொண்டிருக்கின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories