February 22, 2026, 2:41 AM
25.6 C
Chennai

கஜா புயலால் உயிரிழந்தவர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரண உதவி: முதல்வர் எடப்பாடி அறிவிப்பு

#கஜா புயலால் உயிரிழந்தவர் குடும்பத்துக்கு #ரூ.10 லட்சம் நிவாரண உதவி: #முதல்வர் #எடப்பாடி அறிவிப்பு

கஜா புயலால் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

சேலம் ஓமலூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ஏற்கெனவே அமைச்சர், அதிகாரிகள் மூலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகக் கூறினார். உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம், படுகாயம் அடைந்தோருக்கு தலா ரூ. 1 லட்சம், காயமடைந்தோருக்கு தலா 25 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என்றார்

மேலும், புயல் காரணமாக திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம் , தஞ்சாவூர், கடலூர் மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், நேற்று இரவு 2 மணி அளவில் 110 கி.மீ., வேகத்தில் காற்று வீசியது என்றும், புயல் மழை காரணமாக இது வரை 11 பேர் இறந்ததாக தகவல் கிடைத்துள்ளதாகவும் கூறினார்.

புயலால் ஏற்பட்டுள்ள சேதத்தை மதிப்பிட ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகக் கூறிய முதல்வர், புயல் வரும் முன்பாகவே தாழ்வான பகுதிகளில் வசித்தவர்கள், 421 முகாம்களில் 82 ஆயிரம் பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் அரசு கண்காணித்து வருகிறது. மாலை வரை புயல் தாக்கம் இருக்கும் என்பதால் சேத விவரத்தை முழுமையாக தெரிவிக்க இயலாது என்றார்.

புயலால் சேதம் அடைந்த மின் கம்பங்கள் மாற்றப் பட வேண்டும் என்றும், அதற்கு 7 ஆயிரம் மின் கம்பங்கள் மாற்றுவதற்கு தயாராக உள்ளது என்றார்.

மக்களை பாதுகாக்க ஆட்சியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அறிவுரையும், உத்தரவும் பிறப்பித்துள்ளோம். மீனவர்களின் உடமைகள் சேதமடைந்துள்ளதை கணக்கிட்டு நிவாரணம் வழங்கப்படும் என்று கூறினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Entertainment News

Popular Categories