கஜா புயலால் உயிரிழந்தவர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரண உதவி: முதல்வர் எடப்பாடி அறிவிப்பு

#கஜா புயலால் உயிரிழந்தவர் குடும்பத்துக்கு #ரூ.10 லட்சம் நிவாரண உதவி: #முதல்வர் #எடப்பாடி அறிவிப்பு

கஜா புயலால் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

சேலம் ஓமலூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ஏற்கெனவே அமைச்சர், அதிகாரிகள் மூலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகக் கூறினார். உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம், படுகாயம் அடைந்தோருக்கு தலா ரூ. 1 லட்சம், காயமடைந்தோருக்கு தலா 25 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என்றார்

மேலும், புயல் காரணமாக திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம் , தஞ்சாவூர், கடலூர் மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், நேற்று இரவு 2 மணி அளவில் 110 கி.மீ., வேகத்தில் காற்று வீசியது என்றும், புயல் மழை காரணமாக இது வரை 11 பேர் இறந்ததாக தகவல் கிடைத்துள்ளதாகவும் கூறினார்.

புயலால் ஏற்பட்டுள்ள சேதத்தை மதிப்பிட ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகக் கூறிய முதல்வர், புயல் வரும் முன்பாகவே தாழ்வான பகுதிகளில் வசித்தவர்கள், 421 முகாம்களில் 82 ஆயிரம் பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் அரசு கண்காணித்து வருகிறது. மாலை வரை புயல் தாக்கம் இருக்கும் என்பதால் சேத விவரத்தை முழுமையாக தெரிவிக்க இயலாது என்றார்.

புயலால் சேதம் அடைந்த மின் கம்பங்கள் மாற்றப் பட வேண்டும் என்றும், அதற்கு 7 ஆயிரம் மின் கம்பங்கள் மாற்றுவதற்கு தயாராக உள்ளது என்றார்.

மக்களை பாதுகாக்க ஆட்சியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அறிவுரையும், உத்தரவும் பிறப்பித்துள்ளோம். மீனவர்களின் உடமைகள் சேதமடைந்துள்ளதை கணக்கிட்டு நிவாரணம் வழங்கப்படும் என்று கூறினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories