கோவை கண்டெய்னர் லாரி வதந்தி; மக்கள் நீதி மய்ய நிர்வாகி மீது வழக்கு பதிவு

Published:

containerlorry vert - 2026

கண்டெய்னர் லாரியில் பணம் இருப்பதாக வதந்தி பரப்பிய மக்கள் நீதி மய்யம் கட்சியை சேர்ந்தவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது

கோவை டீத்தூள் கொண்டுசென்ற கண்டெயினர் லாரியில், பணம் இருப்பதாக வதந்தி பரப்பிய மக்கள் நீதி மய்யம் கட்சியை சேர்ந்தவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பொது மக்களிடையே தவறான தகவலைப் பரப்பியதன் காரணத்தினால், சட்டம் ஒழுங்கு பாதிக்கும் அளவில் செயல்பட்ட அவர் மீது 6 பிரிவுகளில் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவையில் இரு தினங்களுக்கு முன் கண்டெய்னர் லாரியில் கட்டுகட்டாக பணம் கடத்தப்பட்டு இருக்கிறது என்று வதந்தி பரப்பப்பட்டு அதை நம்பி நூற்றுக்கணக்கான மக்கள் கண்டெய்னர் லாரியில் டோல்கேட் வழிமறித்தனர் ஆனால் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் போலீசார் விரைந்து வந்து கண்டெய்னர் லாரியின் சீலை உடைத்து அதை சோதனையிட்டபோது அதில் டீ தூள் பாக்கெட்டுகள் இருப்பது தெரியவந்தது இதையடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது

ALSO READ:  ஸ்ரீ வைணவப் பேரறிஞர் ஏ.வி. ரங்காச்சாரி பரமபதித்தார்!

Related articles

Recent articles

spot_img