கோவையில் ரூ.43 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சி பறிமுதல்!

Published:

coimbatore - 2026

கோவை: கோவை ஒண்டிப்புதூர் அருகே ரூ.43 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு டாலர்களை பறக்கும் படையினர் பிடித்து ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

கோவை ஓண்டிபுதூர் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்! அப்போது 43 லட்சம் மதிப்புடைய வெளிநாட்டு கரன்சி பறிமுதல் செய்யப்பட்டது.

கோவை சிங்காநல்லூர் உப்பிலிபாளையம் பகுதியில் எபிக்ஸ் கேஸ் வேர்ல்டு மணி என்ற நிறுவனம் செயல்பட்டு வருகின்றது.

இந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஜெயராம் என்ற ஊழியர், அமெரிக்கா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த பணத்துடன் விமானநிலையம் சென்று கொண்டு இருந்தார்.

Related articles

Recent articles

spot_img